தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மகர ராசி♑
எவரிடத்திலும் ஏற்ற தாழ்வுகள் இன்றி அனைவரிடத்திலும் சமமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே,
உறவினர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகள் மற்றும் பாராட்டுகளை பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும். பெரியவர்களிடம் நிதானத்துடன் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் மற்றும் லாபம் உண்டாகும்.
குடும்ப நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான யோசனைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கட்சி சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொதுநல பணியில் ஈடுபடுவோர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.
விவசாயிகளுக்கு :
விவசாயத்தில் எதிர்பார்த்த விளைச்சல்களால் எண்ணிய லாபம் கிடைக்கும். மனை தொடர்பான விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்வது எதிர்பார்த்த பலனை உருவாக்கித் தரும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் சில அலைச்சல்கள் நேரிடும்.
வியாபாரிகளுக்கு :
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் சக ஊழியர்களிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் முனைவோர் புதியதொரு இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் நற்பலனை உருவாக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். வெளியூர் சென்று கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். விளையாட்டுத் துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு :
மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சில மனக்கசப்புகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் அறிவுரைகள் முன்னேற்றமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். சக பணியாளர்களிடம் உரையாடும்போது கனிவான வார்த்தைகளை பயன்படுத்துவது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். மூத்த கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்கான முயற்சிகள் ஈடேறும்.
பரிகாரம் :
சனிக்கிழமைதோறும் ஜீவசமாதி சென்று வழிபட்டு வரவும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக