தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018
அஞ்சா நெஞ்சமும், தைரியமும் உடைய சிம்ம ராசி அன்பர்களே !
உங்கள் ராசி அதிபதியான சு ரியன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் உழைப்புக்கு முன்னுரிமை கொடுத்து அதன்மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். பெரியோர்களின் ஆதரவால் தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடல் சார்ந்த பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். குரு பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து முயற்சிக்கேற்ற வெற்றியை கொடுப்பார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். ஆராய்ச்சி சம்பந்தமான படிப்பில் மற்றும் சோதனையில் ஈடுபடுவோருக்கு பாராட்டுக்கள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். புத்திரர்களின் ஆசைகளை பு ர்த்தி செய்வீர்கள். திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவு உண்டாகும்.
ராகு பகவான் ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருப்பதால் கேளிக்கைகளில் விருப்பம் உண்டாகும். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலாவுக்கு செல்லும்போது எச்சரிக்கை வேண்டும். புதுவிதமான பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். கேது பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் எதிரிகளை வெல்லக்கூடிய தைரியம் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். ஆன்மிக பயணங்களால் மனக்குழப்பங்களில் இருந்து தௌpவு பிறக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவால் லாபம் உண்டாகும். நிர்வாகம் மற்றும் வேலையாட்கள் மாற்றம் போன்ற செயல்களில் நிதானத்துடன் செயல்படவும். கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவால் தாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த சில தடைகள் நீங்கி ஆதரவான சு ழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் குருவின் ஆலோசனைகளால் நல்ல மதிப்பெண் மற்றும் பாராட்டுக்களை பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் உண்டாகும். சேமிப்பில் உள்ள தானியங்களுக்கு நல்ல விலையும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு பிரபலமானவர்களின் நட்புகளால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். கவிதை மற்றும் கதையில் புதுவிதமான ரசனைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு தலைமை பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகம் சம்பந்தமான பொறுப்புகளில் உள்ளவர்கள் பாராட்டப்படுவீர்கள். அரசு அதிகாரிகள், கௌரவ பதவிகளால் புகழ் பெறுவார்கள்.
பெண்களுக்கு :
பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து திருமண வரன்கள் அமையும்.
வழிபாடு :
ஞாயிறுதோறும் சிவாலய வழிபாடு மேற்கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியை தரும். தொழிலில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக