Tamil Community

அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
 நமது தமிழர்களை பொறுத்தவரை பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.
 தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பு+மிக்கு சார்பாக சு+ரியனின் இயக்கத்தை வைத்தும், பு+மிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள். அவையாவன : சு+ரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் :
 சு+ரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் படி சு+ரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள்..
 அர்ஜுனன் காண்டவ வனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.
 அதன்படி இந்த அக்னி நட்சத்திரத்தில் கத்திரி வெயிலின் போது வீடு கட்ட ஆரம்பிப்பது மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பு+மிபு+ஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம் வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல் போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.
 அதேநேரத்தில் கட்டிய வீட்டில் குடிபுகுதல், வாடகை வீடு மாறுதல், நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், திருமணம், சீமந்தம், உபநயனம் போன்ற சுபகாரியங்கள் செய்யத் தடையில்லை.
 ஜோதிடரீதியாக இது சில விஷயங்களுக்கு தோஷ காலம் எனப்படுவதால் பழமையான சிவன் கோவில்களில் சர்வேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்விப்பது சகல தோஷத்தையும் நீக்கும்.
சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம் :
 நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள். அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் வருகிற மே 7, 2018 அன்று நடைபெறும். உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால், பிறப்பில்லா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.
Share:

மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் சம நோக்கு நாள் என தினசரி காலண்டரில் இருக்கிறதே அப்படி என்றால் என்ன?

ஒவ்வொரு  நட்சத்திரங்களும் ஒவ்வொரு தன்மை உடையது. இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் மும்மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்களை மேல்நோக்கு நாள் என்பார்கள். இந்நட்சத்திரங்களை ஊர்த்துவமுத நட்சத்திரம் என்பர். இந்த மேல்நோக்கு நாளில் மேலே எழும்பக்கூடிய வீடு கட்டுதல், செடி, கொடி, மரம், பயிர்கள், விருட்சங்கள் பயிரிடுதல், பந்தல், மதில் எழுப்புதல் போன்ற காரியங்களைச் செய்வார்கள். பட்டாபிஷேகம், உத்தியோகம், ராஜதரிசனம், வியாபாரம், கிரயம், விக்கிரயம், ஆபரணம், மெத்தை போன்றவற்றுக்கும் மேல்நோக்கு நாள் உகந்ததாகக் கருதப்படுகிறது.  

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் வரும் நாட்களை கீழ்நோக்கு நாள் என்பார்கள். இந்நாளில் கீழ்நோக்கி செல்லக்கூடிய குளம், கிணறு ஆகியவை உண்டாக்கலாம்; புதையல், களஞ்சியம் ஆகிய விஷயங்களில் இறங்கலாம்; கிழங்கு வகை பயிர்களை பயிரிடலாம். கணக்கு அப்யாசிக்கலாம். கீழ்நோக்கு நாளில் இடம்பெறும் நட்சத்திரங்களை அதோமுக நட்சத்திரம் என்பர். அசுவினி, மிருகசிரீடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களை சமநோக்கு நாள் என்பார்கள். இந்நாட்களில் யானை, குதிரை, மாடு போன்ற கால்நடைகள் வாங்குதல், மேய்த்தல், உழவு, வண்டி வாங்குதல், நிலம் வாங்கி பயிரிடுதல், யாத்திரை போன்றவற்றைச் செய்யலாம். இந்நாளில் இடம்பெறும் நட்சத்திரங்களை திரியக்முக் நட்சத்திரம் என்பர். ஆகவே, நாம் ஒரு காரியம் தொடங்கும் முன்னர் இவற்றை அறிந்து செயல்பட்டால், காலம் நமக்கு அனுகூலமாக இருக்கும் என்பது நமது முன்னோர்கள் கண்ட அனுபவ உண்மை.   

Share:

உங்கள் கணினியில் வைரஸ் உள்ளதா?

உங்கள் கணினியில் வைரஸ் உள்ளதா?... இதை செய்து பாருங்கள்...!!



பெரும்பாலும் கணினி வைத்திருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது வைரஸ் தான். கணினியில் வைரஸ் உள்ளதா? இல்லையா? என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

💻 கணினி செயல்பாட்டின் வேகம் குறைந்து காணப்படும்.

💻 கணினி அடிக்கடி செயலிழந்து போகும்.

💻 கணினி சரிவர செயல்படாததுடன் அடிக்கடி தானாகவே மீண்டும் இயங்கும்.

💻 அடிக்கடி தேவையில்லாத பிழை செய்திகள் தோன்றும்.

💻 எந்தவொரு காரணமும் இன்றி யுவெiஎசைரள ளழகவறயசந செயல் இழந்துவிடும். அதை மீண்டும் இயக்குவது கடினமாக இருக்கும்.

💻 வினோதமான செய்திகள் திரையில் தோன்றும்.

💻 அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டிரண்டு விரிவுகள் (நஒவநளெழைn) தோன்றலாம்.

💻 கணினியில் இருக்கும் பயன்பாடுகள் (யிpடiஉயவழைளெ) சரிவர இயங்காது.

💻 வட்டுகளையும் (னுளைமள), வட்டு இயக்கிகளையும் (னுளைம னசiஎநசள) பயன்படுத்த முடியாது.

💻 உங்களுடைய கோப்புகளில் சில உங்களுக்கு தெரியாமலேயே நகலெடுக்கப்பட்டிருக்கும் (உழிநைன).

💻 வினோதமான கோப்புகள் கோப்புறைகளில் (குழடனநசள) காணப்படும்.

💻 அச்சிட வேண்டிய ஆவணங்களை சரியாக அச்சிட முடியாது.

💻 உங்கள் கணினியில் உள்ள முக்கியமான கடைநள உங்களுக்கு தெரியாமலேயே நீக்கப்பட்டிருக்கும்.

💻 எந்தவொரு காரணமும் இன்றி கணிப்பொறியின் நினைவகம் குறைந்து போகும்.

💻 நீங்கள் தோற்றுவிக்காத புதிய ளூழசவ ஊரவள திரைமுகப்பில் காணப்படும்.

கணினியின் வேகம் அதிகரிக்க வேண்டுமா?
💻 தேவைப்படாத கோப்புகளை அழிக்கும்போது ளூகைவ முநலஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், சுநஉலஉடந டீiலெ; கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப்படும்.

💻 உங்கள் கணினி திரையில் றுயடடியிநச பயன்படுத்தினால் கணினி செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கும்.

💻 கணினியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்தால் உங்கள் சுயுஆ-ன் சக்தி கண்டிப்பாக குறைந்துவிடும்.

💻 ஒரே நேரத்தில் பல கோப்புகளை திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது கணினியின் வேகத்தைக் குறைக்கும்.

💻 ஒரே நேரத்தில் பல கோப்புகளை திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பை தவிர மற்றவற்றை சிறிதாக்கி (ஆiniஅணைந) கொள்ளவும்.

💻 புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றை தனியாக சி.டி, டிவிடி-களில் வைத்துக்கொண்டால், ஹார்ட் டிஸ்க் இடம் மிச்சமாகும்.
Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்