தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : துலாம் ராசி♎
தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019
விகாரி வருடம்
வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் சமநிலையுடன் எதிர்கொள்ளும் துலாம் ராசி அன்பர்களே !!
மனதில் நினைத்து வந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் உண்டாகும். திட்டமிட்ட காரியத்தில் இருந்துவந்த தடை தாமதங்கள் அகலும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் தோற்றப்பொழிவு மேம்படும். வெளிவட்டார தொடர்புகளில் கவனம் வேண்டும். இளைய உடன்பிறப்புகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உறவுகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நன்மையளிக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல்-வாங்கலின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும். நீர்நிலை சார்ந்த தொழில் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு :
அரசியல் துறையில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மூத்த தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுத்துவது நன்மையளிக்கும். கட்சி சார்ந்த பணிகளால் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு :
விவசாயிகளுக்கு மனை தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். பாசன வசதிகளின் தன்மை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பயிர்களை தேர்வு செய்வது நன்மையளிக்கும். வரப்பு தொடர்பான பிரச்சனைகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். விளைச்சலுக்கு உண்டான லாபம் எண்ணிய வகையில் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு :
தொழில் சார்ந்த சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடல் சார்ந்த பொருட்களின் மூலம் எண்ணிய லாபம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளுடன் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
மாணவர்களுக்கு :
மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டு துறையில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சித்துறையில் புதிய சிந்தனைகள் மற்றும் பயணங்கள் மேலோங்கும்.
பெண்களுக்கு :
பெண்களுக்கு பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சாதகமாக அமையும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். எந்த விஷயத்தையும் செயல்படுத்தும்போது சற்று நிதானத்துடன் செயல்படுத்துவது நன்மையளிக்கும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் மேம்படும்.
உத்தியோகஸ்தரர்களுக்கு :
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சாதகமாக அமையும். சக ஊழியர்களின் உதவிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் உடல் சோர்வும், அலைச்சலும் ஏற்படும். செய்யும் செயல்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு :
கலைஞர்களுக்கு திறமைக்கேற்ப அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும். புதுவிதமான அனுபவத்தினால் புதிய ரசிகர்களை கவர்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பரிகாரம் :
செவ்வாய்க்கிழமைதோறும் செண்பக மலர்களால் முருகரை வழிபட்டு வர சுபிட்சமான சூழல் உண்டாகும்.
0 $type={blogger}:
கருத்துரையிடுக