Tamil Community

சகல நோய்களையும் தீர்க்கும் ஜீவ பஸ்ப திருநீறு

 முறையாக சுரகுடுவையில் புடமிட்டு எங்கள் வீட்டில் சகல நோய்களையும் தீர்க்கும் ஜீவ பஸ்ப திருநீறு தயாரித்து வெற்றியும் கண்டேன். அந்த முறையை இன்று சித்தர்களின் குரலில் உங்களுடன் பகிர்கிறேன்... நீங்களும் தயாரித்து பயன் பெறுங்கள்....




(சிறு வயதில் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவாமிகளிடம் மூலிகை ரகசியங்களை பற்றி படிக்கும் போது "போகர் நிகண்டு"என்ற நூலில்  அவர் சொன்ன அபூர்வ ரகசியம் இது.)


விபூதியை கொண்டு அனைத்து வித நோய்களையும் குணமாக்கும் சித்துஇது !!!


நமது நாட்டில் பெரும்பாலும் சாமியார்கள் அவர்களை பார்க்க சென்றால் விபூதி வழங்குவது வழக்கம் !!!


சிறிது வாயில் போட்டு விட்டு சிறிது நெற்றியில் இட்டு விடுவார்கள் !!!


அது பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கும். சரி வெறும் விபூதி மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்று சந்தேங்கம் தோன்றுவது இயல்பு தான்.


இவை வெறும் சித்து மட்டும் இல்லை இவை மருத்துவ குணம் வாய்ந்தது !!!


சிலர் சிறுநீரகத்தில் கல் இருந்தது அவர் கொடுத்த விபூதி மூன்று நாள் சாப்பிட சொன்னார் ஸ்கேன் செய்து பார்த்தும் கல் இல்லை என்று சொல்லி வியப்படைவதை பார்த்து இருக்கிறோம்.


இன்னும் சிலர் கை கால் தீராத வலி இருந்தது அந்த மகான் மந்திரித்து கொடுத்த விபூதி ஒருவாரத்தில் சரி செய்தது என்று சொல்ல கேட்டு இருக்கோம். 


இன்னும் சிலர் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி போன்று அவதியில் இருந்தேன் தினமும் அந்த சாமியார் கொடுத்த விபூதி சாப்பிட்டேன் முழுமையாக குணமாகி விட்டது என்று கேள்விப் பட்டு இருக்கோம்.


சிலர் சொறி, சிறங்கு போன்றவற்றால் அவதி பட்டு இந்த விபூதியை அதன் மீது போட்டும் விபூதியை உண்டும் குணமானதை கண்டு இருக்கோம் !!!


இவை வெறும் கதைகளா அல்லது அவர்கள் சொல்வது உண்மையா ?


இவை அனைத்தும் நிதர்சனமான உண்மை தான். சரி அந்த விபூதி தயாரிப்பது எப்படி !!!


இரண்டு கிலோ சுத்தமான பசுஞ்சாண விபூதி வாங்க வேண்டும். அதில் கீழ் கண்ட பற்பங்களை சேர்க்க வேண்டும்.


1. கல்நார் பற்பம் --- 10 கிராம்

2. படிகார பற்பம் --- 10 கிராம்

3. சிலா சத்து பற்பம் --- 10 கிராம்

4. ஆமையோட்டு பற்பம் --- 10 கிராம்

5. சிருங்கி பற்பம் --- 10 கிராம்

6. நண்டுக்கல் பற்பம் --- 10 கிராம்


1. கல்நார் பற்பம் (சிறுநீரகம்,பிறப்புறுப்பு மண்டலம்),

2. படிகார பற்பம் (குடல்புண்,சிறுநீரகம்),

3. சிலா சத்து பற்பம் (எலும்பு மண்டலம், உடலின் அத்தனை உறுப்புக்கள், சிறுநீரகம், பிறப்புறுப்பு மண்டலம்),

4. ஆமையோட்டு பற்பம் (எலும்பு மண்டலம், வயிறு, கல்லீரல், மண்ணீரல்),

5. சிருங்கி பற்பம் (எலும்பு மண்டலம், இதயம், இரத்தக் குழாய்கள்).

(சிருங்கி பற்பம் என்பது மான் கொம்பு பற்பம் ஆகும்)


இந்த பற்பங்களை 10 கிராம் போதுமானது. இது தான் மருந்து. இவை தான் நோய்களையும் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.


மேலுள்ள ஐந்து பற்பங்களை கலந்து அதை ஒரு விபூதியுடம் கலந்து வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டியது தான். சிலர் கோயிலில் சாமியார் போல் உட்கார்ந்து வரும் நபருக்கு வெறும் விபூதியை இட்டுவிட்டு, கலந்து வைத்திருக்கும் பற்பக் கலவையை ஒரு சிட்டிகை எடுத்து விபூதியை வாயில் போடுவது போல போட்டுவிட்டால், அந்த நபருக்கு எந்த வியாதி இருந்தாலும் போய்விடும் !!!


அதன் பிறகு சாமியாரின் சக்தி பற்றி ஊரெல்லாம் பேசுவார்கள் !!!


இதை சித்து என்றும் சொல்லலாம் மருந்து என்றும் சொல்லலாம்.


குறிப்பு:-

**

தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம். கேட்டாலும் தர மாட்டேன். தயாரிக்கும் முறையை ஒளிவு மறைவு இல்லாமல் முழுமையாக பகிர்ந்துளேன். அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேடி வாங்கி நீங்களே வாங்கி தயாரித்து பயன்படுத்துங்கள். அப்போது தான் அதன் அருமை உங்களுக்கு புரியும். 


         - சித்தர்களின் குரல் shiva shangar

Share:

எலும்பு முறிவிற்கு முட்டைப் பற்றிடல்

 எலும்பு முறிவிற்கு முட்டைப் பற்றிடல்...

சாதாரணமாக எலும்பு முறிவு என்றவுடன் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரைப் (Ortho Doctor) பார்க்க ஓடுகிறோம். அவர்களும் உடனே மாவுக்கட்டு என்ற பெயரில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (Plaster of Paris) இல் ஒரு கட்டைப் போட்டு அனுப்பி வைப்பார். அவர் கொடுக்கும் மருந்துகளை நாமும் தேமே என்று சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அவை பொதுவாக வலி கொல்லும் (Pain Killer) மருந்துகள் என்ற பெயரில் வலியை தெரிய விடாமல் வைத்திருக்கும்.


நமக்கு ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதமே வலி. அது மூளைக்குத் தெரிய விடாமல் செய்வதனால், அந்த இடத்தில் பிரச்சினை ஏதும் இல்லை என்று உடல் நினைத்துக் கொண்டு அந்த இடத்தை சரி செய்யும் வேலையை விட்டுவிடும். இது எவ்வளவு கொடுமையான விளைவை உண்டாக்கும் தெரியுமா? அந்த இடமே கெட்டு அழுகிப் போனாலும் உடலுக்கு அது தெரியவே தெரியாது.


எடுத்துக்காட்டாக நமக்கு காலில் முள் குத்தினால், உடனே வலி உண்டாகிறது. பின் அந்த வலி மூளைக்குத் தெரிவிப்பதனால், உடனே காலைத் தூக்கிக் கொள்ளுகிறோம், அடுத்து முள்ளைப் பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவோம். 


தொடர்ச்சியாக மருந்துக்களை உட்கொள்ளும் நபரின் கால்கள் உணர்ச்சிகளற்று மரத்துப் போயிருக்கும். அவருக்கு முள் குத்தினாலும் தெரியாது. விளைவு காலில் குத்திய முள் காலைப் புரையோடச் செய்தாலும், அது அவருக்குத் தெரியாது. பின்னர் காலை எடுத்து விட நேரும். இதைத்தான் இந்த ஆங்கில மருத்துவத்தின் வலி நீக்கிகளும்  (Analgesic) செய்கின்றன. 


ஆங்கில மருத்துவத்தின் உயிர் எதிர் (Antibiotic) மருந்துகளில் பக்க விளைவுகள் அதிகம் இருக்கிறது. அதான் Antibiotic என்னும் பெயரிலேயே உயிருக்கு எதிரானது என்று இருக்கிறதே பின் ஏன் அதை உபயோகித்து உங்கள் உயிரைக் கொன்று கொள்கிறீர்கள். 


ஆங்கில மருத்துவர்கள் உபயோகிக்கும் மருந்துகளில் முக்கியமானது வோவிரான் ஊசியும் ஜெல்லும். இவை சிறுநீரகங்களைச் சிதைத்துவிடும். இது போக ஸ்டீராய்டுகள் வேறு கல்லீரலையும், மண்ணீரலையும் பதம் பார்த்து நடமாடும் பிணமாகவே நம்மை ஆக்கிவிடும் ஜாக்கிரதை. உள்ளுறுறுப்புக்கள் சேதாரமான பின் நாம் வாழ்ந்து பயன்தான் என்ன?


வேறு என்னதான் செய்ய எங்களுக்கு ஒன்றுமே தெரியாதே என்று கூறுபவர்கள் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருதாலே போதும். நாம் நமது உடலின் இயக்கத்திற்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்தாலே நம்மால் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழமுடியும்.


இந்த இடுகையில் எலும்பு முறிவிற்கு எப்படி கட்டுப் போடுவது என்பதை ஒளிப்படக் காட்சியாகவும்  படங்களாகவும் வெளியிட்டுள்ளேன். பார்த்து பயனடையுங்கள்.


