Tamil Community

தமிழ்த்தேசியம் என்றால் என்ன ?

தமிழ்த்தேசியம் என்றால் என்ன ?

"மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது"

உதாரணமாக, அல்சீ(ஜீ)ரியாவில் இருந்து இந்தோனேசி(ஷி)யா வரை உள்ள முசு(ஸ்)லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம்.

உருது மொழி பேசுபவர்கள் பாகிசு(ஸ்)தானில் வாழ்கிறார்கள்.வங்கதேசத்து முசு(ஸ்)லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல.
ஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக் கொள்ள முடியாது.

ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம்.

தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான். மங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரசியா, யப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

ஆனால், யப்பானியர்கள் யப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம் .

இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை.

தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது.

  1. நில எல்லை,
  2. அரசு,
  3. ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை,
  4. இலக்கியம்,
  5. பொதுப் பழக்கவழக்கங்கள்,
  6. சமூக மரபுநிலை

இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை.

இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம்.

தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே. இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்! ''
Share:

பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் எப்படி வழிபட வேண்டும்


பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் எப்படி வழிபட வேண்டும்

பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் இறைவனை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து வணங்குதல் வேண்டும். ஆனால் பிரதோஷ நாளன்று சிவாலயத்தில் செய்யப்படும் சுற்று முறை மாறுபடும். அதாவது, வலமும் இடமும் மாறி மாறி சுற்றி வந்து, இறைவனை பிரதோஷ நாளில் வழிபட வேண்டும்.

• முதலில் நந்திபெருமானை வணங்க வேண்டும். பிறகு சுவாமி சன்னதிக்கு முன் உள்ள நந்தியின் கொம்புகளுக்கிடையே கருவறையில் உள்ள சிவலிங்கத்தைக் கண்டு வணங்க வேண்டும்.

• தொடர்ந்து திருச்சுற்றில் சண்டிகேசுவரர் சன்னதி வரை சென்று வணங்க வேண்டும். பிறகு வந்த வழியே திரும்பி வந்து நந்தியையும் , சிவபெருமானையும் முதலில் வணங்கிய முறைப்படி வணங்க வேண்டும்.

• அடுத்து மீண்டும் திருச்சுற்றில் வலம் வந்து அபிசேகத் தீர்த்தம் விழும் பொய்கை வரை சென்று திரும்பி, முதலில் வணங்கிய முறைப்படி நந்தியையும் , சிவபெருமானையும் வணங்க வேண்டும்.

இவ்வாறு மூன்று முறை வணங்க சிவ புண்ணியத்தைப் பெறலாம்.

ஏன் பிரதோஷ நாளில் வலமும், இடமும் மாறி மாறி சுற்றி வழிபட வேண்டும் என்பதையும் நமது ஓம் நமசிவாய குழுவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விஷம் தேவர்களைத் துரத்தியது , தப்பிக்க நினைத்து ஓடிய தேவர்கள் , கயிலைக்குச் சென்று இறைவனை வலம் வர ஆலகால விஷம் எதிர்ப்புறமாக வந்து மறித்தது. தேவர்கள் பயந்து திரும்பி , இடப்புறமாக ஓட , விஷம் மீண்டும் எதிர்ப் பக்கம் சூழ்ந்தது. இப்படி வலமும், இடமும் தேவர்கள் பயந்து ஓடிய நிகழ்ச்சியே சோம சூக்தப் பிரதட்சிணம் என்று பெயர் பெற்றது.

எனவே பிரதோஷ நாளில் இறைவனை வலமும், இடமும் மாறி மாறி சுற்றி வணங்குதால் நம்மை சுற்றி அமைந்துள்ள விஷம் போன்ற கெட்ட எதிர்வினை ஆற்றல்கள் விலகி நற் பலன்களைத் தரும்.

Share:

Tamil Nadu HSE Result 2019

Tamil Nadu HSE Result 2019:

தமிழகத்தில் +2 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான இணையதளங்களான tnresults.nic.in, dge1.tn.nic.in மற்றும் dge2.tn.nic.in. ஆகிய மூன்று தளங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

டந்த ஆண்டில் மே மாதம் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியாகிறது. 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட பொதுத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர்.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை,

www.tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in


ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

Application  இல் பார்க்க...

கூகுள் ப்ளே ஸ்டோரில் 'TN HSE Results' என சர்ச் செய்து ரிசல் வெளியாகும் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ப்ளஸ் டூ - முடிவுகளை அறிவது எப்படி?


1. மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.
2. HSE result என்ற பாக்ஸை க்ளிக் செய்யவும்.
3. ரோல் நம்பரை குறிப்பிட வேண்டும்.
4. சப்மிட் செய்ய வேண்டும்.
5. இதன்பின்னர் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மகர ராசி♑

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மகர ராசி♑



எவரிடத்திலும் ஏற்ற தாழ்வுகள் இன்றி அனைவரிடத்திலும் சமமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே,

உறவினர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகள் மற்றும் பாராட்டுகளை பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும். பெரியவர்களிடம் நிதானத்துடன் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் மற்றும் லாபம் உண்டாகும்.
குடும்ப நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான யோசனைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கட்சி சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொதுநல பணியில் ஈடுபடுவோர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும்.

விவசாயிகளுக்கு :

விவசாயத்தில் எதிர்பார்த்த விளைச்சல்களால் எண்ணிய லாபம் கிடைக்கும். மனை தொடர்பான விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்வது எதிர்பார்த்த பலனை உருவாக்கித் தரும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் சில அலைச்சல்கள் நேரிடும்.

வியாபாரிகளுக்கு :

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் சக ஊழியர்களிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் முனைவோர் புதியதொரு இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் நற்பலனை உருவாக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். வெளியூர் சென்று கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். விளையாட்டுத் துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு :

மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சில மனக்கசப்புகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் அறிவுரைகள் முன்னேற்றமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். சக பணியாளர்களிடம் உரையாடும்போது கனிவான வார்த்தைகளை பயன்படுத்துவது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். மூத்த கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்கான முயற்சிகள் ஈடேறும்.

பரிகாரம் :

சனிக்கிழமைதோறும் ஜீவசமாதி சென்று வழிபட்டு வரவும்.
Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கும்ப ராசி♒!!

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கும்ப ராசி♒!!

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019
விகாரி வருடம்


திறமையும், பொறுமையும், எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே !!

மனதளவில் எதிர்பார்த்த சில செயல்கள் நிறைவேறும். பெரியோர்களின் ஆதரவுகள் மனமகிழ்ச்சியை அளிக்கும். புதிய முயற்சிகளில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின் ஈடேறும். மனதிற்கு விரும்பிய ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புத்திரர்களிடம் சற்று கனிவாக நடந்து கொள்ளவும். பூர்வீக சொத்துக்களில் சில விரயங்கள் ஏற்பட்டு மறையும். சுரங்கம் தொடர்பான பணிகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமான பலன்கள் உண்டாகும். தாய்மாமன் உறவுமுறைகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். நண்பர்களின் மூலம் புதிய முயற்சிகளில் ஆதாயமான பலன்கள் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மூத்த தலைவர்களால் சாதகமான பலன்கள் ஏற்படும். பொறுப்புகளை பகிரும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மற்றவர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். எதிர்பாலின மக்கள் தொடர்பான கருத்துகளை கூறும்போது சற்று சிந்தித்து செயல்படவும்.

விவசாயிகளுக்கு :

எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனை தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும். வேலையாட்களினால் சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும். புதிய மனைகள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்கள் வழியில் ஆதாயமான பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பெரிய முதலீடு செய்யும்போது கவனம் வேண்டும். தொழில் போட்டிகளை சமாளிப்பதற்கான ஆதரவுகள் கிடைக்கும். கூட்டாளிகளால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

பெண்களுக்கு :

பணியிடத்தில் உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் உண்டாகும். கணவன், மனைவியிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். குடும்ப பெரியவர்களுடன் சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாமன் வகை உறவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் மற்றும் ஊதிய உயர்வு போன்றவை ஏற்படும். சிறுதூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு பல தடைகளுக்கு பின்பே எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சம வயதினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.

பரிகாரம் :

புதன்கிழமைதோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு வர எண்ணத் தெளிவு உண்டாகும்.
Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : துலாம் ராசி♎

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : துலாம் ராசி♎


தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019
விகாரி வருடம்



வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் சமநிலையுடன் எதிர்கொள்ளும் துலாம் ராசி அன்பர்களே !!

மனதில் நினைத்து வந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் உண்டாகும். திட்டமிட்ட காரியத்தில் இருந்துவந்த தடை தாமதங்கள் அகலும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் தோற்றப்பொழிவு மேம்படும். வெளிவட்டார தொடர்புகளில் கவனம் வேண்டும். இளைய உடன்பிறப்புகளிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உறவுகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நன்மையளிக்கும். புத்திரர்களின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல்-வாங்கலின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையை அளிக்கும். நீர்நிலை சார்ந்த தொழில் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். புதிய முயற்சிகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மூத்த தலைவர்களிடம் கலந்து ஆலோசித்து செயல்படுத்துவது நன்மையளிக்கும். கட்சி சார்ந்த பணிகளால் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு மனை தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். பாசன வசதிகளின் தன்மை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பயிர்களை தேர்வு செய்வது நன்மையளிக்கும். வரப்பு தொடர்பான பிரச்சனைகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். விளைச்சலுக்கு உண்டான லாபம் எண்ணிய வகையில் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு :

தொழில் சார்ந்த சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கடல் சார்ந்த பொருட்களின் மூலம் எண்ணிய லாபம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளுடன் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். விளையாட்டு துறையில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சித்துறையில் புதிய சிந்தனைகள் மற்றும் பயணங்கள் மேலோங்கும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சாதகமாக அமையும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். எந்த விஷயத்தையும் செயல்படுத்தும்போது சற்று நிதானத்துடன் செயல்படுத்துவது நன்மையளிக்கும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் மேம்படும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சாதகமாக அமையும். சக ஊழியர்களின் உதவிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் உடல் சோர்வும், அலைச்சலும் ஏற்படும். செய்யும் செயல்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு திறமைக்கேற்ப அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்ப்பது நன்மையளிக்கும். புதுவிதமான அனுபவத்தினால் புதிய ரசிகர்களை கவர்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பரிகாரம் :

செவ்வாய்க்கிழமைதோறும் செண்பக மலர்களால் முருகரை வழிபட்டு வர சுபிட்சமான சூழல் உண்டாகும்.
Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மேஷ ராசி♈!!

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மேஷ ராசி♈!!



வேகமும், துடிப்பும், உயர்ந்த சிந்தனைகளும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே !

புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மேலும், அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஆதரவும், வழிகாட்டுதலும் ஏற்படும். மனைவிவழி உறவினர்களால் ஆதரவான சூழலும் ஏற்படும். பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். மேலும், புதுவிதமான அனுபவம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். மனதில் நினைத்த செயல்களை நினைத்த விதத்தில் சில தடைகளுக்குப்பின் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த முடிவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் சற்று கடினமாக செயல்பட வேண்டும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு கீர்த்திகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். உடன் இருப்பவர்களால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். கோப வார்த்தைகளைத் தவிர்த்து சற்று நிதானமாக செயல்படுவது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு :

எதிர்பார்த்த விளைச்சலால் லாபம் உண்டாகும். புதிய மனை மற்றும் விவசாயம் தொடர்பான கருவிகளை வாங்குவதற்கான உதவிகள் சாதகமாக அமையும். பாசன வசதிகள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளும்போது சற்று சிந்தித்து செயல்படவும். மறைமுக எதிர்ப்புகளால் ஏற்பட்டு வந்த காலதாமதம் குறையும். தொழில் நிமிர்த்தமான எதிர்பார்த்த கடன் வசதிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் சற்று நிதானமாக செயல்படுவது நன்மையளிக்கும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழலும், தகுந்த வழிகாட்டுதலும் ஏற்படும். விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளி தேசங்கள் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த வரன்கள் காலதாமதத்திற்கு பின்பு அமையும். உத்தியோகத்தில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு பணி இடமாற்றம் ஏற்படலாம். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் எதிர்பார்த்து கொண்டிருந்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உடன் பணிபுரிபவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்கள் சில போராட்டங்களுக்கு பின்பு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்கள் உண்டாகும். தேவையற்ற கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

பரிகாரம் :

புதன்கிழமைதோறும் பெருமாளை தரிசித்து வருவதால் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம் -2019-2020:சிம்ம ராசி .

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம் -2019-2020 சிம்ம ராசி .

அஞ்சா நெஞ்சமும், தைரியமும் உடைய சிம்ம ராசி அன்பர்களே !

மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்பாடும். குடும்ப நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் தெளிவு பிறக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், பாராட்டும் காலதாமதமாக கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். ஆன்மீகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். பொருளாதார நிலையில் மறைமுக வருவாய்கள் கிடைக்கும். மேடை பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் உண்டாகும். மேலும், விளைச்சலுக்கு உண்டான விலை கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வரப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உறவினர்களுக்கிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் ஏற்படும். கால்நடைகளால் லாபகரமான சூழல் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். புதிய நபர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும்.

மாணவர்களுக்கு :

கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஆலோசனைகள் மாற்றமான சூழலை உண்டாக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனத்தை குறைக்கவும்.


பெண்களுக்கு :

தாய் வீட்டுவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். கணவன், மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில் சுப செலவுகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் சிறிது தடைக்கு பின்பு நற்பலன் ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் சாதகமான இடமாற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை சிறு தடைக்கு பின்பே கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்கள் புதிய வாய்ப்புகளுக்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டும். மூத்த கலைஞர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் பழகும்போது கவனம் வேண்டும். வரவேண்டிய தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.

பரிகாரம் :

ஞாயிறுதோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம் 2019-2020: தனுசு ராசி

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம் - தனுசு ராசி



எதிலும் வேகமும், துடிப்பும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே !

மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். குடும்ப நபர்களை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய வெற்றி உண்டாகும். மனை சார்ந்த பிரச்சனைகள் குறையும். புத்திரர்கள் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுப செயல்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சற்று நிதானத்துடன் செயல்படவும். கௌரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் சற்று கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். கட்சி சார்ந்த பணிகளால் பொறுப்புகளும், அலைச்சகளும் அதிகரிக்கும். சூழ்நிலைக்கேற்ப அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வது நன்மையளிக்கும். வேகத்தை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மை பயக்கும்.

விவசாயிகளுக்கு :

விவசாயம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்து கொண்டிருந்த உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

வியாபாரிகளுக்கு :

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் சாதகமாக அமையும். உறவுகள் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி சற்று அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்கள் இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடம் கோபத்தை விடுத்து நிதானத்துடன் அனுசரித்து செல்லவும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த ஊதியத்துடன் பணி வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

மாணவர்களுக்கு :

கல்வியில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் எதிர்பார்த்த அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

பெண்களுக்கு :

பெண்களுக்கு உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். தம்பதிகளுக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மை பயக்கும்.

கலைஞர்களுக்கு :

சிறிது போராட்டத்திற்கு பின்பே சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடம் உரையாடும்போது சற்று நிதானம் வேண்டும். சம வயதினரால் ஆதரவான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த ஆதரவுகள் குறைவாக இருப்பினும் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

பரிகாரம் :

குருமார்களை வியாழக்கிழமைதோறும் வணங்கி வர மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020: விருச்சிக ராசி

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம்
 

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019 விருச்சிக ராசி   

கோபமும், வேகமும் மற்றும் நியாயத்திற்காக போராடும் குணமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே !

வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை ஏற்படும். குடும்ப நபர்களுக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாகனப் பயணங்களில் சற்று நிதானம் வேண்டும். குலதெய்வ வழிபாட்டிற்கு சென்று வருவீர்கள். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். மனதில் ஆன்மீகம் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். தொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப நபர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுகள் மூலம் நற்பெயர்கள் உண்டாகும். கட்சி சார்ந்த வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். கௌரவ பதவிகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

விவசாயிகளுக்கு :

விவசாய பணிகளில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். முன்கோபத்தை தவிர்த்து சூழலுக்கு தகுந்தாற்போல் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். சந்தையில் விலைக்கு ஏற்ப பயிர்களை நிர்ணயம் செய்து கொள்ளவும்.

வியாபாரிகளுக்கு :

தொழில் தொடர்பான அலைச்சல்களால் புதிய அனுபவம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையை தரும். பிரபலமானவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.


மாணவர்களுக்கு :

கல்வியில் சிறு சிறு தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பயணங்கள் முன்னேற்றமான சூழலை உண்டாக்கும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

பெண்களுக்கு :

குடும்ப நபர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் ஆதரவான சூழல் உண்டாகும். தாய்வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் அலைச்சலுக்கு பின் ஈடேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவால் நன்மை உண்டாகும். அரசு தொடர்பான கோப்புகளை கையாளும்போது கவனம் வேண்டும். உத்தியோகத்தில் ஏற்படும் எதிர்பாராத சில இடமாற்றங்களால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.


கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கவிதை மற்றும் கதைகளில் அனைவரின் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும்.


பரிகாரம் :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர பொருளாதார மேன்மையும், ஆதரவும் உண்டாகும்.







Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 ரிஷப ராசி

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... விகாரி வருடம்  !!

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019
விகாரி வருடம்


உழைப்பாலும், அழகிய பேச்சுக்களாலும் அனைவரையும் கவரக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே !!

தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனை மற்றும் வாகனம் தொடர்பான சில விரயங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். புத்திரர்களின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பூர்வீக சொத்துகளால் சில விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நற்பலனை உருவாக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபடுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கட்சி சார்ந்த பயணங்கள் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். கட்சி சார்ந்த பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மூத்த அரசியல் தலைவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தாலும் விற்பனை விலையால் எண்ணிய லாபம் குறையும். மற்ற விவசாயிகளிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பெரிய முதலீடுகளை செய்வதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். தொழில் கூட்டாளிகளிடம் கனிவாக பேசுவதன் மூலம் நற்பலன்கள் உண்டாகும்.


மாணவர்களுக்கு :

மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் படிக்க வேண்டும். உயர்கல்வி சார்ந்த பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் சற்று பொறுமையுடன் செயல்படவும்.

பெண்களுக்கு :


பெண்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். புத்திரர்களால் சில மனவருத்தங்கள் நேரிடலாம். பெரியோர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பது சேமிப்புகளை அதிகப்படுத்தும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். சக பணியாளர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மூத்த அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். புதுவிதமான சிந்தனைகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.


கலைஞர்களுக்கு :


கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். புதிய வாய்ப்புகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும்.

பரிகாரம் :

தினமும் விநாயகரை வழிபட்டு வர தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மீன ராசி

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மீன ராசி

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019
விகாரி வருடம்

https://intamilworld.blogspot.com/2019/04/2019-2020_8.html


பிறரை நல்வழிப்படுத்துவதிலும், எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் வல்லமையும் கொண்ட மீன ராசி அன்பர்களே !

தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும். மனதில் இருந்துவந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறப்புகளிடம் சற்று அனுசரித்து செல்லவும். உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். வெளியூர் செல்வதற்கான பயணங்கள் கைகூடும். ஆன்மீகம் தொடர்பான மனிதர்களின் நட்புகள் கிடைக்கும். குடும்ப நபர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவைகளை அறிந்து செலவு செய்து நெருக்கடியை தவிர்க்கவும். சுபசெயல்கள் தொடர்பான முயற்சிகளில் சிறிது அலைச்சலுக்கு பின் எண்ணிய எண்ணம் ஈடேறும். எதிர்பாராத பொருள் வரவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சொத்து தொடர்பான சில விரயங்கள் ஏற்பட்டு மறையும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். திறமைக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். கோபத்தை தவிர்ப்பதன் மூலம் நற்பெயர் உண்டாகும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் சற்று நிதானத்துடன் செயல்படுவது நன்மையளிக்கும். எதிர்பார்த்த சில முடிவுகள் காலதாமதத்திற்கு பின் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு :

விவசாயத்தில் இருப்பவர்கள் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப பயிர் விளைச்சலை தேர்வு செய்து கொள்வது நன்மையளிக்கும். புதிய ரக பயிர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வரப்பு சம்பந்தமாக சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

வியாபாரிகளுக்கு :

தொழிலில் எதிர்பார்த்த லாபகரமான சூழல் உண்டாகும். போட்டிகள் குறைந்து முன்னேற்றமான சூழல் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். புதிய நபர்களின் அறிமுகம் புதுவிதமான மாற்றத்தை உருவாக்கும்.

மாணவர்களுக்கு :


மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்களை பெற முயற்சி செய்ய வேண்டும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளில் கவனத்தை செலுத்துவதை குறைத்து கொள்ளவும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகள் உண்டாகும்.

பெண்களுக்கு :


உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களுடன் அனுசரித்து செல்லவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்கிடையே புரிதல் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் சாதகமாக அமையும்.


உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் திருப்தியான சூழல் உண்டாகும். உங்கள் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். தடைப்பட்ட இடமாற்றம் சாதகமாக அமையும். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு சாதகமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை அளிக்கும். வாய்ப்புகளில் இருந்துவந்த தடைகள் அகலும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.


பரிகாரம் :

காவல் தெய்வங்களை வழிபட்டு வர தொழில் சார்ந்த இன்னல்கள் அகலும்.


Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கன்னி ராசி

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கன்னி ராசி♍!!

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019
விகாரி வருடம்



சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் சிந்தித்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே !!

முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் மற்றும் உயர்வு உண்டாகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் பெரியவர்களின் வழிகாட்டுதல் முன்னேற்றத்தை உருவாக்கும். திறமைகளை வெளிப்படுத்தும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். புதிய நபர்களிடம் உரையாடும்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். மனை தொடர்பான விவகாரங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
புத்திரர்களின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படுவது உங்கள் மீதான செல்வாக்கை மேம்படுத்தும். சுப செயல்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். தொண்டர்களிடையே கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது செல்வாக்கை மேம்படுத்தும். புதிய முடிவுகளில் மூத்த தலைவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நன்மையளிக்கும்.


விவசாயிகளுக்கு :


விவசாயத்தில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். உறவினர்களின் வகையில் ஆதரவான சூழலும், சில மனக்கஷ்டங்களும் தோன்றி மறையும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள்.

வியாபாரிகளுக்கு :

தொழிலில் செய்யும் சிறு மாற்றங்கள் புதுவிதமான அனுபவத்தை உருவாக்கும். கூட்டாளிகளால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்ப்பது நன்மையளிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

மாணவர்களுக்கு :


மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களை பெற சற்று கடினமாக முயற்சிக்க வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் புதிய அனுபவத்தையும், தூண்டுதலையும் ஏற்படுத்தும். நண்பர்களின் ஆலோசனைகள் மாற்றமான சூழலை உருவாக்கும்.

பெண்களுக்கு :

பொருளாதார நிலையில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். புத்திரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் உண்டாகும். சக பணியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.


கலைஞர்களுக்கு :


கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரமும், செல்வாக்கும் கிடைக்கும். பணவரவுகளில் சற்று கவனமுடன் இருப்பது நன்மையளிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமாகும்.

பரிகாரம் :

புதன்கிழமைதோறும் வராக பெருமானை வழிபட்டு வருவதால் தொழில் மற்றும் சிந்தனை சார்ந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும்.





Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கடக ராசி

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : கடக ராசி ♋

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019
விகாரி வருடம்


விடாமுயற்சியுடன் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கடக ராசி அன்பர்களே !!

மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் சற்று நிதானமாக அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். புதிய முயற்சிகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு செய்வது முன்னேற்றத்தை அளிக்கும். தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சற்று காலதாமதமான பலனை உருவாக்கும். தாய்வழி உறவுகளிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். மனை சம்பந்தமான விவகாரங்களால் சில விரயச் செலவுகள் நேரிடலாம். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். திட்டமிட்ட காரியத்தில் சற்று நிதானத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைய இயலும்.


அரசியல்வாதிகளுக்கு :


அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். கட்சி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடன் இருப்பவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு :

எதிர்பார்த்த பயிர் உற்பத்தியின் மூலம் எண்ணிய லாபம் கிடைக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும். சக விவசாயிகளிடம் தேவையற்ற மோதல்களை தவிர்ப்பது நன்று.

வியாபாரிகளுக்கு :


வேலையாட்களிடம் சற்று அனுசரித்து நடந்துகொள்வது நன்மையளிக்கும். எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் லாபம் உண்டாகும். உறவினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது முன்னேற்றத்தை அளிக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் உண்டாகும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் சாதகமான பலனை அளிக்கும்.

பெண்களுக்கு :

மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். புத்திரர்களிடம் கனிவுடன் பழகவும். மனதில் உள்ள கருத்துக்களை குடும்ப பெரியோர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் மனத்தெளிவு உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.


உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்த்து நிதானமாக பழகவும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய வாய்ப்புகள் உண்டாகும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் சில தடைகளுக்கு பின்பு சாதகமாக அமையும். சம வயதினர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடன் இருப்பவர்களுடன் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

வழிபாடு :

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.






Share:

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மிதுன ராசி


தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019-2020 : மிதுன ராசி

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2019
விகாரி வருடம்


அறிவும், சிந்தனை வளமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே !!

மனதில் புதியதொரு இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் ஈடேறும். மனை விருத்திக்கான முயற்சிகள் நன்மையளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். குடும்ப நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சுபச் செயல்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் சேமிப்பு உயரும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படவும்.


அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உயரதிகாரிகளால் சாதகமான பலன்கள் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேச்சுக்களை நயமாக பேசுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாக்குறுதிகளை காப்பாற்றுவதன் மூலம் நற்பெயர்கள் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்று.

விவசாயிகளுக்கு :


சந்தையின் விலைக்கேற்ப பயிர்களை நிர்ணயம் செய்வது நன்மையளிக்கும். வரப்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும். கால்நடைகளால் ஆதாயம் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு :


புதிய தொழில் தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். தொழிலை விரிவுப்படுத்துவதற்கான கடன் உதவிகள் சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பதற்கான உதவிகள் சாதகமாக அமையும்.

மாணவர்களுக்கு :

கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வு வேண்டும். பெற்றோரின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை அளிக்கும். நண்பர்களிடம் சிறு மனவருத்தங்கள் தோன்றும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் தெளிவு உண்டாகும்.

பெண்களுக்கு :

கணவன், மனைவி இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குழந்தைகளிடம் சற்று கனிவுடன் நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் எண்ணங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளவும். குடும்ப பெரியோர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் பணி உயர்வு சாதகமாக அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அலைச்சலுக்கு பின் கிடைக்கும். சக ஊழியர்களால் மனவருத்தங்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேற்றம் அடைவீர்கள். பணி தொடர்பான விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும்.

கலைஞர்களுக்கு :

கிடைக்கும் வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்தி கொள்ளவும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணுகுமுறைகளை மாற்றிக்கொள்வது நன்மையளிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் வேண்டும். சக கலைஞர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.

பரிகாரம் :

செவ்வாய்க்கிழமைதோறும் முருகரை வழிபட்டு வர தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

Share:

பி.எஸ்.எஸ்.ஒரு தனியார் அமைப்புதான் – திட்டக் கமிஷன் விளக்கம்

பி.எஸ்.எஸ்.ஒரு தனியார் அமைப்புதான் – திட்டக் கமிஷன் விளக்கம்

சமீபத்தில் பி.எஸ்.எஸ்.நடத்தும் பயிற்சிகள் மற்றும் அதன் சான்றிதழ்கள் பற்றிய விவாதம் நடந்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாத அக்கு ஹீலரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். முதலில் அதைப் படித்து விடலாம்.

பி.எஸ்.எஸ்.அரசு அமைப்பா?

பாரத் சேவக் சமாஜ் என்று அழைக்கப்படும் பி.எஸ்.எஸ் அரசு அமைப்பா? தனியார் அமைப்பா? என்ற குழப்பம் பலருக்கு இன்னும் நீடிக்கிறது. பி.எஸ்.எஸ் பற்றிய சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் அக்கு ஹீலர் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது.
பி.எஸ்.எஸ். அரசு அமைப்பா? இல்லயா? என்பதை மூன்று விஷயங்கள் மூலம் நாமே தெரிந்து கொள்ளலாம்.
v ஒரு அரசு அமைப்பின் இயக்குநர் அல்லது தலைவர் அரசால் நியமிக்கப் பட்டவராகவும், அரசு ஊதியம் பெறுபவராகவும், கெஜெட்டட் ரேங்க் அதிகாரியாகவும் இருப்பார். பி.எஸ்.எஸ்.சின் தலைவரோ, செயலாளரோ இப்படிப்பட்டவர் இல்லை.
v அரசு ஏற்படுத்தும் ஒரு அமைப்பு மாநில , மத்திய அரசுகளின் பதிவு பெற வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை ஏற்படுத்திய அமைப்பு NCVT. ஐ.டி.ஐ.மூலமாக தொழிற்கல்வி வழங்கும் அமைப்பு. இதை அறக்கட்டளையாகவோ, சங்கமாகவோ பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அரசாணை மூலம் நிறுவப் பட்ட அரசின் அமைப்புகள் இப்படி பதிவு பெற வேண்டிய அவசியமில்லை. தனியார் அமைப்புகள் மட்டும்தான் பதிவு செய்ய வேண்டும். பி.எஸ்.எஸ் கேரள அரசின் சங்கப்பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள ஒரு என்.ஜி.ஓ. ஆகும்.
v அரசின் கீழ் வரும் அமைப்பு என்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அதிகாரி அந்த அமைப்பில் பணிபுரிவார். உதாரணமாக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பல்கலைக் கழகத்தில் தகவல் அதிகாரி இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். பி.எஸ்.எஸ்.ஸில் இப்படி ஒரு துறையோ, அதிகாரியோ இல்லை.

...மேற்கண்டவற்றின் மூலம் பி.எஸ்.எஸ் ஒரு தனியார் அமைப்புதான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு சங்கம் அல்லது அறக்கட்டளை பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கக் கூடாதா? என்று தோன்றலாம். அப்படி வழங்கும் உரிமை இருக்கிறது என்றால் நம் ஊரில் செயல்படும் நடிகர்களுக்களுக்கான ரசிகர் மன்றங்கள், வியாபாரிகளின் சங்கங்கள் அனைத்தும் பதிவு பெற்ற சங்கங்கள் தான். இவைகளும் சான்றிதழ் வழங்க முடியுமா?
மற்ற சங்கங்களுக்கும் , பி.எஸ்.எஸ்.சிற்கும் இரண்டு வேறுபாடுகள். இந்த அமைப்பைத் துவக்கியது முன்னாள் பிரதமர் என்பதும், அரசிடமிருந்து நிதி பெற்றிருக்கிறது என்பதும் தான். அரசிடமிருந்து ஆயிரக்கணக்கான சங்கங்கள் நிதி பெற்று வருகின்றன. அவை எதுவும் தான் ஒரு அரசு அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டதில்லை.


பி.எஸ்.எஸ்.பயிற்சிகளின் குழப்பங்கள்:
v எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களைக்க் கொண்டு இயங்கும் பி.எஸ்.எஸ், அங்கீகாரம் வழங்கும் போது எந்த ஒரு கல்வி விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. பி.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சிகளுக்கான பாடத்திட்டம் மையப்படுத்தப்பட வில்லை.ஒவ்வொரு பயிற்சி மையமும் ஒவ்வொரு பாடத்தை வைத்துக் கொள்கிறார்கள்.
v பி.எஸ்.எஸ் துவங்கி இந்த அறுபது ஆண்டுகளில் 8000 பயிற்சி மையங்களில் படித்த எந்த ஒரு மாணவரும் பெயில் ஆனதில்லை. (கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் சாதனை). பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி அடைவதில்லை. அவர்களுக்கான மறு தேர்வு, மறு கூட்டல், மறு திருத்தல், விடைத்தாள் நகல் பெறுதல் போன்ற கல்வி உரிமைகள் இல்லாத ஒரே நிறுவனம் உலகிலேயே இது மட்டும்தான்.
v 2011 ஆம் ஆண்டு உயர் நீதி மன்றமும், 2012 ஆம் ஆண்டு இந்திய நர்சிங் கவுன்சிலும் நர்சிங் பயிற்சிகளை பி.எஸ்.எஸ் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்ட பின்பும் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
v அரசு நேரடியாக மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வரும் மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் போன்றவற்றில் முறையான அரசு, கவுன்சில்களின் அனுமதியின்றி டிப்ளமோ பயிற்சிகளை நடத்தி வருகிறது.
v அக்குபங்சர் பயிற்சிகளில் பட்டங்கள் போன்று தோற்றமளிக்கும் எம்.டி, பி.எட். போன்ற சான்றிதழ்களையும் வழங்குவருகிறது.
v சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பி.எஸ்.எஸ்.வழங்கும் சான்றிதழ்களில் மத்திய அரசின் ராஜ முத்திரை இடம்பெற்று வந்தது. பின்பு அரசுச் சின்னம் நீக்கப் பட்டது.

பி.எஸ்.எஸ்.வழங்கும் மாற்று மருத்துவச் சான்றிதழ்களை வைத்து மருத்துவத் தொழில் செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் தகவல் அலுவலர் “பி.எஸ்.எஸ்.சான்றிதழ்களை வைத்து மருத்துவம் செய்ய முடியாது” என்று பதிலளித்துள்ளார்.
. . . .இது போன்ற கல்வி மோசடியில் ஈடுபட்ட மேகாலயா அரசின் சி.எம்.ஜெ. பல்கலைக்கழகம் கடந்த மாதம் கலைக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு நிறுவனத்திற்கே இந்த நிலை என்றால் ஒரு தனியார் சங்கம் என்ன ஆகும்?
(2007 இல் கம்பம் அகாடமியும் பி.எஸ்.எஸ். ஒரு அரசு நிறுவனம் என்று நம்பி அங்கு இணைப்பு பெற்று பயிற்சி நடத்திவந்தது. பின்பு பி.எஸ்.எஸ்.பற்றிய விபரங்கள் தெரிந்த பிறகு கம்பம் அகாடமி பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது. பி.எஸ்.எஸ்.சோடு இருந்த வருடங்களில் பயின்ற மாணவர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு பல்கலைக்கழகப் பயிற்சிகளை எந்த வித பயிற்சிக் கட்டணமும் இல்லாமல் வழங்கியுள்ளது. ஏராளமான ஆவணங்களோடு பி.எஸ்.எஸ். பற்றிய புகாரை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அளித்துள்ளோம்.)
------------------------------------------------------------------------------------ அக்கு ஹீலர் – ஆகஸ்ட் 2013------------
இதன் தொடர்ச்சியாக அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் சார்பாக இந்திய அரசின் திட்டக்கமிஷனிற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை அனுப்பியிருந்தோம். ஏன் கேள்விகளை திட்டக்கமிஷனிற்கு அனுப்ப வேண்டும்? பி.எஸ்.எஸ்.தனது இணைய தளம். லெட்டர் பேடு, சான்றிதழ்கள் அனைத்திலும் திட்டக்கமிஷனால் (Planning commision) துவங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. அதற்கான பாராளுமன்ற ஆணையோ சட்டமோ பாராளுமன்றத்தில் இல்லை.
இது பி.எஸ்.எஸ்.சான்றுதழின் அடிப்பகுதிக் குறிப்பு:

4. CERTIFICATEwith Govt logo

பி.எஸ்.எஸ்.பற்றிய கட்டுரை வெளியிட்ட ஜூனியர் விகடனுக்கு பி.எஸ்.எஸ்.சின் செயலாளர் மாய்ஸன் ஒரு மறுப்பை எழுதியிருந்தார். அதில் பி.எஸ்.எஸ்.என்பது திட்டக்கமிஷனால் பாராளுமன்றத்தில் துவக்கப்பட்ட அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஜூனியர் விகடனில் வந்த மறுப்பு:

20130729_183453-1


சரி, இது குறித்து திட்டக் கமிஷனிடமே கேட்கலாம் என்று முடிவு செய்தோம்.
அதன் படி மூன்று கேள்விகளை அனுப்பினோம்.
1. பி.எஸ்.எஸ்.அரசு அமைப்பா?
2. பி.எஸ்.எஸ். திட்டக்கமிஷனால் நிதி பெறும் அமைப்பா?
3. பி.எஸ்.எஸ்.தனியார் அமைப்பா?

இதற்கு பதிலளித்த திட்டக்கமிஷன் அதிகாரி “பி.எஸ்.எஸ்.அரசு அமைப்பு இல்லை. அது எந்த ஒரு நிதியையும் திட்டக் கமிஷனிடம் இருந்து பெறும் அமைப்பும் இல்லை. அது ஒரு தனியார் அமைப்பு” என்று பதிலளித்துள்ளார்.
BSS RTI FULL





பி.எஸ்.எஸ்.குறித்த விரிவான விசாரணையை காவல்துறை துவங்கியுள்ளதாக கடைசித் தகவல்.
Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்