Tamil Community

நமது அன்றாட பழக்க வழக்கங்கள் மூளையைப் பாதிக்குமா?

 மூளையின் பலமே உடலின் பலம். நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் தலைமைச்செயலகம் மூளை. ஆனால், நமது அன்றாட பழக்க வழக்கங்கள் மூளையைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

மூளையைப் பாதிக்கும்படியான சில செயல்பாடுகளைப் பற்றி பார்க்கலாம்...

காலை உணவைத் தவிர்ப்பது :
சிலர் வேலைப்பளு காரணமாகவும், உடல் பருமனைக் குறைப்பதற்காகவும் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். ஆனால், இது மிகவும் தவறான பழக்கமாகும். ஏனெனில், காலையில் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். அதனால், மூளை செல்கள் பாதிக்கப்பட்டு வேலையில் கவனச்சிதறல் ஏற்படும். எனவே, உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புத்துணர்வையும் தரக்கூடிய காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பதே உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.


புகை : புகைப் பிடிப்பதால் புகை பிடிப்பவருக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை, அவரை சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ச்சியாகப் புகை பிடிப்பவர்களுக்கு மூளை சுருங்கிவிடும் ஆபத்து உண்டு. அல்சைமர் நோய் கூட ஏற்படலாம். அதுமட்டுமின்றி சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின் மனதை அடிமைப்படுத்தி விடும். எனவே, புகைப் பிடித்தலை தவிர்த்து உங்களையும், உங்களை சுற்றியுள்ளவரையும் பாதுகாத்திடுங்கள்.

வெள்ளைச் சர்க்கரை விபரீதம் :
வெள்ளைச் சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதால் நரம்புகளின் வளர்ச்சியைக் குறைத்து, மூளையையும் பாதிக்கும். ரீபைண்ட் செய்யப்பட்ட சர்க்கரை, மைதா, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடலிற்கு தீங்கு விளைவிக்கும்.
தூக்கம் அவசியம் : உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தூக்கம் அவசியம். நாம் தூங்கும்போதுதான் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். போதிய அளவுக்குத் தூங்காவிட்டால் மூளைக்கு ஓய்வு கிடைக்காமல் போய்விடும். இதனால் மூளை செல்கள் பாதிக்கப்படும். ஆழ்ந்த தூக்கம் மூளை செல்களை அதிகரிப்பதோடு புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது.


சுற்றுச்சு+ழல் சீர்கேடு : மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. மூளை செல்களுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், அது செயல்பாடுகளைப் பாதிக்கும்.
அதிக உணவு உண்பதால் ஏற்படும் ஆபத்து : அதிகமாகச் சாப்பிடுவதாலும், கொழுப்பு உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதாலும் மூளையின் இரத்த நாளங்கள் சுருங்கிப்போய்விடும். மூளையின் செயல்பாடும் குறைந்துவிடும்.

 மதுப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் : மதுவில் உள்ள ஆல்கஹhல் நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகிய உள்ளுறுப்புகளைப் பாதிக்கிறது.
கால் முதல் தலை வரை போர்த்திக்கொண்டு தூங்குவதால் ஏற்படும் விளைவுகள் : சிலர், போர்வையால் கால் முதல் தலை வரை போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். அதனால் காற்றோட்டம் குறைகிறது. நாம் வெளியிடும் கார்பன் - டை - ஆக்ஸைடு போர்வைக்குள்ளாகவே நிரம்பி, தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தடையை ஏற்படுத்துகிறது. அதனால், மூளைச்செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.


Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்