தமிழ் புத்தாண்டு : விளம்பி வருட ராசிபலன்கள் - 2018
பிறரை எடை போடுவதிலும், சு ழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியான துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதனான சுக்கிரன் கேந்திர ஸ்தானத்தில் சிறப்பான நிலையில் அமர்ந்திருக்கிறார். திருமண வரன்கள் கைகூடி வரும். பெண்களால் எதிர்ப்பார்த்த உதவிகள் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தௌpவு பிறக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைபேறு உண்டாகும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் விரைவில் முடிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது நல்லது.
கேது பகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் கல்விக்கு மீறிய புதுவிதமான அனுபவம் உண்டாகும். நுட்பமான வேலைகள் மூலம் சிறப்பான மதிப்புகளை பெறுவீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
ராகு பகவான் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணியில் உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். காவல் துறை மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் முயற்சி செய்வோருக்கு சுபச் செய்திகள் உண்டாகும்.
சனி பகவான் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதற்கும் கலங்காமல் துணிவுடன் செயலாற்றுவீர்கள். அவசர செயல்பாடுகளால் சிலரின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே, சிந்தித்து செயல்படுவது நன்மையை தரும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள், நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். உயர் கல்வி பயிலும் மாணவர்கள், மனதில் எழும் ஐயங்களை ஆசிரியரின் துணையுடன் புரிந்து படிப்பதால் மேன்மை உண்டாகும்.
பெண்களுக்கு :
பெண்கள் பணிபுரியும் இடங்களில் சாதகமான சு ழல் உண்டாகும். இல்லத்தரசிகள் தந்தை வழி உறவினர்களிடம் நிதானமாக நடந்து கொள்வது நன்மையை தரும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு பொது மக்களுடனான உறவு நிலை மேம்படும். அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சு ழல்கள் உண்டாகும். பெண் ஊழியர்களிடம் நிதான போக்கை கையாள்வது சிறப்பை உண்டாக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்சனையால் தடைபட்டு வந்த வேலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்ப்பார்த்த விளைச்சலால் மகிழ்ச்சி அடைவீர்கள். மூலிகை பயிர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் சாதகமான நிலை உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு மேன்மையான சு ழல் உண்டாகும். புதிய வியு கங்களை கையாளுவதினால் எதிரிகளை பலம் இழக்க செய்வீர்கள். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது சிறப்பான பலனை தரும்.
பொருளாதாரம் :
எதிர்ப்பார்த்த திடீர் யோகத்தால் நிலுவையில் இருந்த தன வரவுகள் கிடைக்கும். அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உதவும்போது கவனம் தேவை.
பரிகாரம் :
புதன்கிழமை தோறும் நறுமண மலர்களை கொண்டு இராமரை வழிபாடு செய்தால் முன்னேற்றம் உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக