எலும்பு முறிவிற்கு முட்டைப் பற்றிடல்...
சாதாரணமாக எலும்பு முறிவு என்றவுடன் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரைப் (Ortho Doctor) பார்க்க ஓடுகிறோம். அவர்களும் உடனே மாவுக்கட்டு என்ற பெயரில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (Plaster of Paris) இல் ஒரு கட்டைப் போட்டு அனுப்பி வைப்பார். அவர் கொடுக்கும் மருந்துகளை நாமும் தேமே என்று சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அவை பொதுவாக வலி கொல்லும் (Pain Killer) மருந்துகள் என்ற பெயரில் வலியை தெரிய விடாமல் வைத்திருக்கும்.
நமக்கு ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதமே வலி. அது மூளைக்குத் தெரிய விடாமல் செய்வதனால், அந்த இடத்தில் பிரச்சினை ஏதும் இல்லை என்று உடல் நினைத்துக் கொண்டு அந்த இடத்தை சரி செய்யும் வேலையை விட்டுவிடும். இது எவ்வளவு கொடுமையான விளைவை உண்டாக்கும் தெரியுமா? அந்த இடமே கெட்டு அழுகிப் போனாலும் உடலுக்கு அது தெரியவே தெரியாது.
எடுத்துக்காட்டாக நமக்கு காலில் முள் குத்தினால், உடனே வலி உண்டாகிறது. பின் அந்த வலி மூளைக்குத் தெரிவிப்பதனால், உடனே காலைத் தூக்கிக் கொள்ளுகிறோம், அடுத்து முள்ளைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.
தொடர்ச்சியாக மருந்துக்களை உட்கொள்ளும் நபரின் கால்கள் உணர்ச்சிகளற்று மரத்துப் போயிருக்கும். அவருக்கு முள் குத்தினாலும் தெரியாது. விளைவு காலில் குத்திய முள் காலைப் புரையோடச் செய்தாலும், அது அவருக்குத் தெரியாது. பின்னர் காலை எடுத்து விட நேரும். இதைத்தான் இந்த ஆங்கில மருத்துவத்தின் வலி நீக்கிகளும் (Analgesic) செய்கின்றன.
ஆங்கில மருத்துவத்தின் உயிர் எதிர் (Antibiotic) மருந்துகளில் பக்க விளைவுகள் அதிகம் இருக்கிறது. அதான் Antibiotic என்னும் பெயரிலேயே உயிருக்கு எதிரானது என்று இருக்கிறதே பின் ஏன் அதை உபயோகித்து உங்கள் உயிரைக் கொன்று கொள்கிறீர்கள்.
ஆங்கில மருத்துவர்கள் உபயோகிக்கும் மருந்துகளில் முக்கியமானது வோவிரான் ஊசியும் ஜெல்லும். இவை சிறுநீரகங்களைச் சிதைத்துவிடும். இது போக ஸ்டீராய்டுகள் வேறு கல்லீரலையும், மண்ணீரலையும் பதம் பார்த்து நடமாடும் பிணமாகவே நம்மை ஆக்கிவிடும் ஜாக்கிரதை. உள்ளுறுறுப்புக்கள் சேதாரமான பின் நாம் வாழ்ந்து பயன்தான் என்ன?
வேறு என்னதான் செய்ய எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே என்று கூறுபவர்கள் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருதாலே போதும். நாம் நமது உடலின் இயக்கத்திற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே நம்மால் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழமுடியும்.
இந்த இடுகையில் எலும்பு முறிவிற்கு எப்படி கட்டுப் போடுவது என்பதை ஒளிப்படக் காட்சியாகவும் படங்களாகவும் வெளியிட்டுள்ளேன். பார்த்து பயனடையுங்கள்.
முதலில் முட்டைப் பற்றிட தேவையான பொருட்கள்
( 1 ) நாட்டுக் கோழி முட்டை (கிடைக்கவில்லை என்றால் லக்கான் கோழி முட்டை உபயோகிக்கலாம்)
( 2 ) உளுந்தம் பொடி மிக மெல்லியதாய் அரைத்தது
( 3 ) நல்லெண்ணெய்
( 4 ) அத்திக்காய் காய வைத்தது மெல்லியதாய் பொடி செய்து அரைத்தது (கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடலாம்)
( 5 ) காடாத் துணி வேண்டிய அளவுக்கு
( 6 ) துளி அளவு சுண்ணாம்பு
முதலில் நாட்டுக் கோழி முட்டைகளை கட்டுப் போட தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கட்டிற்கு 4 முட்டைகள் தேவை என்பதால் 4 முட்டைகள் மட்டும் எடுத்துள்ளேன்.
அடுத்து நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட முட்டை வெள்ளைக் கருவுடன் உளுந்தம் பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொண்டு அத்துடன் அத்திக்காய்ப் பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து நல்ல ஒட்டும் பருவம் வந்தவுடன் அதில் துளியளவு நீற்றுச் சுண்ணாம்பை சேர்த்து பிசைந்து துணியில் தடவி மேலே போட்டு காற்று குமிழ் இல்லாமல் இறுக்கமாக போட்டு கட்டுப் போட்டுவிடவும்.
இந்த முட்டைப் பற்று சாதாரணமாக அலோபதி எலும்பு முறிவு மருத்துவர்கள் போடும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டுப் போடுவது போலன்று. இது எலும்பும், எலும்பு மச்சையும், எலும்பிலுள்ள சவ்வுகளையும் மிக நன்றாக ஒட்ட வல்லது.
இத்துடன் உள்ளுக்குச் சாப்பிட நத்தைச் சூரி எண்ணெயும், வஜ்ஜிர வல்லி என்னும் பிரண்டையை லேகியமாகச் செய்து தர ஒரு வாரத்தில் எலும்பு கூடும்.
இத்துடன் கால்களை அசைக்காமல் இருப்பது அவசியம். நடக்க முயற்சிக்காமல் இருப்பது மிக நல்லது.
இதே எலும்பு முறிவை ஆங்கில வைத்தியத்தில் சரி செய்ய 3 மாதங்கள் ஆகும். அத்துடன் சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் செயலிழப்பு, மண்ணீரல் செயலிழப்பு போன்றவைகளும் போனசாக வழங்கப்படும். இது தேவையா என்று யோசியுங்கள்?
இந்த முட்டைப் பற்றை
# ஒடிந்த எலும்பைச் சேர்க்க மற்றும் எலும்புத் தேய்மானம்,
# சவ்வு கிழிதல்,
# சவ்வு விலகல்,
# இடுப்பெலும்பு தேய்மானம்,
# முதுகுத் தண்டுவட விலகல்,
# கழுத்தெலும்புத் தேய்வு
# ப்ரொக்ஷிமல் ACL டியர்
ஆகியவற்றை குணமாக்கும்
நன்றி - மக்கள் மருத்துவர் சாமீ அழகப்பன்
0 $type={blogger}:
கருத்துரையிடுக