Tamil Community

தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

கோபமும், வேகமும் மற்றும் நியாயத்திற்காக போராடும் குணமும் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே !
உங்கள் ராசிநாதன் செவ்வாய் பணபர ஸ்தானத்தில் இருக்கிறார். இருப்பினும் தனது பகை கிரகமான சனியுடன் இணைவதால் எதிர்பார்த்த தன வரவுகள் காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய வீடுகள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சகோதர வகையில் ஆதரவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சுகளால் பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் பிறக்கும்.
குரு பகவான் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் எதிர்ப்பாராத சுபசெய்திகளால் திடீர் செலவுகள் நேரிடலாம். விரும்பிய நபரை மணம் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சனி பகவான் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் பொது சேவையில் ஈடுபடுவோர்க்கு பிறரால் அவச்சொற்கள் ஏற்படலாம். அஞ்ஞான எண்ணங்கள் கொண்ட நபர்களின் நட்புகளை தவிர்த்தல் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.
ராகு பகவான் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் பணியில் மேன்மை உண்டாகும். பு ர்வீக சொத்துகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். கேது பகவான் மூன்றாம் வீட்டில் இருப்பதால் ஆன்மிக ஞானத்தில் விருப்பம் அதிகரிக்கும். கோபமான பேச்சுகளை தவிர்த்து கனிவாக பேசுவது நன்மையை உண்டாக்கும்.

மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்துடன் படிக்கவும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனம் வேண்டும். குருவின் ஆலோசனைகள் கேட்டு அதன்படி நடப்பது சிறப்பான பலனை அளிக்கும்.

பெண்களுக்கு :
திருமணமான பெண்களுக்கு சந்தான பாக்கியத்தால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் வீட்டு சொந்தங்களால் ஆதரவும், லாபமும் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மறைமுக எதிரிகளால் மனக்கசப்புகள் நேரிடலாம். கொடுக்கல் வாங்கலில் எண்ணிய லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசியல் நுணுக்கங்களால் மேன்மை அடைவீர்கள். அரசு அதிகாரிகளுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். தற்பெருமையை தவிர்த்தல் சுபமாகும்.

விவசாயிகளுக்கு :
விவசாயத்தில் குறைந்த முதலீடு கொண்ட பயிர்களை விளைவிப்பது நல்லது. கிடங்கில் உள்ள தானியங்களை சேமிப்பதை தவிர்த்து நல்ல விலை வரும்போது விற்பது உத்தமம் ஆகும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்கள் தங்களின் கற்பனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிறந்த படைப்புகள் இருப்பினும் அதற்கான அங்கீகாரம் கிடைக்க கால தாமதமாகும். 

வியாபாரிகளுக்கு :
வியாபாரிகள் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்லவும். புதிய வாடிக்கையாளர்களுடன் ஆதரவு உண்டாகும். இணையதள வியாபாரத்தில் நிதானம் வேண்டும். பொருட்களை தேங்க விடாமல் விற்று வருவது மத்திமமான லாபம் உண்டாகும்.

பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் இழுபறிகள் இருப்பின் பற்றுகள் மேம்படும். பணம் கொடுக்கல் மற்றும் வாங்கல் சம்பந்தமான வாக்குறுதிகளை தவிர்த்தல் நல்லது.

வழிபாடு :
எண்ணிய காரியங்களில் வெற்றி பெற திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபாடு செய்து வரவும்.
Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்