தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கன்னி ராசி♍!!
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019விகாரி வருடம்
சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் சிந்தித்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே !!
முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் உயர்வு உண்டாகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் பெரியவர்களின் வழிகாட்டுதல் முன்னேற்றத்தை உருவாக்கும். திறமைகளை வெளிப்படுத்தும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். புதிய நபர்களிடம் உரையாடும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். மனை தொடர்பான விவகாரங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
புத்திரர்களின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படுவது உங்கள் மீதான செல்வாக்கை மேம்படுத்தும். சுப செயல்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். தொண்டர்களிடையே கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது செல்வாக்கை மேம்படுத்தும். புதிய முடிவுகளில் மூத்த தலைவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நன்மையளிக்கும்.
விவசாயிகளுக்கு :
விவசாயத்தில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். உறவினர்களின் வகையில் ஆதரவான சூழலும், சில மனக்கஷ்டங்களும் தோன்றி மறையும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள்.
வியாபாரிகளுக்கு :
தொழிலில் செய்யும் சிறு மாற்றங்கள் புதுவிதமான அனுபவத்தை உருவாக்கும். கூட்டாளிகளால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்ப்பது நன்மையளிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களை பெற சற்று கடினமாக முயற்சிக்க வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் புதிய அனுபவத்தையும், தூண்டுதலையும் ஏற்படுத்தும். நண்பர்களின் ஆலோசனைகள் மாற்றமான சூழலை உருவாக்கும்.
பெண்களுக்கு :
பொருளாதார நிலையில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். புத்திரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் உண்டாகும். சக பணியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், செல்வாக்கும் கிடைக்கும். பணவரவுகளில் சற்று கவனமுடன் இருப்பது நன்மையளிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமாகும்.
பரிகாரம் :
புதன்கிழமைதோறும் வராக பெருமானை வழிபட்டு வருவதால் தொழில் மற்றும் சிந்தனை சார்ந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக