விளம்பி வருட ராசிபலன்கள் !
பிறரை நல்வழிப்படுத்துவதிலும், எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் வல்லமை கொண்ட மீன ராசி அன்பர்களே !
உங்கள் ராசி அதிபதியான குருபகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருப்பதால் சகலவிதமான திறமைகளும் மேம்படும். தொழில் சம்பந்தமான இடமாற்றங்கள் உண்டாகும். பெண் ஊழியர்களிடம் சற்று கவனம் வேண்டும். புதுவிதமான துறையை சார்ந்த கல்விகள் மேம்படும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனைவி மூலம் திடீர் தனயோகம் உண்டாகும். சனி பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருப்பதால் பிறரை எதிர்பார்க்காமல் பணிகளை செய்து முடிப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். பிரபல யோகமும் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தன உதவிகள் உண்டாகும். வாக்கு வன்மை உண்டாகும்.
ராகு பகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் பல சாதனைகளை செய்வீர்கள். இவர்கள் மனோபலம் மிக்கவர்கள். பூர்வீக சொத்துகளால் விரையச் செலவுகள் ஏற்படும். மனைவியின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கேது பகவான் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருப்பதால் நட்பு வட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தன வரவுகள் உண்டாகும். ஆனால், சேமிப்பில் நாட்டம் இருக்காது. சுகபோகங்களை விரும்பியபடி அனுபவித்து வாழ்வீர்கள்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். விளையாட்டு துறையில் உள்ளவர்கள் பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவார்கள். எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு குடும்பத்தில் சிறப்பான நிலை உண்டாகும். பணியில் உள்ள பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவால் மேன்மை உண்டாகும். திறமைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகள் பலவிதமான புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் எதிர்பார்த்த லாபம் பெறுவார்கள். விளைச்சலும் எண்ணியதை விட சிறப்பாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நிதானத்துடன் செயல்பட்டால் பெரிய திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் சில நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்படும். எனவே, உபயோகமற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு :
வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மையை தரும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக