Tamil Community

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம் -2019-2020:சிம்ம ராசி .

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம் -2019-2020 சிம்ம ராசி .

அஞ்சா நெஞ்சமும், தைரியமும் உடைய சிம்ம ராசி அன்பர்களே !

மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்பாடும். குடும்ப நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் தெளிவு பிறக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், பாராட்டும் காலதாமதமாக கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். ஆன்மீகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் மறைமுக வருவாய்கள் கிடைக்கும். மேடை பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் உண்டாகும். மேலும், விளைச்சலுக்கு உண்டான விலை கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வரப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உறவினர்களுக்கிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்படும். கால்நடைகளால் லாபகரமான சூழல் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். புதிய நபர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும்.

மாணவர்களுக்கு :

கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஆலோசனைகள் மாற்றமான சூழலை உண்டாக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்தை குறைக்கவும்.


பெண்களுக்கு :

தாய் வீட்டுவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். கணவன், மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் சிறிது தடைக்கு பின்பு நற்பலன் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் சாதகமான இடமாற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை சிறு தடைக்கு பின்பே கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்கள் புதிய வாய்ப்புகளுக்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டும். மூத்த கலைஞர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் பழகும்போது கவனம் வேண்டும். வரவேண்டிய தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

பரிகாரம் :

ஞாயிறுதோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்