முதலில் முட்டைப் பற்றிட தேவையான பொருட்கள்


( 1 ) நாட்டுக் கோழி முட்டை (கிடைக்கவில்லை என்றால் லக்கான் கோழி முட்டை உபயோகிக்கலாம்)


( 2 ) உளுந்தம் பொடி மிக மெல்லியதாய் அரைத்தது


( 3 ) நல்லெண்ணெய்


( 4 ) அத்திக்காய் காய வைத்தது மெல்லியதாய் பொடி செய்து அரைத்தது (கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடலாம்)


( 5 ) காடாத் துணி வேண்டிய அளவுக்கு


( 6 ) துளி அளவு சுண்ணாம்பு


முதலில் நாட்டுக் கோழி முட்டைகளை கட்டுப் போட தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கட்டிற்கு 4 முட்டைகள் தேவை என்பதால் 4 முட்டைகள் மட்டும் எடுத்துள்ளேன்.


அடுத்து நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


மேற்கண்ட முட்டை வெள்ளைக் கருவுடன் உளுந்தம் பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொண்டு அத்துடன் அத்திக்காய்ப் பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.


அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து நல்ல ஒட்டும் பருவம் வந்தவுடன் அதில் துளியளவு நீற்றுச் சுண்ணாம்பை சேர்த்து பிசைந்து துணியில் தடவி மேலே போட்டு காற்று குமிழ் இல்லாமல் இறுக்கமாக போட்டு கட்டுப் போட்டுவிடவும்.


இந்த முட்டைப் பற்று சாதாரணமாக அலோபதி எலும்பு முறிவு மருத்துவர்கள் போடும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டுப் போடுவது போலன்று. இது எலும்பும், எலும்பு மச்சையும், எலும்பிலுள்ள சவ்வுகளையும் மிக நன்றாக ஒட்ட வல்லது.


இத்துடன் உள்ளுக்குச் சாப்பிட நத்தைச் சூரி எண்ணெயும், வஜ்ஜிர வல்லி என்னும் பிரண்டையை லேகியமாகச் செய்து தர ஒரு வாரத்தில் எலும்பு கூடும்.


இத்துடன் கால்களை அசைக்காமல் இருப்பது அவசியம். நடக்க முயற்சிக்காமல் இருப்பது மிக நல்லது.


இதே எலும்பு முறிவை ஆங்கில வைத்தியத்தில் சரி செய்ய 3 மாதங்கள் ஆகும். அத்துடன் சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் செயலிழப்பு, மண்ணீரல் செயலிழப்பு போன்றவைகளும் போனசாக வழங்கப்படும். இது தேவையா என்று யோசியுங்கள்?


இந்த முட்டைப் பற்றை 


# ஒடிந்த எலும்பைச் சேர்க்க மற்றும் எலும்புத் தேய்மானம், 


# சவ்வு கிழிதல், 


# சவ்வு விலகல், 


# இடுப்பெலும்பு தேய்மானம், 


# முதுகுத் தண்டுவட விலகல், 


# கழுத்தெலும்புத் தேய்வு 


# ப்ரொக்ஷிமல் ACL டியர்


ஆகியவற்றை குணமாக்கும்


நன்றி - மக்கள் மருத்துவர் சாமீ அழகப்பன்

Share:

தாய்ப்பால் அதிகமாக சுரக்க ஐடியா சொல்லுங்கள்?

தாய்ப்பால் அதிகமாக சுரக்க ஐடியா சொல்லுங்கள்?

பதில் : பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

1. பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவே மென்று சாப்பிடலாம்.

2. கீரையாக கடைந்து சாப்பிடலாம்.

3. வதக்கி சாப்பிடலாம்.

4. கீரையுடன் பூண்டு மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.

5. கீரையை சாறு எடுத்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணி கீரையில் கீழ்க்கண்ட தாதுப்பொருட்கள் இருக்கிறது.

1. புரதம் - 5 %
2. கொழுப்பு -  0.7%
3. நார்ச்சத்து - 2.8%
4. மாவுச்சத்து - 11.6%
5. கால்சியம்
6. பாஸ்பரஸ்
7. இரும்புச்சத்து
8. ரைபோபிளேவின்
9. நியாசின்
10. வைட்டமின் சி
11. மற்றும் பல

பால் பண்ணை வைத்திருக்கும் அன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, நீங்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை அதிக அளவில் பயிர் செய்து, அதை பால் கறக்கும் மாடுகளுக்கு பசும் தீவனமாக கொடுங்கள். இந்த பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்ட பிறகு பால் கறந்தால், அந்தப் பால் சிறந்த பாலாகும். சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இந்தப் பாலை சாப்பிடுபவர்களுக்கு அனைத்து வியாதிகளும் குணமாகும்.

எனவே மனிதர்களுக்கும் சரி மாடுகளுக்கும் சரி பால் அதிகமாக சுரக்க பொன்னாங்கண்ணி பெரும் துணை புரிகிறது.



நன்றி
ஹீலர் பாஸ்கர்
Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்