தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

சு ழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட மகர ராசி அன்பர்களே !
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

சு ழ்நிலைக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட மகர ராசி அன்பர்களே !
உங்கள் ராசிநாதன் சனி பகவான் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் செயல்திறனில் சில தடங்கல்கள் உண்டாகலாம். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் வேண்டும். கடின உழைப்பால் உடல் சோர்வு உண்டாகும். வீட்டில் எதிர்பார்த்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் இருந்து வந்த எதிரிகளின் தொல்லைகள் அகலும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். பணி செய்யும் இடங்களில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். அனைவரிடமும் நிதானமாக நடந்து கொள்ளவும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
குரு பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருப்பதால் நீங்கள் விரும்பிய துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பதவியில் உள்ள உயர் அதிகாரிகளின் ஆதரவால் சாதகமான சு ழல் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவோருக்கு ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். எதிர்பாராத சொத்து சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களுக்கு முன்னேற்றமான சு ழல் உண்டாகும். கேது பகவான் ஜென்ம லக்னத்தில் இருப்பதால் தொழில் சம்பந்தமான அனுபவ அறிவுகள் கிடைக்கும். பொருளாதார வசதிகள் நிலையானதாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் மனதில் தோன்றும். ராகு பகவான் ராசிக்கு ஏழில் இருப்பதால் எவ்வித பிரச்சனைகள் உண்டாயினும் அதை சாமர்த்தியமாக சமாளித்து அனைவரையும் ஈர்ப்பீர்கள். உறவினர்களுடன் எழும் சின்னஞ்சிறு பிரச்சனைகளை தவிர்த்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடலாம்.
மாணவர்களுக்கு :
அடிப்படைக் கல்வி பயிலும் மாணவர்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான முன்னேற்றம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையாட்கள் மூலம் பணியில் இலாபம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். சக நண்பர்களின் ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்கும். பணியில் அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு பணியில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பிள்ளைகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். பு ர்வீக சொத்துகளால் சேமிப்பு அதிகரிக்கும். இல்லத்தரசிகள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு :
விவசாயத்தில் எதிர்பாராத செலவுகளால் விளைச்சலில் இலாபம் குறையலாம். பயிர்களின் விளைச்சலில் கவனம் வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்துகளை சரியான நேரங்களில் தௌpத்துக் கொள்ளவும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் தனவரவில் சில தடங்கல்கள் ஏற்பட்டாலும் அதற்கான வருவாயும் உண்டாகும்.
பரிகாரம் :
கோயம்புத்தூரில் உள்ள லோக நாயக சனீஸ்வரரை சனி ஓரையில் சென்று வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக