Tamil Community

வைகாசி மாத ராசிபலன்கள் !!


மாத ராசிபலன்
வைகாசி மாத ராசிபலன்கள் !!
மேஷம் :

பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். மேல் அதிகாரிகளால் சாதகமான சு ழல் அமையும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஞான போதனைகள் கிடைக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தாய் வழி ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். மனைகளில் புதிய இல்லங்களை அமைக்க முயற்சி மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியு ர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுரங்க பணியில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலைகளை தாங்களே முடிப்பது சிறப்பை தரும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும்.

வழிபாடு :

மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வருவது நன்மை தரும்.


ரிஷபம் :

தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். சுப செயலுக்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியு ர் சம்பந்தமான தொழில் முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். நிர்வாகத்தில் புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதை செயல்படுத்த முயல்வீர்கள். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொதுக்கூட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்க காலதாமதமாகும். இளைய உடன்பிறப்புகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் சேமிப்பு உயரும். கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

வழிபாடு :

ஆஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.

மிதுனம் :

வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகளில் இருந்த இடைஞ்சல்கள் நீங்கும். பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். விவாதங்களை தவிர்த்தல் நன்மை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மேன்மையான சு ழல் உண்டாகும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தர காலதாமதமாகும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். தனவரவு மத்திமமாகவே இருக்கும். கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே உறவுநிலை மேம்படும். பொதுச் செயல்களால் சேமிப்பு உயரும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சில் ஈடுபடுவோர் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு :

சிவபெருமானை ஞாயிற்றுக்கிழமை தோறும் வழிபாடு செய்வது சிறப்பைத் தரும்.

கடகம் :

எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்களினால் சுப விரயம் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். கூட்டாளிகளிடம் பொறுமையாக இருக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மன குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிட்டும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். நீர் வழி வியாபாரங்களால் சுமாரான தனவரவு உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

வழிபாடு :

பார்வதி தேவியை திங்கட்கிழமைதோறும் வழிபட்டு வர எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.

சிம்மம் :

பு ர்வீக சொத்துக்களினால் சுப விரயம் உண்டாகும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். புதுவித எண்ணங்களால் மன சஞ்சலம் உண்டாகும். வெளியு ர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். விவேகத்துடனான வாக்குவாதங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சு ழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபட்டு வர எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி :

பணியில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும். ஞான உபதேசம் பெறுவீர்கள். மூலிகைகளால் லாபம் உண்டாகும். தொழில் திறமையும், புத்திக்கூர்மையும் வெளிப்படும். நீர்வள மேலாண்மையால் மேன்மை உண்டாகும். பு ர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுவோருக்கு கீர்த்தி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சு ழல் அமையும். மனதில் ஏற்பட்ட ஐயங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குறுகிய தூர பயணங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். நிர்வாக துறையில் உள்ளோருக்கு பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அமைதியாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

வழிபாடு :

புதன்கிழமை தோறும் விஷ்ணுவை வழிபட்டு வருவது பிரச்சனைகளை நீக்கும்.

துலாம் :

தொழிலில் மேன்மையான புதிய சு ழல் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயணங்களால் லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தலைமைப் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் ரூடவடுபடுவீர்கள். அரசாங்க பணிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன் கிட்டும். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.

வழிபாடு :

அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.

விருச்சகம் :

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அணிகலன் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் விருந்தில் பங்கேற்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நற்பேறு பெறுவீர்கள். இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்வீர்கள். தந்தையின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். தர்ம ஸ்தாபனங்களில் பணிபுரிவோர் நிர்வாகத்தில் சில மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிபுரிபவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கால்நடைகளால் சில விரயச் செலவுகள் உண்டாகும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும்.

வழிபாடு :

பெருமாளை சனிக்கிழமைதோறும் வழிபட்டு வரவும்.

தனுசு :

கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். அந்நியர்களால் தொழிலில் விருத்தி உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியு ர் பயணங்களை மேற்கொள்வீர்கள். செய்யும் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது அவசியம். உடைமைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுய தொழிலில் மந்தமான லாபம் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். இளைய சசோதரர்களால் சுபச்செய்திகள் கிட்டும். பு ர்வீக சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்புகள் உயரும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான லாபம் உண்டாகும்.

வழிபாடு :

துர்க்கை அம்மனை வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் :

எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். சுபச்செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சு ழல் ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அந்நிய தேச பயணம் மேற்கொள்ள முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணம் ஈடேறும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். சுய தொழிலில் மேன்மையான சு ழல் ஏற்படும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

வழிபாடு :

பித்ருக்களை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

கும்பம் :

பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்பீர்கள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். பொதுச் செயல்களால் அலைச்சல் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வெளியு ர் வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவை தரும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழில் அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை, மகனுக்குமான உறவுகள் மேம்படும். தலைமை பதவிக்கான சாதகமான சு ழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

வழிபாடு :

நாக தேவர்கள் வழிபாடு ஏற்றங்களை தரும்.

மீனம் :

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிட்டும். மறுமணத்திற்கான வரன்கள் அமையும். மூத்த சகோதரர்களால் தனவரவு உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிட்டும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வெளியு ர் பயணங்களால் மேன்மையான சு ழல் அமையும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் செய்வீர்கள்.

வழிபாடு :

ராகவேந்திரரை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

Share:

TN Result 2018: Tamil Nadu +2 Result 2018 Declaring

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 16-ந் தேதி வெளியிடப்படுகின்றன. இம்முறை பிளஸ் டூ தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களையும் இணையத்தில் செய்தியாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கை:
நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.



இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறையினை தேர்வுத்துறை அறிமுகப்படுத்துகிறது.
இணையதள முகவரி: http://www.dge.tn.nic.in,
http://www.dge.tn.gov.in
பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம் :16.05.2018 மற்றும் 9.30 மணிமுதல்
ஊடகவியலாளர்கள் இவ்வசதியினைப் பயன்படுத்திக்கொண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று தேர்வு முடிவுகள் சார்ந்த புள்ளிவிவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்விற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமெனவும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share:

தமிழ் புத்தாண்டு தனுசு ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

எதிலும் வேகமும், துடிப்பும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே !

உங்கள் ராசி அதிபதியான வியாழ பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்பார்த்த காரியம் எண்ணிய விதத்தில் இனிதே நடைபெறும். வர்த்தகம் சம்பந்தமான துறைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அயல்நாட்டு பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். வாரிசுகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வியாழ பகவான் முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதால் பணிபுரியும் இடங்களில் மேன்மையான சு ழ்நிலை அமையும். பு ர்வீக சொத்துகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். புத்திர பாக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் நேரிடலாம்.
கேது பகவான் ராசிக்கு தன வீட்டில் இருப்பதால் புதிய நபர்களுடன் தேவையில்லாத விவாதங்கள் உண்டாக நேரிடும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். ராகு பகவான் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் மனதில் போராட்டகரமான சு ழ்நிலை அமையும். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சனி பகவான் ராசியிலே இருப்பதால் பணியில் அதிகமான பொறுப்புகள் உண்டாகும். மனதில் வைராக்கியத்துடன் எதையும் செய்து முடிப்பீர்கள். எதிலும் அலட்சியம் இல்லாமல் கவனத்துடன் செயல்படவும்.

மாணவர்களுக்கு :
மாணவர்கள் குருவின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது உத்தமம். உயர்நிலை பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சு ழல் உண்டாகும். புதுவித ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு எதிர்ப்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

பெண்களுக்கு :
பெண்கள் குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலாக்கள் சென்று வருவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இல்லத்தரசிகளுக்கு தாய் வீட்டு வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு மதிப்புகள் உயரும். அரசு அதிகாரிகளுக்கு சக பணியாளர்களின் ஆதரவு உண்டாகும். பொதுக்கூட்டங்களில் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தலைமை அதிகாரிகளிடம் அந்தஸ்து மேம்படும்.

விவசாயிகளுக்கு :
விவசாயிகள் புதுமையான முறைகளை கையாளுவதன் மூலம் லாபம் அடைவார்கள். தண்ணீர் குறைந்த அளவு தேவைப்படும் பயிர்களால் லாபம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு பலவிதமான போராட்டங்களுக்கு பின்பே சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிரிகளால் வாய்ப்புகள் தவறும் நிலை நேரிடலாம்.

வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு சாதகமான லாபங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் எதிர்ப்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலையாட்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் எதிர்ப்பார்த்த தனவரவுகள் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.

பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை துளசி மாலையிட்டு வழிபட்டு வர தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
Share:

தமிழ் புத்தாண்டு கும்ப ராசி ராசிபலன்கள் 2018


தமிழ் புத்தாண்டு : விளம்பி வருட ராசிபலன்கள் -
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018


பலவிதமான திறமைகளையும், பொறுமையும், நிதானமும் உடைய கும்ப ராசி அன்பர்களே !

உங்கள் ராசி அதிபதியான சனி பகவான் பதினென்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இருப்பதால் புதிய மனை மற்றும் வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு மற்றும் மதிப்புகள் உயரும். பொது நலச் செயல்களில் ஈடுபடுவோர்க்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். வாரிசுகளின் திருமணத்தை சிறப்பான முறையில் செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் புதிய தொழில் தொடங்குவீர்கள். மூத்த சகோதரர்களிடம் அமைதியுடன் இருக்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதரவு உண்டாகும்.

குரு பகவான் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் பெரிய விஷயங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். பு ர்வீக சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி சுமூகமான முடிவு உண்டாகும். திருத்தல வழிபாடு தொடர்பான பொறுப்புகள் வந்து சேரும்.

ராகு பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் தொழில் வகையில் உண்டாகும் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் நிதானத்துடன் செயல்படவும். பணம் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நேரிடலாம். கேது பகவான் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருப்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. பிரயாணங்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டிய சு ழல் உண்டாகும்.
மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் எண்ணிய முன்னேற்றமும், நல்ல மதிப்பெண்களும் கிடைக்கும். தொழிற்கல்வி சம்மந்தமான படிப்புகளில் புதிய முயற்சிகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு இவ்வருடம் சுபிட்சமான காலமாக அமையும். எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் உண்டாகும். நிலபுலன்கள் சேர்க்கை உண்டாகும். நீர் வள மேலாண்மைக்கான பணிகளால் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகள் பிடிவாத குணத்தை தவிர்த்து கனிவுடன் நடந்து கொண்டால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மக்களிடையே நல்ல பெயர்கள் அமைவதற்கான சு ழல் உண்டாகும்.
பெண்களுக்கு :

பெண்களுக்கு விரும்பிய எண்ணங்கள் யாவும் இனிதே நடைபெறும். தோழிகளின் அறிமுகத்தால் புதுவிதமான ஆதரவு உண்டாகும். பணியில் உள்ள பெண்களுக்கு பணி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :

வியாபாரிகளுக்கு தொழிலில் முன்னேற்றமான சு ழல் உண்டாகும். புதிய பங்குதாரர்களின் அறிமுகம் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆதரவால் லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான இடமாற்றம் நேரிடலாம்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலைகள் உண்டாகும். வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். எனவே, ஆடம்பர செலவுகளையும், தேவையற்ற செலவுகளையும் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம் :

சு ரிய உதயத்திற்கும், அஸ்தமனத்திற்கும் முன் பின் நான்கு நிமிடங்களில் கால பைரவரை வழிபாடு செய்வது சிறந்த முன்னேற்றத்தை அளிக்கும்.
Share:

தமிழ் புத்தாண்டு மீன ராசி ராசிபலன்கள் 2018

விளம்பி வருட ராசிபலன்கள் !

பிறரை நல்வழிப்படுத்துவதிலும், எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே !

உங்கள் ராசி அதிபதியான குருபகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருப்பதால் சகலவிதமான திறமைகளும் மேம்படும். தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் உண்டாகும். பெண் ஊழியர்களிடம் சற்று கவனம் வேண்டும். புதுவிதமான துறையை சார்ந்த கல்விகள் மேம்படும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனைவி மூலம் திடீர் தனயோகம் உண்டாகும். சனி பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருப்பதால் பிறரை எதிர்பார்க்காமல் பணிகளை செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பிரபல யோகமும் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தன உதவிகள் உண்டாகும். வாக்கு வன்மை உண்டாகும்.
ராகு பகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் பல சாதனைகளை செய்வீர்கள். இவர்கள் மனோபலம் மிக்கவர்கள். பூர்வீக சொத்துகளால் விரையச் செலவுகள் ஏற்படும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கேது பகவான் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருப்பதால் நட்பு வட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தன வரவுகள் உண்டாகும். ஆனால், சேமிப்பில் நாட்டம் இருக்காது. சுகபோகங்களை விரும்பியபடி அனுபவித்து வாழ்வீர்கள்.

மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்கள் பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவார்கள். எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள்.

பெண்களுக்கு :
பெண்களுக்கு குடும்பத்தில் சிறப்பான நிலை உண்டாகும். பணியில் உள்ள பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவால் மேன்மை உண்டாகும். திறமைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு :
விவசாயிகள் பலவிதமான புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் எதிர்பார்த்த லாபம் பெறுவார்கள். விளைச்சலும் எண்ணியதை விட சிறப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நிதானத்துடன் செயல்பட்டால் பெரிய திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் சில நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்படும். எனவே, உபயோகமற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.

வழிபாடு :
வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மையை தரும்.

Share:

தமிழ் புத்தாண்டு மேஷ ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு : 
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

வேகம் மிகுந்த மேஷ ராசி அன்பர்களே !
உங்களின் ராசிநாதன் செவ்வாய் பகவான் ஒன்பதில் திரிகோண பலம் பெற்று சிறப்புடன் இருக்கிறார். இருப்பினும் தனது பகை கிரகமான சனியுடன் இணைவதால் செயல்பாடுகளில் மந்தப்போக்கு ஏற்படும். பல போராட்டங்களுக்கு பின் நினைத்த காரியம் வெற்றியைத் தரும். மனம் தளராமல் முயற்சியை மேற்கொள்வதால் அனுகூலம் பெறலாம். தங்களின் ராசிக்கும் முயற்சி பாவகத்திற்கும் குரு பார்வை இருப்பதால் முயற்சிக்கேற்ற வெற்றியை அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் வீடு, மனை மற்றும் வாகன யோகம் கைகூடும். தொழில் துறையில் பல அறிமுகமில்லா புதிய நுணுக்கங்களை கையாள்வீர்கள். வியாழ பகவான், ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் கூட்டு தொழிலில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். கூட்டாளியால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண வரன் தேடுவோருக்கு திருமண வரன்கள் கைகூடும். மனைவி வழியில் முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழியில் வருத்தங்கள் நேரிடலாம். அடுத்தவர்கள் பணிகளில் தலையிடாமல் இருப்பது நற்பெயருக்கு கலங்கம் உண்டாகாது. தொழில் முயற்சியில் காலதாமதம் ஏற்படும். எதிர்பார்த்த லாபத்தை விட மத்திமமான இலாபம் கிடைக்கும்.


பெண்களுக்கு :
திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். திருமணமான பெண்கள் தந்தை வழி உறவினர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். இல்லத்தரசிகளுக்கு புகுந்த வீட்டில் மதிப்புக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அரசியல் :
அரசியல் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்களுக்கு சற்று நிதான போக்கு அவசியம் தேவை. ஏனெனில், மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆன்மிக நண்பர்களின் ஆலோசனைகள் ஆதரவாக இருக்கும்.

விவசாயம் :
விவசாயத்தில் புதிய புரட்சி மற்றும் யுக்திகளை கையாழுவதன் மூலம் லாபத்தை அடையலாம். நீர் பிடிப்புகளை நம்பி இருக்காமல் மாற்று முறையை கையாள்வது நன்மையைத் தரும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு தங்களின் திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கான அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்க பெறுவார்கள். கலை சம்பந்தமான துறையில் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் வர காலதாமதமாகும். புதிய தொழில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் தேக்கநிலை காணப்படும்.
பொருளாதாரம் :
பொருளாதார வரவுகள் மத்திமமாக இருக்கும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

பரிகாரம் :
சென்னிமலை முருகனை செவ்வரளி மலர்களை கொண்டு வழிபட்டு வந்தால் சுபிட்சம் உண்டாகும்.

Share:

தமிழ் புத்தாண்டு சிம்ம ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு : 
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

அஞ்சா நெஞ்சமும், தைரியமும் உடைய சிம்ம ராசி அன்பர்களே !
உங்கள் ராசி அதிபதியான சு ரியன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் உழைப்புக்கு முன்னுரிமை கொடுத்து அதன்மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். பெரியோர்களின் ஆதரவால் தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடல் சார்ந்த பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். குரு பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து முயற்சிக்கேற்ற வெற்றியை கொடுப்பார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பில் மற்றும் சோதனையில் ஈடுபடுவோருக்கு பாராட்டுக்கள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். புத்திரர்களின் ஆசைகளை பு ர்த்தி செய்வீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.
ராகு பகவான் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருப்பதால் கேளிக்கைகளில் விருப்பம் உண்டாகும். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலாவுக்கு செல்லும்போது எச்சரிக்கை வேண்டும். புதுவிதமான பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். கேது பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் எதிரிகளை வெல்லக்கூடிய தைரியம் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். ஆன்மிக பயணங்களால் மனக்குழப்பங்களில் இருந்து தௌpவு பிறக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவால் லாபம் உண்டாகும். நிர்வாகம் மற்றும் வேலையாட்கள் மாற்றம் போன்ற செயல்களில் நிதானத்துடன் செயல்படவும். கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவால் தாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். 

மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த சில தடைகள் நீங்கி ஆதரவான சு ழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் குருவின் ஆலோசனைகளால் நல்ல மதிப்பெண் மற்றும் பாராட்டுக்களை பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் உண்டாகும். சேமிப்பில் உள்ள தானியங்களுக்கு நல்ல விலையும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு பிரபலமானவர்களின் நட்புகளால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். கவிதை மற்றும் கதையில் புதுவிதமான ரசனைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு தலைமை பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான பொறுப்புகளில் உள்ளவர்கள் பாராட்டப்படுவீர்கள். அரசு அதிகாரிகள், கௌரவ பதவிகளால் புகழ் பெறுவார்கள்.

பெண்களுக்கு :
பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து திருமண வரன்கள் அமையும்.

வழிபாடு :
ஞாயிறுதோறும் சிவாலய வழிபாடு மேற்கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியை தரும். தொழிலில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.
Share:

தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

கோபமும், வேகமும் மற்றும் நியாயத்திற்காக போராடும் குணமும் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே !
உங்கள் ராசிநாதன் செவ்வாய் பணபர ஸ்தானத்தில் இருக்கிறார். இருப்பினும் தனது பகை கிரகமான சனியுடன் இணைவதால் எதிர்பார்த்த தன வரவுகள் காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய வீடுகள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சகோதர வகையில் ஆதரவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சுகளால் பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் பிறக்கும்.
குரு பகவான் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் எதிர்ப்பாராத சுபசெய்திகளால் திடீர் செலவுகள் நேரிடலாம். விரும்பிய நபரை மணம் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சனி பகவான் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் பொது சேவையில் ஈடுபடுவோர்க்கு பிறரால் அவச்சொற்கள் ஏற்படலாம். அஞ்ஞான எண்ணங்கள் கொண்ட நபர்களின் நட்புகளை தவிர்த்தல் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.
ராகு பகவான் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் பணியில் மேன்மை உண்டாகும். பு ர்வீக சொத்துகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். கேது பகவான் மூன்றாம் வீட்டில் இருப்பதால் ஆன்மிக ஞானத்தில் விருப்பம் அதிகரிக்கும். கோபமான பேச்சுகளை தவிர்த்து கனிவாக பேசுவது நன்மையை உண்டாக்கும்.

மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்துடன் படிக்கவும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனம் வேண்டும். குருவின் ஆலோசனைகள் கேட்டு அதன்படி நடப்பது சிறப்பான பலனை அளிக்கும்.

பெண்களுக்கு :
திருமணமான பெண்களுக்கு சந்தான பாக்கியத்தால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் வீட்டு சொந்தங்களால் ஆதரவும், லாபமும் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மறைமுக எதிரிகளால் மனக்கசப்புகள் நேரிடலாம். கொடுக்கல் வாங்கலில் எண்ணிய லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசியல் நுணுக்கங்களால் மேன்மை அடைவீர்கள். அரசு அதிகாரிகளுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். தற்பெருமையை தவிர்த்தல் சுபமாகும்.

விவசாயிகளுக்கு :
விவசாயத்தில் குறைந்த முதலீடு கொண்ட பயிர்களை விளைவிப்பது நல்லது. கிடங்கில் உள்ள தானியங்களை சேமிப்பதை தவிர்த்து நல்ல விலை வரும்போது விற்பது உத்தமம் ஆகும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்கள் தங்களின் கற்பனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிறந்த படைப்புகள் இருப்பினும் அதற்கான அங்கீகாரம் கிடைக்க கால தாமதமாகும். 

வியாபாரிகளுக்கு :
வியாபாரிகள் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்லவும். புதிய வாடிக்கையாளர்களுடன் ஆதரவு உண்டாகும். இணையதள வியாபாரத்தில் நிதானம் வேண்டும். பொருட்களை தேங்க விடாமல் விற்று வருவது மத்திமமான லாபம் உண்டாகும்.

பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் இழுபறிகள் இருப்பின் பற்றுகள் மேம்படும். பணம் கொடுக்கல் மற்றும் வாங்கல் சம்பந்தமான வாக்குறுதிகளை தவிர்த்தல் நல்லது.

வழிபாடு :
எண்ணிய காரியங்களில் வெற்றி பெற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபாடு செய்து வரவும்.
Share:

தமிழ் புத்தாண்டு மிதுன ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

பலவிதமான சிந்தனைகளை ஒரே நேரத்தில் நிலை நிறுத்தி செய்யக்கூடிய வல்லமை வாய்ந்த மிதுன ராசி அன்பர்களே !
உங்களின் ராசிநாதன் புதன் பகவான் பத்தாம் இடத்தில் கேந்திர பலத்துடன் சிறப்புடன் இருக்கிறார். எனவே, சுய தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். எடுத்த காரியத்தில் சரியான வழிகாட்டுதல் மூலம் வெற்றி உண்டாகும். இழுபறியான வேலைகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். குருபகவானின் பார்வை ராசியில் இருப்பதால் எண்ணங்களில் தௌpவு பிறக்கும். வெளியு ர் சம்பந்தமான பயணங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் மற்றும் கடன் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த இடர்பாடுகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். புத்திரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சந்ததி வளம் சிறப்பாக அமையும்.
வயிறு சம்பந்தான பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். வேலையாட்களால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சனி பகவான் ஏழாம் வீட்டில் இருப்பதால் தொழில் வகையான உழைப்பு அதிகரிக்கும். மனதில் இனம்புரியாத குழப்பங்களினால் மந்தமான சு ழல் உண்டாகும். திருமண வரன்கள் முயற்சிக்கு ஏற்ப வசதியான இடங்களில் அமையும். கேது பகவான் ராசிக்கு 8ம் இடத்தில் இருப்பதால் ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். பயணங்களில் கவனம் வேண்டும். ராகு பகவான் இராசிக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் கல்வியில் மந்தமான போக்கு உண்டாகும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றி மறையும். குடும்ப பிரச்சனைகளில் அந்நியர்களை தவிர்த்து பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவும். எதிர்பாராத தன வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான நிலை உண்டாகும். ஆசான்களின் உதவிகளுடன் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதிய நண்பர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

பெண்களுக்கு :
பெண்களுக்கு பணியில் மேன்மையான சு ழல் உண்டாகும். பணி நிமிர்த்தமான பொறுப்புகள் மற்றும் அலைச்சல்கள் உண்டாகலாம். சக தோழிகளிடம் அமைதியுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளவும். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் சாதகமான சு ழல் உண்டாகும். தொண்டர்கள் மூலம் ஆதரவான நிலை உண்டாகும். அரசு அதிகாரிகளுக்கு ஆதாயமான பலன்கள் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு இன்பம் பயக்கும் வருடமாக அமையும். தடைபட்டு போன வாய்ப்புகள் கைகூடி வரும். எதிர்பாராத சுபச் செய்திகள் உண்டாகும்.

விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு மனை விவகாரங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். விவசாய பணியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு இந்த வருடம் சுபிட்சமான வருடம் ஆகும். வியாபாரத்தில் தங்களின் நிலைமைக்கு ஏற்ப கொடுக்கல் மற்றும் வாங்கலை வைத்துக் கொள்ளவும். கணக்கு வழக்குகளில் கவனம் வேண்டும்.

பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் சிறப்பான நிலை உண்டாகும். கிடைக்கும் லாபங்களை சிறப்பான முறையில் சேமித்து வைத்துக் கொள்வது நன்று. செலவுகள் வரவுக்குள் இருப்பதை கவனித்து கொள்ள வேண்டும்.


பரிகாரம் :
புதன் மற்றும் சனிக்கிழமை தோறும் துளசி மாலைகளை கொண்டு பெருமாளை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.
Share:

தமிழ் புத்தாண்டு துலாம் ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு : விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

பிறரை எடை போடுவதிலும், சு ழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியான துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதனான சுக்கிரன் கேந்திர ஸ்தானத்தில் சிறப்பான நிலையில் அமர்ந்திருக்கிறார். திருமண வரன்கள் கைகூடி வரும். பெண்களால் எதிர்ப்பார்த்த உதவிகள் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தௌpவு பிறக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைபேறு உண்டாகும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் விரைவில் முடிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது.
கேது பகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் கல்விக்கு மீறிய புதுவிதமான அனுபவம் உண்டாகும். நுட்பமான வேலைகள் மூலம் சிறப்பான மதிப்புகளை பெறுவீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
ராகு பகவான் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணியில் உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். காவல் துறை மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் முயற்சி செய்வோருக்கு சுபச் செய்திகள் உண்டாகும்.
சனி பகவான் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதற்கும் கலங்காமல் துணிவுடன் செயலாற்றுவீர்கள். அவசர செயல்பாடுகளால் சிலரின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே, சிந்தித்து செயல்படுவது நன்மையை தரும்.

மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள், நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். உயர் கல்வி பயிலும் மாணவர்கள், மனதில் எழும் ஐயங்களை ஆசிரியரின் துணையுடன் புரிந்து படிப்பதால் மேன்மை உண்டாகும்.

பெண்களுக்கு :
பெண்கள் பணிபுரியும் இடங்களில் சாதகமான சு ழல் உண்டாகும். இல்லத்தரசிகள் தந்தை வழி உறவினர்களிடம் நிதானமாக நடந்து கொள்வது நன்மையை தரும். 

அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு பொது மக்களுடனான உறவு நிலை மேம்படும். அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சு ழல்கள் உண்டாகும். பெண் ஊழியர்களிடம் நிதான போக்கை கையாள்வது சிறப்பை உண்டாக்கும்.

விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சனையால் தடைபட்டு வந்த வேலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்ப்பார்த்த விளைச்சலால் மகிழ்ச்சி அடைவீர்கள். மூலிகை பயிர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் சாதகமான நிலை உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு மேன்மையான சு ழல் உண்டாகும். புதிய வியு கங்களை கையாளுவதினால் எதிரிகளை பலம் இழக்க செய்வீர்கள். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது சிறப்பான பலனை தரும்.

பொருளாதாரம் :
எதிர்ப்பார்த்த திடீர் யோகத்தால் நிலுவையில் இருந்த தன வரவுகள் கிடைக்கும். அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உதவும்போது கவனம் தேவை.

பரிகாரம் :
புதன்கிழமை தோறும் நறுமண மலர்களை கொண்டு இராமரை வழிபாடு செய்தால் முன்னேற்றம் உண்டாகும்.
Share:

தமிழ் புத்தாண்டு கன்னி ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு : விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

பழகுவதற்கு இனிமையானவரும், சிரித்த முகத்துடன் எல்லோரையும் அனுசரிப்பவரும், கருணை மற்றும் பாச உணர்வு கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் ராசி அதிபதியான புதன் ஏழாம் இடத்தில் கேந்திர பலத்துடன் சிறப்பான நிலையில் இருப்பதால் தொழிலில் நுட்ப அறிவு மேம்படும். புதிய ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து திருமண வரன்கள் அமையும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வீடு மற்றும் வாகன வசதிகள் உண்டாகும்.
குரு பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருப்பதால் கல்வி கலைகளில் நல்ல தேர்ச்சி பெறுவீர்கள். சமயோசிதமான பேச்சுகளால் தன லாபம் உண்டாகும். பண வரவுகள் இருப்பினும் சேமிப்பில் நாட்டம் உண்டாகாது. அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். சனி பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் உறவுகள் இடத்தில் மனக்கசப்புகள் நேரிடலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் சிறப்பான சு ழல் உண்டாகும். பு ர்வீகத்தில் சிற்சில பிரச்சனைகள் தோன்றி மறையும்.
ராகு பகவான் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருப்பதால் வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். பலருக்கு வழிய சென்று வேலை செய்வீர்கள். நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. கேது பகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் அவசர செயல்களால் அவப்பெயர்கள் நேரிடலாம். புத்திரர்கள் பற்றிய கவலைகள் மேலோங்கும். பலவிதமான கலைகளில் தேர்ச்சி உண்டாகும். மெய்ஞானம், தியானம் போன்றவற்றில் நாட்டம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு :
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேல்நிலை கல்வி சம்பந்தமான படிப்புகளில் கவனத்துடன் தேர்ந்தெடுக்கவும்.

வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் எண்ணிய லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் புதிய கிளைகளை ஆரம்பிக்கலாம். வியாபார ஸ்தலங்களில் மாற்றம் உண்டாகலாம். கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் அமோகமாக இருக்கும். புதிய நிலபுலன் சேர்க்கை உண்டாகலாம்.

கலைஞர்களுக்கு :
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். செல்வாக்கும், மதிப்பும் உயரும்.

பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் இருந்து வந்த இழுபறி நீங்கி தனவரவு உண்டாகும். பழைய நிலுவை தொகைகள் கிடைப்பதற்கான சு ழல் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அரசு அதிகாரிகள் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். அதிகார பேச்சுகளை குறைத்து கொள்வது சிறப்பு.

பெண்களுக்கு :
பெண்களுக்கு குடும்பத்தில் மனக்கசப்புகள் உண்டாகும். நிதானத்துடன் அதை கையாண்டு அரவணைப்பீர்கள். உறவுகளுக்கு இடையே மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தொழில் சம்பந்தமான பிரயாணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

பரிகாரம் :
புதன்கிழமைதோறும் கிருஷ்ணருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
Share:

தமிழ் புத்தாண்டு கடக ராசி ராசிபலன்கள் - 2018

தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018


சு ழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே !

உங்கள் ராசிநாதனான சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து திரிகோண பலம் பெற்றிருப்பதால் புதிய ஆடை மற்றும் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நலம் பெறுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான யோகம் உண்டாகும். தந்தையின் தொழில் சம்பந்தமான விஷயங்களில் அனுகூலம் அடைவீர்கள். புண்ணிய காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். செய்யும் தொழிலில் செல்வாக்கு மற்றும் மதிப்புகள் உயரும். திருத்தல பணிகளுக்கு தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

குரு பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாயாருக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டங்களை வகுப்பதிலும், செயலாற்றுவதிலும் பாராட்டு பெறுவீர்கள். சனி பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் வாயு தொல்லை, வயிறு மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் அடிக்கடி தொல்லை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். இராகு பகவான் ராசியிலேயே இருப்பதால் தேவையில்லாத செயல்களுக்கு கோபப்படுவதை தவிர்க்கவும். புதிய செயல்களால் வருமான வாய்ப்பு மேம்படும். கேது பகவான் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அனைவரிடமும் நிதானத்தையும், அமைதியையும் கடைபிடிக்கவும்.
மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சு ழல் உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வியில் ஈடுபடுவோருக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
பெண்களுக்கு :

பெண்களுக்கு பொறுப்புகள் மற்றும் மதிப்புகள் உயரும். உத்தியோகத்திற்கு செல்லும் பெண்களுக்கு பணியில் சாதகமான சு ழலும் அதேசமயம் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சு ழல் அமையும். பொது மக்களுக்கிடையே பாராட்டுகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் விரைவில் நடைபெறும்.
வியாபாரிகளுக்கு :

வியாபாரிகளுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முனைய நினைப்பவருக்கு எதிர்பார்த்த பங்குதாரர்கள் அமைவார்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்பார்த்த விளைச்சலால் லாபமும் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனைத்திறன் மேம்படும். இலக்கியவாதிகளுக்கு சிறப்பான அந்தஸ்து கிடைக்கும்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல் நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும். இணையதள சம்பந்தமான வர்த்தக முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.
பரிகாரம் :

வியாழக்கிழமைகளில் கால பைரவரை வழிபட்டு வர எதிரிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

Share:

தமிழ் புத்தாண்டு மகர ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு : 
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

சு ழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட மகர ராசி அன்பர்களே !



உங்கள் ராசிநாதன் சனி பகவான் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் செயல்திறனில் சில தடங்கல்கள் உண்டாகலாம். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் வேண்டும். கடின உழைப்பால் உடல் சோர்வு உண்டாகும். வீட்டில் எதிர்பார்த்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் இருந்து வந்த எதிரிகளின் தொல்லைகள் அகலும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். பணி செய்யும் இடங்களில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். அனைவரிடமும் நிதானமாக நடந்து கொள்ளவும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

குரு பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருப்பதால் நீங்கள் விரும்பிய துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பதவியில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆதரவால் சாதகமான சு ழல் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவோருக்கு ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். எதிர்பாராத சொத்து சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களுக்கு முன்னேற்றமான சு ழல் உண்டாகும். கேது பகவான் ஜென்ம லக்னத்தில் இருப்பதால் தொழில் சம்பந்தமான அனுபவ அறிவுகள் கிடைக்கும். பொருளாதார வசதிகள் நிலையானதாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் மனதில் தோன்றும். ராகு பகவான் ராசிக்கு ஏழில் இருப்பதால் எவ்வித பிரச்சனைகள் உண்டாயினும் அதை சாமர்த்தியமாக சமாளித்து அனைவரையும் ஈர்ப்பீர்கள். உறவினர்களுடன் எழும் சின்னஞ்சிறு பிரச்சனைகளை தவிர்த்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடலாம்.

மாணவர்களுக்கு :

அடிப்படைக் கல்வி பயிலும் மாணவர்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான முன்னேற்றம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையாட்கள் மூலம் பணியில் இலாபம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். சக நண்பர்களின் ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். பணியில் அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பெண்களுக்கு :

பெண்களுக்கு பணியில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பிள்ளைகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். பு ர்வீக சொத்துகளால் சேமிப்பு அதிகரிக்கும். இல்லத்தரசிகள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு :

விவசாயத்தில் எதிர்பாராத செலவுகளால் விளைச்சலில் இலாபம் குறையலாம். பயிர்களின் விளைச்சலில் கவனம் வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்துகளை சரியான நேரங்களில் தௌpத்துக் கொள்ளவும்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் தனவரவில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் அதற்கான வருவாயும் உண்டாகும்.
பரிகாரம் :

கோயம்புத்தூரில் உள்ள லோக நாயக சனீஸ்வரரை சனி ஓரையில் சென்று வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும்.


Share:

தமிழ் புத்தாண்டு ரிஷப ராசி ராசிபலன்கள் 2018.


தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018


கடினமாக உழைக்கக்கூடிய மற்றும் அனைவரிடமும் ஒத்துழைத்து செல்லும் ரிஷப ராசி அன்பர்களே !


உங்கள் ராசி அதிபதியான சுக்கிரன் மோட்ச ஸ்தானத்தில் இருப்பதால் ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். வெளிநாடு சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் இன்பம் உண்டாகும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மனச்சங்கடங்களை தவிர்க்கலாம். குரு பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் வழக்கு சம்பந்தமான விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சு ழல் அமைந்தாலும் குரு பார்வையால் தனவரவு உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையாட்களால் மேன்மை உண்டாகும்.

சனி பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருப்பதால் சகோதரர்களுக்கு இடையே அனுசரித்து செல்லவும். தீய பழக்கங்களால் பொருள் இழப்பு நேரிடலாம். அலைச்சல் மிகுதியால் உணவு உண்பதில் காலதாமதம் ஏற்படலாம். எனவே, உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயங்களிலும் கவனம் வேண்டும். ராகு பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருப்பதால் தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள். அணிகலன் சேர்க்கை உண்டாகும். பணி செய்யும் இடங்களில் அமைதியுடன் இருக்கவும். கேது பகவான் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் அவசர செயல்பாடுகளை தவிர்த்து நிதானமாக செயல்படவும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான நிலை உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவார்கள். பாடங்களை கவனமாக படித்து எழுதி பார்ப்பது உத்தமம். சிறுசிறு கவனக்குறைவுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து கொள்வது சுபிட்சம்.
பெண்களுக்கு :

பெண்கள் தங்களின் உடல்நலனில் கவனத்துடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சு ழல் நேரிடலாம். எனவே, நிதானத்துடன் செயல்படவும்.
வியாபாரிகளுக்கு :

வியாபாரிகள் புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு சாதகமற்ற சு ழல் அமையக்கூடும். எனவே, நிதானத்துடன் செயல்படவும். அரசு அதிகாரிகள் கையெழுத்து இடுவதற்கு முன்பு கோப்புகளை சரிபார்க்கவும். செய்யும் பணியில் கவனத்துடன் செயல்படவும்.
விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சலில் காலதாமதம் ஏற்படும். அருகில் உள்ள தோட்டக்காரர்களுடன் பிரச்சனைகளை தவிர்க்கவும். தோட்டப் பயிர்கள் மூலம் லாபம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்க காலதாமதமாகும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற விரையச் செலவுகள் உண்டாகலாம்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க சு ழ்நிலைகள் உண்டாகும். பிறருக்கு உதவுதல் மற்றும் ஜாமீன் கையெழுத்து இடும்போது சிந்தித்து செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். தனம் சம்பந்தமான வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
வழிபாடு :

சனிக்கிழமைதோறும் நெய் தீபம் ஏற்றி வடைமலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.



Share:

தேவையற்ற கொழுப்பை கரைத்து தொப்பை ஏற்படாமல் தவிர்க்கும் எளிய முறை-to burn belly fat

தேவையற்ற கொழுப்பைக் கரைத்து தொப்பை மற்றும் இதய கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்கும் எளிய தமிழ் முறை !

 தொப்பையும், உடல் பருமனும் புதியதொரு மன அழுத்தத்தை இன்று பெரும்பான்மையோரிடம் விதைத்து வருகிறது. உடல் உழைப்பு, உணவுப் பழக்கம் என மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்க அதற்கான உடலியல் மாற்றங்களும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
தொப்பையைக் குறைக்க பல வழிமுறைகள் கூறப்பட்டாலும் அவ்வழிமுறைகள் அனைவரின் உடலுக்கும் உகந்ததாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு சிலருக்கு எவ்வளவு உணவு உண்டாலும் தொப்பை கூடுவதில்லை. இதற்கு காரணம் அவர்களின் இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை, நமது வழக்கில் கூறுவதானால் பித்தத்தன்மை ஆகும்.

 நமது சித்த மருத்துவமுறை உடலின் வாதம், பித்தத்தை அடிப்படையாக கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதனையே 'மிகினும் குறையினும் நோய் செய்யும்" என்று வழக்காகக் கூறுவர். இதன் அடிப்படை என்னவெனில், உடல் இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களே தொப்பைக்கும், உடல் பருமனுக்கும் முதற்காரணமாகும். இந்த அமிலத்தன்மையை குறைக்காமல் வேறெந்த முறையை பின்பற்றினாலும் பயன் இருக்காது.

 எனவே, அமிலத்தன்மையை குறைக்க மிகச்சிறந்த வழி இஞ்சி மற்றும் நல்லெண்ணை குளியல். இஞ்சிச்சாறு தொடர்ச்சியாக அருந்தி வந்தால் அமிலத்தன்மை குறைய வழி செய்யும்.

 ஒரிஜினல் நம்ம ஊர் நாட்டு இஞ்சியுடன், இனிப்பு சேர்த்து பருகும் ருசியான இஞ்சிச்சாறு பானம் தினசரி பயன்பாடாக முன் காலத்தில் இருந்து வந்தது. இன்று காபியும், தேநீரும் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டன.

  இஞ்சிச்சாறு மூன்று மடங்கு நீர் சேர்த்து ஒரு டம்ளர் அளவு தினமும் மாலை வேளையில் பருகி வந்தால் உடல் இலகுவாகும், தேவையற்ற சதை எளிதில் கரையும்.
Share:

எண்ணெய் வைத்து குளிப்பதில் உள்ள ரகசியம் என்ன...?Benefits of Oil Bath in Tamil

எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியமா?


  நாம் குழந்தை பருவத்தில் தீபாவளியன்று அம்மா தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவாங்க. இது காலம் காலமாக நடைபெறும் வழக்கம். ஆனால் வளர்ந்த பிறகு  நாம் அதை மறந்து விடுகிறோம். குறிப்பிட்ட இடைவெளியில் உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் ஒரு சிறந்த வழிமுறை.

1.இப்போது நமக்கு எளிதாக வருகிற உடல் தொந்தரவுகள் நம் முன்னோர்களுக்கு வரவில்லை. அதற்கு காரணம் அன்றைய உணவு மற்றும் வாழ்க்கை முறையாகும். அதில் எண்ணெய் குளியலும் அடங்கும்.

2.எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் இருக்க வேண்டிய சரியான அளவில் இருக்கும். எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சு ட்டை குறைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும்.

3.எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலுக்கு மட்டும் இல்லாமல் தலை முடியும் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெயில் கொழுப்பு சத்துள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். நம் சருமத்தில் சின்ன துவாரங்கள் உள்ளன. எண்ணெயை தலை மற்றும் உடலில் தடவும் போது இவை சருமம் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகாமல் பளபளவென்று இருக்கும்.

4.எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃபாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று அறிவியல் ஆய்வும் ஒப்புக்கொள்கிறது.

5.லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.

எண்ணெய் குளியலை மீட்டெடுப்பதற்கான காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம்.!!
Share:

உப்பு vs தேன்

உப்பில் இருப்பது அசுர குணம்.! தேனில் இருப்பது தேவர் குணம்.!--சித்த மருத்துவம்

உப்பின் தன்மை என்ன ?
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு...
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...
தேன்....
தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?
தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் ..
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-
1.மாதம் 2 முறையாவது 3 வேளையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .
2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .
3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .
உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணப்படுத்த
உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )
இனிப்பை வைத்து வைத்யம் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.
நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது
கருவாடு ,உறுகாய்,போண்டரைவைகள் உதாரணம் ...
நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .
தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்
உப்பு பூலோகத்தில் இருக்க வைக்கும் ..
இவைகள் உடல் சார்ந்த விவரம் ....
ஆகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ...


Share:

வாழ்க்கையில் வெற்றி பெற!!!


*#வாழ்வின் அத்தனை ரகசியங்களும் நமது மூச்சுக் காற்றில் அடங்கியுள்ளது.ஒரு மனிதன் சராசரியாக நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுகிறான்.இந்த அளவு எவ்வளவுக்கு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு மனிதனின் ஆயுள் கூடும்.ஆயுள் மட்டுமல்ல அறிவும் வளரும்.புத்தி தெளிவடையும். அதே சமயம் இந்த அளவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆயுள் குறையும்.*

*#புத்தி பேதலிக்கும். நாம் கோபப்படும் போதும்,பரபரப்படையும் போதும் நமது இதயத்துடிப்பு அதிகரிக்கும்.மூச்சின் அளவும் அதிகரிக்கும்.அதனால் தான் கோபம்,பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறினார்கள்.அதற்காக தியானம்,பிராணயாமம் போன்ற பல்வேறு வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றார்கள். இதில் பிராணயாமம் என்ற மூச்சுப்பயிற்சியை முறையாகக் கற்றவர்களே செய்ய வேண்டும். பல எளிய முறை மூச்சுப்பயிற்சிகளும் உள்ளன.அவற்றைப் பின்பற்றினாலே நமக்கு பல நன்மைகள் விளையும். இதில் ஓஷோ கூறியுள்ள ஒரு தியானமுறையைப் பார்ப்போம்.*

*#சுவாசத்தைக் கவனித்தல்(தியானம்)*
*"எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை.*
*எளிதானதாகவுகிடைக்கமலோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும்.*

*#சுவாசத்தைக் கவனித்தல் என  பொருள்   இது மிகவும் எளிய முறை.*
*#எப்போது - நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும்,ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில்..காலம் - 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.*
*#முதல் படி - உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா. வேறு எண்ணங்களை விட்டுவிடு.*
*#நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.*
*#நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.*

*#பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள். இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.*

*#உன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் யாருக்கும் நீ செய்வது என்னவென்று தெரியாது.*
*#அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.*

*#சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய். ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும். இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும். ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.*

*#ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.*

*#அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம். உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது, இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும். உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,ஓய்வானதாகவும் புத்துணர்வு தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.*

*ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.*

*#காலையில் நீ விழித்தெழுந்த உடன் உனது சுவாசத்தை கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய். அது உனக்கு வியப்பளிக்கும்."*

*#எண்ணங்களைக் குறைத்தால் பேச்சுக் குறையும்.பேச்சைக் குறைத்தால் மூச்சு குறையும். மூச்சைக் குறைத்தால் சித்தம் தெளிவடையும்.சித்தம் தெளிவடைந்தால் மொத்தமும் கிடைக்கும்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்* 
  
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!* 
                       
Share:

வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?...!!

Health Benefits Of Warm Water

#நெஞ்சு_எரிச்சல்_போகணுமா?

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை….! மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!


#சதை_குறையணுமா?

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்...!



#காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?

எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)...!


#உடம்பு_வலிக்கிறதா?


உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்...!


#கால்_பாதங்கள்_வலிக்கிறதா?

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்...!


#மூக்கு_அடைப்பா?

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்...!


#வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போது

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்...!
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்...!


#ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு

அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்...!


#தரையை_துடைக்கும் போது

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்...!


#திடீரென்று_கடுமையான_தலை_வலியா?

தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்....!


#சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்’

தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
Share:

கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் நல்லதா?

கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் நல்லதா? கெட்டதா?


பொதுவாக தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம். இதுபோன்ற சில நிகழ்வுகள் நம்முடைய மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்கத் தேவையில்லை.

 சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய், அது உடையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும்.

 தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை மேம்படும்.

தேங்காயின் மேல்பகுதி அதாவது கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும்.

கண் பகுதி சிறியதாகவும், கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.

தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும்.

சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பு  இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.

தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சனைகள் உருவாகும்.

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை.

Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்