தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மிதுன ராசி
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019விகாரி வருடம்
அறிவும், சிந்தனை வளமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே !!
மனதில் புதியதொரு இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் ஈடேறும். மனை விருத்திக்கான முயற்சிகள் நன்மையளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். குடும்ப நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சுபச் செயல்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் சேமிப்பு உயரும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உயரதிகாரிகளால் சாதகமான பலன்கள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச்சுக்களை நயமாக பேசுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாக்குறுதிகளை காப்பாற்றுவதன் மூலம் நற்பெயர்கள் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்று.
விவசாயிகளுக்கு :
சந்தையின் விலைக்கேற்ப பயிர்களை நிர்ணயம் செய்வது நன்மையளிக்கும். வரப்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும். கால்நடைகளால் ஆதாயம் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு :
புதிய தொழில் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான கடன் உதவிகள் சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பதற்கான உதவிகள் சாதகமாக அமையும்.
மாணவர்களுக்கு :
கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வு வேண்டும். பெற்றோரின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை அளிக்கும். நண்பர்களிடம் சிறு மனவருத்தங்கள் தோன்றும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் தெளிவு உண்டாகும்.
பெண்களுக்கு :
கணவன், மனைவி இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குழந்தைகளிடம் சற்று கனிவுடன் நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் எண்ணங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளவும். குடும்ப பெரியோர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் பணி உயர்வு சாதகமாக அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அலைச்சலுக்கு பின் கிடைக்கும். சக ஊழியர்களால் மனவருத்தங்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். பணி தொடர்பான விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும்.
கலைஞர்களுக்கு :
கிடைக்கும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்தி கொள்ளவும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணுகுமுறைகளை மாற்றிக்கொள்வது நன்மையளிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் வேண்டும். சக கலைஞர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.
பரிகாரம் :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக