தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கும்ப ராசி♒!!
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019விகாரி வருடம்
திறமையும், பொறுமையும், எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே !!
மனதளவில் எதிர்பார்த்த சில செயல்கள் நிறைவேறும். பெரியோர்களின் ஆதரவுகள் மனமகிழ்ச்சியை அளிக்கும். புதிய முயற்சிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் ஈடேறும். மனதிற்கு விரும்பிய ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புத்திரர்களிடம் சற்று கனிவாக நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களில் சில விரயங்கள் ஏற்பட்டு மறையும். சுரங்கம் தொடர்பான பணிகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமான பலன்கள் உண்டாகும். தாய்மாமன் உறவுமுறைகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். நண்பர்களின் மூலம் புதிய முயற்சிகளில் ஆதாயமான பலன்கள் ஏற்படும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மூத்த தலைவர்களால் சாதகமான பலன்கள் ஏற்படும். பொறுப்புகளை பகிரும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மற்றவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். எதிர்பாலின மக்கள் தொடர்பான கருத்துகளை கூறும்போது சற்று சிந்தித்து செயல்படவும்.
விவசாயிகளுக்கு :
எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனை தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும். வேலையாட்களினால் சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். புதிய மனைகள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்கள் வழியில் ஆதாயமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பெரிய முதலீடு செய்யும்போது கவனம் வேண்டும். தொழில் போட்டிகளை சமாளிப்பதற்கான ஆதரவுகள் கிடைக்கும். கூட்டாளிகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.
பெண்களுக்கு :
பணியிடத்தில் உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் உண்டாகும். கணவன், மனைவியிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். குடும்ப பெரியவர்களுடன் சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாமன் வகை உறவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் மற்றும் ஊதிய உயர்வு போன்றவை ஏற்படும். சிறுதூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு பல தடைகளுக்கு பின்பே எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சம வயதினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.
பரிகாரம் :
புதன்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு வர எண்ணத் தெளிவு உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக