தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம் !!
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019விகாரி வருடம்
உழைப்பாலும், அழகிய பேச்சுக்களாலும் அனைவரையும் கவரக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே !!
தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனை மற்றும் வாகனம் தொடர்பான சில விரயங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். புத்திரர்களின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பூர்வீக சொத்துகளால் சில விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நற்பலனை உருவாக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கட்சி சார்ந்த பயணங்கள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். கட்சி சார்ந்த பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மூத்த அரசியல் தலைவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தாலும் விற்பனை விலையால் எண்ணிய லாபம் குறையும். மற்ற விவசாயிகளிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பெரிய முதலீடுகளை செய்வதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். தொழில் கூட்டாளிகளிடம் கனிவாக பேசுவதன் மூலம் நற்பலன்கள் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் படிக்க வேண்டும். உயர்கல்வி சார்ந்த பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் சற்று பொறுமையுடன் செயல்படவும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். புத்திரர்களால் சில மனவருத்தங்கள் நேரிடலாம். பெரியோர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது சேமிப்புகளை அதிகப்படுத்தும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். சக பணியாளர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மூத்த அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். புதுவிதமான சிந்தனைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய வாய்ப்புகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும்.
பரிகாரம் :
தினமும் விநாயகரை வழிபட்டு வர தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக