தமிழ் புத்தாண்டு :
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018
விளம்பி வருட ராசிபலன்கள் - 2018
எதிலும் வேகமும், துடிப்பும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே !
உங்கள் ராசி அதிபதியான வியாழ பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்பார்த்த காரியம் எண்ணிய விதத்தில் இனிதே நடைபெறும். வர்த்தகம் சம்பந்தமான துறைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அயல்நாட்டு பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். வாரிசுகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். வரவுக்கு ஏற்ற செலவுகள் உண்டாகும். வியாழ பகவான் முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதால் பணிபுரியும் இடங்களில் மேன்மையான சு ழ்நிலை அமையும். பு ர்வீக சொத்துகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். புத்திர பாக்கியத்திற்கான மருத்துவ செலவுகள் நேரிடலாம்.
கேது பகவான் ராசிக்கு தன வீட்டில் இருப்பதால் புதிய நபர்களுடன் தேவையில்லாத விவாதங்கள் உண்டாக நேரிடும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். ராகு பகவான் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் மனதில் போராட்டகரமான சு ழ்நிலை அமையும். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சனி பகவான் ராசியிலே இருப்பதால் பணியில் அதிகமான பொறுப்புகள் உண்டாகும். மனதில் வைராக்கியத்துடன் எதையும் செய்து முடிப்பீர்கள். எதிலும் அலட்சியம் இல்லாமல் கவனத்துடன் செயல்படவும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் குருவின் ஆலோசனை கேட்டு அதன்படி நடப்பது உத்தமம். உயர்நிலை பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சு ழல் உண்டாகும். புதுவித ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு எதிர்ப்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
பெண்களுக்கு :
பெண்கள் குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலாக்கள் சென்று வருவார்கள். பணிபுரியும் பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இல்லத்தரசிகளுக்கு தாய் வீட்டு வழி உறவால் ஆதாயம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு மதிப்புகள் உயரும். அரசு அதிகாரிகளுக்கு சக பணியாளர்களின் ஆதரவு உண்டாகும். பொதுக்கூட்டங்களில் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தலைமை அதிகாரிகளிடம் அந்தஸ்து மேம்படும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகள் புதுமையான முறைகளை கையாளுவதன் மூலம் லாபம் அடைவார்கள். தண்ணீர் குறைந்த அளவு தேவைப்படும் பயிர்களால் லாபம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு பலவிதமான போராட்டங்களுக்கு பின்பே சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிரிகளால் வாய்ப்புகள் தவறும் நிலை நேரிடலாம்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகளுக்கு சாதகமான லாபங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் எதிர்ப்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலையாட்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
பொருளாதாரம் :
பொருளாதாரத்தில் எதிர்ப்பார்த்த தனவரவுகள் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
பரிகாரம் :
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை துளசி மாலையிட்டு வழிபட்டு வர தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.