தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கடக ராசி ♋
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019விகாரி வருடம்
விடாமுயற்சியுடன் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கடக ராசி அன்பர்களே !!
மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் சற்று நிதானமாக அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். புதிய முயற்சிகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு செய்வது முன்னேற்றத்தை அளிக்கும். தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சற்று காலதாமதமான பலனை உருவாக்கும். தாய்வழி உறவுகளிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். மனை சம்பந்தமான விவகாரங்களால் சில விரயச் செலவுகள் நேரிடலாம். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட காரியத்தில் சற்று நிதானத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைய இயலும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். கட்சி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடன் இருப்பவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.
விவசாயிகளுக்கு :
எதிர்பார்த்த பயிர் உற்பத்தியின் மூலம் எண்ணிய லாபம் கிடைக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும். சக விவசாயிகளிடம் தேவையற்ற மோதல்களை தவிர்ப்பது நன்று.
வியாபாரிகளுக்கு :
வேலையாட்களிடம் சற்று அனுசரித்து நடந்துகொள்வது நன்மையளிக்கும். எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் லாபம் உண்டாகும். உறவினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது முன்னேற்றத்தை அளிக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் உண்டாகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் சாதகமான பலனை அளிக்கும்.
பெண்களுக்கு :
மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். புத்திரர்களிடம் கனிவுடன் பழகவும். மனதில் உள்ள கருத்துக்களை குடும்ப பெரியோர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் மனத்தெளிவு உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்த்து நிதானமாக பழகவும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய வாய்ப்புகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின்பு சாதகமாக அமையும். சம வயதினர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடன் இருப்பவர்களுடன் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக