Tamil Community

தமிழ் புத்தாண்டு ரிஷப ராசி ராசிபலன்கள் 2018.


தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018


கடினமாக உழைக்கக்கூடிய மற்றும் அனைவரிடமும் ஒத்துழைத்து செல்லும் ரிஷப ராசி அன்பர்களே !


உங்கள் ராசி அதிபதியான சுக்கிரன் மோட்ச ஸ்தானத்தில் இருப்பதால் ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். வெளிநாடு சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் இன்பம் உண்டாகும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மனச்சங்கடங்களை தவிர்க்கலாம். குரு பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் வழக்கு சம்பந்தமான விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சு ழல் அமைந்தாலும் குரு பார்வையால் தனவரவு உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையாட்களால் மேன்மை உண்டாகும்.

சனி பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருப்பதால் சகோதரர்களுக்கு இடையே அனுசரித்து செல்லவும். தீய பழக்கங்களால் பொருள் இழப்பு நேரிடலாம். அலைச்சல் மிகுதியால் உணவு உண்பதில் காலதாமதம் ஏற்படலாம். எனவே, உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயங்களிலும் கவனம் வேண்டும். ராகு பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருப்பதால் தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள். அணிகலன் சேர்க்கை உண்டாகும். பணி செய்யும் இடங்களில் அமைதியுடன் இருக்கவும். கேது பகவான் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் அவசர செயல்பாடுகளை தவிர்த்து நிதானமாக செயல்படவும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் மேன்மையான நிலை உண்டாகும். எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவார்கள். பாடங்களை கவனமாக படித்து எழுதி பார்ப்பது உத்தமம். சிறுசிறு கவனக்குறைவுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து கொள்வது சுபிட்சம்.
பெண்களுக்கு :

பெண்கள் தங்களின் உடல்நலனில் கவனத்துடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு உயர் அதிகாரிகளால் சாதகமற்ற சு ழல் நேரிடலாம். எனவே, நிதானத்துடன் செயல்படவும்.
வியாபாரிகளுக்கு :

வியாபாரிகள் புதிய தொழிலில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு சாதகமற்ற சு ழல் அமையக்கூடும். எனவே, நிதானத்துடன் செயல்படவும். அரசு அதிகாரிகள் கையெழுத்து இடுவதற்கு முன்பு கோப்புகளை சரிபார்க்கவும். செய்யும் பணியில் கவனத்துடன் செயல்படவும்.
விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சலில் காலதாமதம் ஏற்படும். அருகில் உள்ள தோட்டக்காரர்களுடன் பிரச்சனைகளை தவிர்க்கவும். தோட்டப் பயிர்கள் மூலம் லாபம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்க காலதாமதமாகும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற விரையச் செலவுகள் உண்டாகலாம்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க சு ழ்நிலைகள் உண்டாகும். பிறருக்கு உதவுதல் மற்றும் ஜாமீன் கையெழுத்து இடும்போது சிந்தித்து செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். தனம் சம்பந்தமான வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
வழிபாடு :

சனிக்கிழமைதோறும் நெய் தீபம் ஏற்றி வடைமலை சாற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.



Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்