Tamil Community

தமிழ் புத்தாண்டு மேஷ ராசி ராசிபலன்கள் 2018

தமிழ் புத்தாண்டு : 
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018

வேகம் மிகுந்த மேஷ ராசி அன்பர்களே !
உங்களின் ராசிநாதன் செவ்வாய் பகவான் ஒன்பதில் திரிகோண பலம் பெற்று சிறப்புடன் இருக்கிறார். இருப்பினும் தனது பகை கிரகமான சனியுடன் இணைவதால் செயல்பாடுகளில் மந்தப்போக்கு ஏற்படும். பல போராட்டங்களுக்கு பின் நினைத்த காரியம் வெற்றியைத் தரும். மனம் தளராமல் முயற்சியை மேற்கொள்வதால் அனுகூலம் பெறலாம். தங்களின் ராசிக்கும் முயற்சி பாவகத்திற்கும் குரு பார்வை இருப்பதால் முயற்சிக்கேற்ற வெற்றியை அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் வீடு, மனை மற்றும் வாகன யோகம் கைகூடும். தொழில் துறையில் பல அறிமுகமில்லா புதிய நுணுக்கங்களை கையாள்வீர்கள். வியாழ பகவான், ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் கூட்டு தொழிலில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். கூட்டாளியால் பல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண வரன் தேடுவோருக்கு திருமண வரன்கள் கைகூடும். மனைவி வழியில் முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழியில் வருத்தங்கள் நேரிடலாம். அடுத்தவர்கள் பணிகளில் தலையிடாமல் இருப்பது நற்பெயருக்கு கலங்கம் உண்டாகாது. தொழில் முயற்சியில் காலதாமதம் ஏற்படும். எதிர்பார்த்த லாபத்தை விட மத்திமமான இலாபம் கிடைக்கும்.


பெண்களுக்கு :
திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். திருமணமான பெண்கள் தந்தை வழி உறவினர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். இல்லத்தரசிகளுக்கு புகுந்த வீட்டில் மதிப்புக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அரசியல் :
அரசியல் மற்றும் அதிகார பதவியில் உள்ளவர்களுக்கு சற்று நிதான போக்கு அவசியம் தேவை. ஏனெனில், மற்றவர்களின் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆன்மிக நண்பர்களின் ஆலோசனைகள் ஆதரவாக இருக்கும்.

விவசாயம் :
விவசாயத்தில் புதிய புரட்சி மற்றும் யுக்திகளை கையாழுவதன் மூலம் லாபத்தை அடையலாம். நீர் பிடிப்புகளை நம்பி இருக்காமல் மாற்று முறையை கையாள்வது நன்மையைத் தரும்.

கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு தங்களின் திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கான அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்க பெறுவார்கள். கலை சம்பந்தமான துறையில் உள்ளவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவுகள் வர காலதாமதமாகும். புதிய தொழில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொழிலில் தேக்கநிலை காணப்படும்.
பொருளாதாரம் :
பொருளாதார வரவுகள் மத்திமமாக இருக்கும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

பரிகாரம் :
சென்னிமலை முருகனை செவ்வரளி மலர்களை கொண்டு வழிபட்டு வந்தால் சுபிட்சம் உண்டாகும்.

Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்