தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம்
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019 விருச்சிக ராசி
கோபமும், வேகமும் மற்றும் நியாயத்திற்காக போராடும் குணமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே !வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை ஏற்படும். குடும்ப நபர்களுக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் சற்று நிதானம் வேண்டும். குலதெய்வ வழிபாட்டிற்கு சென்று வருவீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். மனதில் ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். தொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப நபர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுகள் மூலம் நற்பெயர்கள் உண்டாகும். கட்சி சார்ந்த வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். கௌரவ பதவிகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாய பணிகளில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். முன்கோபத்தை தவிர்த்து சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். சந்தையில் விலைக்கு ஏற்ப பயிர்களை நிர்ணயம் செய்து கொள்ளவும்.
வியாபாரிகளுக்கு :
தொழில் தொடர்பான அலைச்சல்களால் புதிய அனுபவம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையை தரும். பிரபலமானவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு :
கல்வியில் சிறு சிறு தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பயணங்கள் முன்னேற்றமான சூழலை உண்டாக்கும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
பெண்களுக்கு :
குடும்ப நபர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் ஆதரவான சூழல் உண்டாகும். தாய்வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் அலைச்சலுக்கு பின் ஈடேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவால் நன்மை உண்டாகும். அரசு தொடர்பான கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் ஏற்படும் எதிர்பாராத சில இடமாற்றங்களால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கவிதை மற்றும் கதைகளில் அனைவரின் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும்.
பரிகாரம் :
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர பொருளாதார மேன்மையும், ஆதரவும் உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக