தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018
பலவிதமான சிந்தனைகளை ஒரே நேரத்தில் நிலை நிறுத்தி செய்யக்கூடிய வல்லமை வாய்ந்த மிதுன ராசி அன்பர்களே !
உங்களின் ராசிநாதன் புதன் பகவான் பத்தாம் இடத்தில் கேந்திர பலத்துடன் சிறப்புடன் இருக்கிறார். எனவே, சுய தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். எடுத்த காரியத்தில் சரியான வழிகாட்டுதல் மூலம் வெற்றி உண்டாகும். இழுபறியான வேலைகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். குருபகவானின் பார்வை ராசியில் இருப்பதால் எண்ணங்களில் தௌpவு பிறக்கும். வெளியு ர் சம்பந்தமான பயணங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் மற்றும் கடன் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த இடர்பாடுகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். புத்திரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சந்ததி வளம் சிறப்பாக அமையும்.
வயிறு சம்பந்தான பிரச்சனைகள் அவ்வப்போது வந்து போகும். வேலையாட்களால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சனி பகவான் ஏழாம் வீட்டில் இருப்பதால் தொழில் வகையான உழைப்பு அதிகரிக்கும். மனதில் இனம்புரியாத குழப்பங்களினால் மந்தமான சு ழல் உண்டாகும். திருமண வரன்கள் முயற்சிக்கு ஏற்ப வசதியான இடங்களில் அமையும். கேது பகவான் ராசிக்கு 8ம் இடத்தில் இருப்பதால் ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். பயணங்களில் கவனம் வேண்டும். ராகு பகவான் இராசிக்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் கல்வியில் மந்தமான போக்கு உண்டாகும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் தோன்றி மறையும். குடும்ப பிரச்சனைகளில் அந்நியர்களை தவிர்த்து பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவும். எதிர்பாராத தன வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான நிலை உண்டாகும். ஆசான்களின் உதவிகளுடன் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதிய நண்பர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு பணியில் மேன்மையான சு ழல் உண்டாகும். பணி நிமிர்த்தமான பொறுப்புகள் மற்றும் அலைச்சல்கள் உண்டாகலாம். சக தோழிகளிடம் அமைதியுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளவும். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் சாதகமான சு ழல் உண்டாகும். தொண்டர்கள் மூலம் ஆதரவான நிலை உண்டாகும். அரசு அதிகாரிகளுக்கு ஆதாயமான பலன்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு இன்பம் பயக்கும் வருடமாக அமையும். தடைபட்டு போன வாய்ப்புகள் கைகூடி வரும். எதிர்பாராத சுபச் செய்திகள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு மனை விவகாரங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். விவசாய பணியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு இந்த வருடம் சுபிட்சமான வருடம் ஆகும். வியாபாரத்தில் தங்களின் நிலைமைக்கு ஏற்ப கொடுக்கல் மற்றும் வாங்கலை வைத்துக் கொள்ளவும். கணக்கு வழக்குகளில் கவனம் வேண்டும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் சிறப்பான நிலை உண்டாகும். கிடைக்கும் லாபங்களை சிறப்பான முறையில் சேமித்து வைத்துக் கொள்வது நன்று. செலவுகள் வரவுக்குள் இருப்பதை கவனித்து கொள்ள வேண்டும்.
பரிகாரம் :
புதன் மற்றும் சனிக்கிழமை தோறும் துளசி மாலைகளை கொண்டு பெருமாளை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக