1. உடலில் உப்பின் அளவு சமநிலை குறைவது.
2. உள்ளங்காலில் வழியாக உடலின் சூடு வெளியேறுவது.
உடலுக்கு உப்பு மிகவும் அவசியம், ஆனால் ஆங்கில மருத்துவர்கள், உப்பு சாப்பிட்டால் BP வரும் என்று தவறான கருத்தை உலகில் பிரச்சாரம் செய்து, பலரை நோயாளியாக்கி,. அதற்கு மருந்து கொடுத்து வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைக்கு அடிமையாக்குகிறார்கள்.
உப்பு சாப்பிட்டால் தப்பு என்று யாரெல்லாம் உப்பை குறைவாக சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு குதிகால் வலி வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே இன்று முதல் உங்கள் நாக்கு எவ்வளவு உப்பு வேண்டுமோ அதை சரியான அளவில் அனைத்து உணவுகளிலும் சாப்பிட்டால் மட்டுமே குதிகால் வலி சரியாகும்.
உப்பு சாப்பிட்டால் நோய் வரும் என்று சொல்கிற மருத்துவர்கள், மருத்துவமனையில் வெள்ளை டப்பாவில், சோடியம் குளோரைடு என்ற திரவத்தை ஏன் நோயாளிகளுக்கு கொடுக்கிறார்கள் என்று கேளுங்கள்.
சர்க்கரை உடம்புக்கு கெடுதல் என்று சொல்வார்கள் ஆனால் மருத்துவமனையில் குளுகோஸ் டப்பா கொடுப்பார்கள்.
உப்பு தப்பு என்று சொல்வார்கள் ஆனால் சோடியம் குளோரைடு டப்பாவை கொடுப்பார்கள்.
மீண்டும் சொல்கிறேன் இனிமேல் அனைவரும் அவரவர் நாக்குக்கு எத்தனை உப்பு இருந்தால் சாப்பிடும் பொழுது மகிழ்ச்சியாக இருக்குமோ அந்த உப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
யார் சொல்லியும் கேட்காதீர்கள், அப்போது மட்டும் தான் உடலின் அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யும்.
இரண்டாவதாக நமது உள்ளங்காலை கிரானைட், மார்பிள், டைல்ஸ் போன்ற தளங்களில் கால் வைக்கும் பொழுது நமது உடம்பில் உள்ள உஷ்ணம் இந்த தளங்கள் உறிஞ்சுவதால் குதிகால் வலி வருகிறது.
மார்பிள் கிரானைட் போன்ற தளங்கள் வெப்ப நாடுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆனால் இப்பொழுது வெப்ப நாடுகளில் வீட்டுக்குள் ஏர்கண்டிஷன் பயன்படுத்தி குளுகுளு என்று இருப்பதால் அங்கேயும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
கிரானைட் மிக மிகக் கெட்டது. மார்பில் மிகக் கெட்டது. டைல்ஸ் கேட்டது. மொசைக் பரவாயில்லை. சிமெண்ட் தரை நல்லது. மண் தரை மிக மிக நல்லது.
இப்பொழுது நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் உள்ளங்கால் எந்தத் தறையில் தொட வேண்டும் என்பதை.
உடலில் உஷ்ணமே சக்தி. உடலின் உள் உஷ்ணத்தை அதிகரிப்பதற்காக தான் நான் யோகா செய்கிறோம், வாக்கிங் செல்கிறோம், ஜாக்கிங் செல்கிறோம்.
உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்துவதற்கு பல வித்தைகளை செய்து விட்டு, உள்ளங்காலை கொண்டுபோய் குளுமையான தரையில் வைத்தால், நாம் சேகரித்த மொத்த சூடும் இழந்துவிடுவோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனவே உடல் உஷ்ணத்தை பாதுகாத்து, உப்பை அளவாக சாப்பிட்டால் குதிகால் வலி 3 மாதத்தில் 100 சதவீதம் குணமாகும்.
இவை இரண்டையும் சரி செய்யாமல் மருந்து மாத்திரை சாப்பிட்டால் இந்த ஜென்மத்துக்கு குணமாகாது.
0 $type={blogger}:
கருத்துரையிடுக