தமிழ் புத்தாண்டு : விளம்பி வருட ராசிபலன்கள் - 2018
பழகுவதற்கு இனிமையானவரும், சிரித்த முகத்துடன் எல்லோரையும் அனுசரிப்பவரும், கருணை மற்றும் பாச உணர்வு கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
உங்கள் ராசி அதிபதியான புதன் ஏழாம் இடத்தில் கேந்திர பலத்துடன் சிறப்பான நிலையில் இருப்பதால் தொழிலில் நுட்ப அறிவு மேம்படும். புதிய ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து திருமண வரன்கள் அமையும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வீடு மற்றும் வாகன வசதிகள் உண்டாகும்.
குரு பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருப்பதால் கல்வி கலைகளில் நல்ல தேர்ச்சி பெறுவீர்கள். சமயோசிதமான பேச்சுகளால் தன லாபம் உண்டாகும். பண வரவுகள் இருப்பினும் சேமிப்பில் நாட்டம் உண்டாகாது. அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். சனி பகவான் ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் உறவுகள் இடத்தில் மனக்கசப்புகள் நேரிடலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் சிறப்பான சு ழல் உண்டாகும். பு ர்வீகத்தில் சிற்சில பிரச்சனைகள் தோன்றி மறையும்.
ராகு பகவான் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருப்பதால் வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். பலருக்கு வழிய சென்று வேலை செய்வீர்கள். நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. கேது பகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் அவசர செயல்களால் அவப்பெயர்கள் நேரிடலாம். புத்திரர்கள் பற்றிய கவலைகள் மேலோங்கும். பலவிதமான கலைகளில் தேர்ச்சி உண்டாகும். மெய்ஞானம், தியானம் போன்றவற்றில் நாட்டம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு :
உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேல்நிலை கல்வி சம்பந்தமான படிப்புகளில் கவனத்துடன் தேர்ந்தெடுக்கவும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் எண்ணிய லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் புதிய கிளைகளை ஆரம்பிக்கலாம். வியாபார ஸ்தலங்களில் மாற்றம் உண்டாகலாம். கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் அமோகமாக இருக்கும். புதிய நிலபுலன் சேர்க்கை உண்டாகலாம்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். செல்வாக்கும், மதிப்பும் உயரும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் இருந்து வந்த இழுபறி நீங்கி தனவரவு உண்டாகும். பழைய நிலுவை தொகைகள் கிடைப்பதற்கான சு ழல் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகள் சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அரசு அதிகாரிகள் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். அதிகார பேச்சுகளை குறைத்து கொள்வது சிறப்பு.
பெண்களுக்கு :
பெண்களுக்கு குடும்பத்தில் மனக்கசப்புகள் உண்டாகும். நிதானத்துடன் அதை கையாண்டு அரவணைப்பீர்கள். உறவுகளுக்கு இடையே மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தொழில் சம்பந்தமான பிரயாணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
பரிகாரம் :
புதன்கிழமைதோறும் கிருஷ்ணருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக