Tamil Community

காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்

இதுவே காயத்ரீ மந்திரம். 


இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.
ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.
வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.
துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.
வ-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.
ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.
ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்
யம்- ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.
பர்- கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.
கோ- கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.
தே- தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்
வ- வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.
ஸ்ய- சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.
தீ- தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.
ம - மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.
ஹி- ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.
தி- மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்
யோ- யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.
யோன- யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.
நஹ்- தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.
ப்ர்- ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.
சோ- ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.
த்- த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.
யாத்- நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.
இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்
Share:

நமது தேவை குறைவாகவே இருந்தாலும், பெருசு,பெருசா கேட்கனும்---சிறு உண்மை கதை

இது 30 வருஷத்துக்கு முன்னால் நடந்தது.
என்பதை மனதில் வைத்து படிக்கவும்.

உண்மை நிகழ்வு. கதையல்ல நிஜம்.

நாட்டுக் கோட்டை பணக்கார செட்டியார் ஒருத்தர் அவருடைய 60 ம் கல்யாண விழாவுக்கு சுகி சிவம் அவர்களை பேச அழைத்திருந்தார்.

சுகி சிவமும் போக ஒத்துக்கிட்டார்.

எவ்வளவு சன்மானம் தரனும்னு செட்டியார் அவர்கள் சுகி சிவம் அவர்களிடம் கேட்டார்.

உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தாங்கலேன்னு சுகி சிவம் சொன்னார்.

நிகழ்ச்சியில் சுகி சிவம் பேசி முடித்ததும்,
அவரின் பேச்சை மிகவும் பாராட்டியதுடன்,
ஒரு கவரையும் கொடுத்தார் செட்டியார்.
(கவரில் ரூ 10,000/- இருந்தது)

மேலும் மறு வாரம் ஒரு பாட்டு கச்சேரி நடத்த இருப்பதாகவும்,
நல்ல பாடத் தெரிந்த ஒருவரை சொல்லுங்கன்னு சுகி சிவத்திடம் செட்டியார் கேட்டார்.

சுகி சிவமும் தனக்கு தெரிந்த,
நல்ல பாடக் கூடிய,
ஆனால் பிரபலமாகாத ஒரு பாடகரை பற்றி சொன்னார்.

அவருக்கு எவ்வளவு சன்மானம் கொடுக்கணும்னு செட்டியார் கேட்க,

"உங்க தகுதிக்கு தக்கபடி கொடுங்க" ன்னு சுகி சிவம் வழமை போல சொன்னார்.

இல்ல இல்ல.
தொகையை சொல்லுங்கன்னு செட்டியார் வற்புறுத்தி கேட்கிறார்.

சுகி சிவமும் சரி ஒரு 2000/- ரூபாய் கொடுங்கலேன்னு சொன்னார்.

செட்டியாரும் நேரடியாக பாடகரிடம் தொடர்பு கொண்டு அவரையே பாட ஏற்பாடு செய்தார்.

அடுத்த வாரம், விழா சிறப்பாக முடிந்ததும் செட்டியார் 2 கவர்களில் பணம் போட்டு ஒட்டி பாடகரிடம் எடுத்து வந்தார்.

ஒரு கவர்ல பாடகராகிய நீங்கள் என்னிடம் நிகழ்ச்சிக்குப் கேட்ட பணம் இருக்கு.

இன்னொரு கவர்ல சுகி சிவம் உங்களுக்காக தரச் சொன்ன பணம் இருக்கு.

உங்களுக்கு எந்த கவர் வேணுமோ அதை எடுத்துக்கோங்க என்றாராம்.
பாடகர் திகைச்சுப் போயி முழிச்சாராம்.

நாம கேட்ட பணத்தைவிட,
சுகி சிவம் சொன்ன தொகை குறைவா இருந்தா,
சிக்கலாயிடுமேன்னு யோசிக்கிறார்.

தன் கவரை விட, நம்மை சிபாரிசு செய்த சுகி சிவத்தை மதிக்க எண்ணி,
கடைசில சுகி சிவம் சொன்ன கவரையே வாங்கிகிட்டாராம்.

கவரை திறப்பதற்கு முன்னால் சுகி சிவம் பாடகரிடம் கேட்டார்:

நீங்கள் எவ்வளவு பணம் செட்டியார் கிட்ட கேட்டீங்க?

நான் முதலில் ஆயிரம் ரூவா கேட்டேன்.
அதற்கு அவர் ஆயிரமான்னு? கேட்டாரு.

பயந்து போய் நான் ஐநூறு தந்தா கூட போதும்னு சொன்னேன்.
என்றார் பாடகர்.

சரி, இப்போ கவரை திறந்து பாருங்க என்றார் சுகி சிவம்.

கவரின் உள் ரூ:5,500/- இருந்ததைப் பார்த்து பாடகர் அசந்துட்டார்.
(2 கவரிலும் செட்டியார் அய்யா அதே தொகையை தான் வைத்திருந்தார்)

பாடகர் கேட்ட ஐநூறையும் + சுகி சிவம் சொன்ன 2,000/- ஐயும் + செட்டியார் தன் தகுதிக்காக ரூ:3,000/- சேர்த்தே செட்டியார் கொடுத்திருந்தார்.

சுகி சிவம் சொல்ல வந்த நீதி என்னன்னா:

இறைவன் கிட்ட நாம கேக்கறப்போ,
நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கிறோம்.

அது தப்பு.

இறைவனுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கணும்.

அப்படிக் கேட்டா,
நாம கேட்பதைவிட,
அவன் தருவது அதிகமாக இருக்கும்.

எப்போவுமே நம்மை மட்டுமல்ல,
இந்த உலகையே படைத்து,
பரிபாளிக்கும் இறைவனிடம் நாம கேட்கும் போது,
நமது தேவை குறைவாகவே இருந்தாலும்,
பெருசு,பெருசா கேட்கனும்.

அவனுக்கு தெரியும் நம் தேவை.
நமக்கு தெரியும் அவனின் தாராள குணம்.

பின்ன எதுக்கு குறைவா கேட்டுக்கிட்டு?

அதுபோலவே,
நம் தேவை அறிந்து நமக்கு அவன் கொடுத்ததை,
நம்முடைய தேவைக்கு போக மீதத்தை,
அவன் சொல்லிய வகையில் செலவு செய்வதும்,

அடுத்தவர்களுக்கு உதவுவதும்,
மென் மேலும் அவன் அள்ளி அள்ளி நமக்கு தருவதற்கு ஏதுவாகும்.

Share:

நமது அன்றாட பழக்க வழக்கங்கள் மூளையைப் பாதிக்குமா?

 மூளையின் பலமே உடலின் பலம். நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் தலைமைச்செயலகம் மூளை. ஆனால், நமது அன்றாட பழக்க வழக்கங்கள் மூளையைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

மூளையைப் பாதிக்கும்படியான சில செயல்பாடுகளைப் பற்றி பார்க்கலாம்...

காலை உணவைத் தவிர்ப்பது :
சிலர் வேலைப்பளு காரணமாகவும், உடல் பருமனைக் குறைப்பதற்காகவும் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். ஆனால், இது மிகவும் தவறான பழக்கமாகும். ஏனெனில், காலையில் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். அதனால், மூளை செல்கள் பாதிக்கப்பட்டு வேலையில் கவனச்சிதறல் ஏற்படும். எனவே, உடலுக்குத் தேவையான ஆற்றலையும், புத்துணர்வையும் தரக்கூடிய காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பதே உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.


புகை : புகைப் பிடிப்பதால் புகை பிடிப்பவருக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை, அவரை சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ச்சியாகப் புகை பிடிப்பவர்களுக்கு மூளை சுருங்கிவிடும் ஆபத்து உண்டு. அல்சைமர் நோய் கூட ஏற்படலாம். அதுமட்டுமின்றி சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின் மனதை அடிமைப்படுத்தி விடும். எனவே, புகைப் பிடித்தலை தவிர்த்து உங்களையும், உங்களை சுற்றியுள்ளவரையும் பாதுகாத்திடுங்கள்.

வெள்ளைச் சர்க்கரை விபரீதம் :
வெள்ளைச் சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதால் நரம்புகளின் வளர்ச்சியைக் குறைத்து, மூளையையும் பாதிக்கும். ரீபைண்ட் செய்யப்பட்ட சர்க்கரை, மைதா, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடலிற்கு தீங்கு விளைவிக்கும்.
தூக்கம் அவசியம் : உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தூக்கம் அவசியம். நாம் தூங்கும்போதுதான் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். போதிய அளவுக்குத் தூங்காவிட்டால் மூளைக்கு ஓய்வு கிடைக்காமல் போய்விடும். இதனால் மூளை செல்கள் பாதிக்கப்படும். ஆழ்ந்த தூக்கம் மூளை செல்களை அதிகரிப்பதோடு புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது.


சுற்றுச்சு+ழல் சீர்கேடு : மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. மூளை செல்களுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், அது செயல்பாடுகளைப் பாதிக்கும்.
அதிக உணவு உண்பதால் ஏற்படும் ஆபத்து : அதிகமாகச் சாப்பிடுவதாலும், கொழுப்பு உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதாலும் மூளையின் இரத்த நாளங்கள் சுருங்கிப்போய்விடும். மூளையின் செயல்பாடும் குறைந்துவிடும்.

 மதுப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் : மதுவில் உள்ள ஆல்கஹhல் நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகிய உள்ளுறுப்புகளைப் பாதிக்கிறது.
கால் முதல் தலை வரை போர்த்திக்கொண்டு தூங்குவதால் ஏற்படும் விளைவுகள் : சிலர், போர்வையால் கால் முதல் தலை வரை போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். அதனால் காற்றோட்டம் குறைகிறது. நாம் வெளியிடும் கார்பன் - டை - ஆக்ஸைடு போர்வைக்குள்ளாகவே நிரம்பி, தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தடையை ஏற்படுத்துகிறது. அதனால், மூளைச்செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.


Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்