Tamil Community

கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் நல்லதா?

கோவில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் நல்லதா? கெட்டதா?


பொதுவாக தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம். இதுபோன்ற சில நிகழ்வுகள் நம்முடைய மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கு சகுனம் பார்க்கத் தேவையில்லை.

 சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய், அது உடையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும்.

 தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை மேம்படும்.

தேங்காயின் மேல்பகுதி அதாவது கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால் இல்லத்தில் செல்வம் பெருகும்.

கண் பகுதி சிறியதாகவும், கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் அமைதி பெருகும்.

தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும்.

சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பு  இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்.

தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்சனைகள் உருவாகும்.

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை.

Share:

இராசியில் சனி இருந்தால் என்ன பலன்?


இராசியில் சனி இருந்தால் என்ன பலன்?

மேஷ ராசி :

மேஷ ராசியில் சனிபகவான் இருந்தால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். வீண் சண்டைகள் ஏராளமாக ஏற்படும். வாழ்க்கையில் சரிவும், துன்பமும் அடுத்தடுத்து உண்டாகும். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும்.

ரிஷப ராசி :

ரிஷப ராசியில் சனிபகவான் இருந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி :

மிதுன ராசியில் சனிபகவான் இருந்தால் புத்திர பாக்கியம் தாமதப்படும். வாழ்க்கையில் துயரமான சம்பவங்கள் நிகழும். போட்டிகளில் இழப்பு உண்டாகும். பொது வாழ்க்கையில் தோல்வியும், தொந்தரவும் உண்டாகும்.

கடக ராசி :

கடகத்தில் சனி இருந்தால் பொருளாதார தடை உண்டாகும். தாயாரின் தயவில் வாழ்க்கை ஓடும். எடுத்த காரியங்களில் அதிகம் தோல்வி உண்டாகும். செய்யாத குற்றங்களுக்கு தண்டனை அனுபவிப்பீர்கள்.

சிம்ம ராசி :

சிம்மத்தில் சனி இருந்தால் எழுத்து துறையில் மேன்மை உண்டாகும். பிள்ளைகளால் சங்கடமும், தொந்தரவும் உண்டாகும். வாழ்க்கை, தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும்.

கன்னி ராசி :

கன்னி ராசியில் சனி இருந்தால் வறுமையான வாழ்க்கை, எளிதில் கோபப்படும் தன்மை, உடலில் பிணி ஏற்படுதல் போன்ற பலன்களை தரும். பல விஷயங்களுக்கு மற்றவர்களை சார்ந்தே செயல்படுவார்கள். வீண் விவாதங்கள் ஏற்படும்.

துலாம் ராசி :

துலாம் ராசியில் சனி இருந்தால் மிகுந்த செல்வ செழிப்பு ஏற்படும். பெண்களால் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். சனிபகவான் சுக்கிரனுடன் சேர்ந்தால் மிகவும் ராஜயோக பலன்கள் உண்டாகும்.

விருச்சக ராசி :

விருச்சகத்தில் சனி இருந்தால் விஷத்தால் துன்பம் ஏற்படும். மிகவும் கண்டிப்பானவராக விளங்குவார்கள். மனதில் சில சஞ்சலங்களும், குழப்பங்களும் உண்டாகும். எதிலும் நிலையற்ற தன்மையுடன் காணப்படுவார்கள்.

தனுசு ராசி :

தனுசு ராசியில் சனிபகவான் இருந்தால் மிகவும் திறமைசாலியாக இருப்பார்கள். எதிலும், போராட்ட குணம் பிரகாசிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற பல தடைகள் உண்டாகும்.

மகர ராசி :

மகர ராசியில் சனிபகவான் இருந்தால் கடினமான உழைப்பால் உயர்வார்கள். பழிவாங்கும் குணம் இருக்கும். வசதியான வாழ்க்கை கிடைக்கும். தேவையில்லாத பழி சொல்லுக்கு ஆளாவீர்கள்.

கும்ப ராசி :

கும்ப ராசியில் சனிபகவான் இருந்தால் தைரியம், துணிவு காணப்படும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலும் உறுதியும் உடையவராக இருப்பார்கள்.

மீன ராசி :

மீன ராசியில் சனிபகவான் இருந்தால் பெருமைமிக்க வாழ்க்கை, புகழ் மற்றும் செல்வாக்குடன் விளங்குவார்கள். அரசியல் அந்தஸ்து கிடைக்கும். சுபகாரியங்களில் அதிக தடைகள் ஏற்படும்.

பரிகாரம் :

சனிபகவான் பு ஜை செய்த தலம் திருநள்ளாறு. ஏழரைச் சனி, அஷ்டம சனி உள்ளவர்கள் சனிதிசை நடைபெறுபவர்கள் திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது உத்தமம். சனிக்கிழமை விரதம் இருப்பது நன்மை அளிக்கும்.

நாளையும் உங்களின் கேள்விகளுக்கான பதில்கள் தொடரும்...!

Share:

குழந்தை உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருக்க


குழந்தை செல்வம் என்பது அனைவருக்கும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்று ஆகும். அந்த குழந்தைக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லை என்றால் தாய், தந்தைக்கு மன உளைச்சல் ஏற்படும்.அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு சென்று பண செலவு செய்ய வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, நாம் இந்நாளில் காணமுடிகிறது. இதற்கு தீர்வை நம்முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்,அவற்றை உங்களுக்கு தெரியும்படி செய்ய வேண்டியே இந்த கட்டுரை. அதற்கு மூன்று பச்சை மரப்பட்டை தேவை
1.ஆத்தி மரப்பட்டை

2.வேடவல்லி மரப்பட்டை

3.வெள்ளை எருக்கன் பட்டை

மேல உள்ள பட்டையைக்களை உறித்து எடுத்து கொள்ள வேண்டும்.
அவற்றை ஒரு கயிறு போல திரித்து குழந்தை கழுத்தில் அணிய வேண்டும் அவ்வாறு செய்தால் அந்த மூன்று பச்சை மரப்பட்டை யின் வாசனையானது குழந்தை உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்