Tamil Community

ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்.
(அவசரத்தில் படிக்கக் கூடிய தொகுப்பு இல்லை இது.)

கரு உருவான 20-வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 -வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடித்தள வேலைகள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது.இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே ஆண் பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம்.

முதலில் எது ஆரோக்கியம் என தெரிந்துக் கொள்வது மிக மிக அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முதலில் அடித்தளம் இடுங்கள்.இது தான் ஆரோக்கியம் என நாம் நினைத்து தினசரி செய்து கொண்டு இருக்கும் அத்தனையும் ஆபத்தானதே.கல்யாண தேதி குறித்ததிலிருந்தே உணவு ,எண்ணம் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்த வேண்டும். செல்லப்போனால் வயதுக்கு வந்ததிலிருந்தே கவனம் செலுத்த வேண்டும்.

இப்போதைய வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று எல்லாவற்றையும் கோட்டை விடுவது தான்.சமீபத்தைய ஒரு ஆய்வில், இணையத்தில் தமிழ் மக்களில் அதிகம் பேர் தேடும் ஒரு பிரச்சினை குழந்தையின்மை தான்.பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப் படுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது, கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அரிது“ என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. இத்தகைய எல்லா நலத்துடன் கூடிய குழந்தையை பெற்றெடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும் என்கிறார் திருமூலர்.( மேற்படி தகவல்களை கூறிய சித்தர்களுள் மிகச்சிறந்தவரான திருமூலர் 5,900 ஆண்டுகள், அதாவது கி.மு.6 ஆயிரம் முதல் கி.மு.100 வரையில் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்) .

அகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி மற்றும் பிரமமுனி ஆகிய 18 சித்தர்களில் இவர் ஒருவரே, நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் மவுனம் ஆகி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். அவருடைய வரலாறு அற்புதமானது. இவரது வரலாற்றை 28 பாடல்களில் பெரிய புராணத்தில் அழகாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.

இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.இத்தனை தெரிந்த சித்தர்கள் குழந்தை பேரு பற்றி சொல்லாமலா இருந்திருப்பார்கள்.

ஒரு குழந்தை குறையுடன் பிறக்கிறது என்றால் அதற்கு காரணம் ஆண்கள் தான் என்கிறார் திருமூலர். தாம்பத்திய உறவின் போது மன அமைதி, தெளிவு, விவேகம் இன்றி மிருகத்தனமாக ஆண்கள் நடந்து கொண்டால் குறைபாடுள்ள குழந்தை தான் பிறக்கும் என்று கூறும் அவர், கணவன் ஆனவன், தனது வாயு நிலையை அறிந்து, பொறுமை காத்து, மனைவியுடன் கூடிக் குலாவி கலவி செய்தால் இதனை தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்.

தாம்பத்திய உறவின்போது ஆண் &பெண் இருவரது மூச்சுக் காற்றும் ஒரே அளவாக இருக்க வேண்டும். அவ்வாறு மூச்சு வரும்போது வெளிப்படும் ஆணின் விந்து, பெண்ணின் சுரோணிதத்துடன் (கருமுட்டை) சேர்ந்து உண்டாகும் குழந்தையானது மிகுந்த அழகினை உடையதாக இருக்கும். ஆண் தக்க மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால், அவன் எண்ணும் விருப்பப்படி மூச்சினை அடக்கி, கட்டுப்படுத்தி, தான் விரும்பும் வகையில் மூச்சினை வெளியிடும் ஆற்றலை பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது, குழந்தையின் தோற்றத்திலும் தான் விரும்பியதை ஒரு ஆண் சாதிக்க முடியும்.

உறவு கொள்ளும் காலத்தை முன்னதாகவே திட்டமிட்டு, கணவன், மனைவி இருவரும் தங்களில் மலம், சிறுநீர் எதுவும் தங்காதபடி, அவற்றை வெளியேற்றி விட வேண்டும்.

ஒருமித்த எண்ணத்துடன், படபடப்பு எதுவும் இன்றி, உணவு உட்கொண்ட பின்னர், வயிற்றில் அந்த உணவு ஜீரணமாகும் வரை காத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து, காதல் இன்பம் பேசி, ஒருவரை ஒருவர் தழுவி, தீண்டி, புற உடல் இன்பங்களை துய்த்து, அதன் பின்னரே புணர்தல் வேண்டும். அப்போதும், மூச்சு படபடப்பாக வெளிப்படக் கூடாது. இருவரும் சீரான அளவில் மூச்சை வெளியிட வேண்டும். இதில் வேகம் காட்டுவது வீண் கரு கலைதலுக்கு ஏதுவாகும் என்கிறார் திருமூலர்.

பொதுவாக விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.

4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.
5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூராண பெண் மகள் உருவாகும்.
6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.
7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும்.
8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும்.
9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண்மகள் உருவாகும்.
10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.
11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும்.
12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும்.
13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும்.
14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும்.
15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாய் வாழும் பெண்மகள் உருவாகும்.
16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண்மகன் உருவாகும்.

உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். இது ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!

ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது.

மிருகங்களுக்கு இயல்பாகவே எப்பொழுது கருவுற வாய்ப்புள்ளதோ அப்பொழுதே உறவு கொள்ள விருப்பம் ஏற்படுகின்றது. மாதவிடாய் போன்ற இரத்தம் போக்கும் ஏற்படுகின்றது. ஆனால், மனிதர்களில் அவ்வாறு அல்ல. எல்லா நாட்களிலும் உறவு கொண்டு முட்டை வெடிக்கும் சமயத்தில் உறவு கொள்ளாது போனால் வீணாகப் போய் விடும்.

கர்ப்பமாக இருக்கும் போது தாயும் தந்தையும் கருவில் இருக்கும் குழந்தை இடம் அன்பான வார்த்தைகளை பேச வேண்டும்.

டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள், கரம் மசாலா, வறுவல் மற்றும் எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது.

ஆரோக்கியமான குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என கர்ப்பிணிகள் அனைவரும் ஆவல் கொள்கின்றனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தக தொகுப்பை ஆயுர்வேதா, யோகா மற்றும் சித்தா, யுனானி (ஆயுஷ்) துறை வெளியிட்டுள்ளது.அதை தேடி கண்டுப்பிடித்து வாங்கி படிக்க வேண்டும்.

கரு உற்பத்தி பற்றி சித்தர் பாடல் இதோ.பொருமையுன் வாசியுங்கள்.கடுகளவு புரிந்துக்கொண்டாலும் நன்மைக்கே.

ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்து அஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர்
ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே.

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை கின்ற இன் உயிர் போந்து உற நாடிப்
பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே.

இன்புறு காலத்து இருவர் முன் பூறிய
துன்புறு பாசத்து உயர்மனை வான் உளன்
பண்பு உறு காலமும் பார் மிசை வாழ்க்கையும்
அன்பு உறு காலத்து அமைத்து ஒழிந்தானே.

கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூ ஏழ்
புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே.

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈர் ஐந்தொடு ஏறிப்
பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே.

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக்கொண்ட போதே.

ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும்
மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும்
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும்
பேர் ஒத்த மைந்தனும் பேர் அரசு ஆளுமே.

ஏயம் கலந்த இருவர் தஞ்சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப் பல
காயம் கலந்தது காணப் பதிந்த பின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே.

கர்ப்பத்துக்கே வலமாயாள் கிளை கூட்ட
நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம்
சொற்புறு தூய்மறை வாக்கின் ஆம் சொல்லே.

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து
இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின்றேனே.

பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோன்
இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து
குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்
விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே.

ஒழிபல செய்யும் வினை உற்ற நாளே
வழி பல நீர் ஆடி வைத்து எழுவாங்கிப்
பழி பல செய்கின்ற பாசக் கருவைச்
சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே.

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரமத்தே தோன்றும் அவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே.

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து
மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே.

பிண்டத்தில் உள் உறு பேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள் உறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே.

இலைப் பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
துலைப் பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி
நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப் பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே.

இன்பு உற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.

அறியீர் உடம்பினில் ஆகிய வாறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட
தறிய ஈர் ஐந்தினுள் ஆனது பிண்டமே.

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கை கலந்தேனே.

கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன்
கூட்டு கின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்று ஆகத்து நேர் பட்ட வாறே.

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடும்
நீர் இடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே.

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும்
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே.

கண் நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடைப்
பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண் முதலாக வகுத்து வைத்தானே.

அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி
அருள் இல்லை ஆதலின் அவ் ஓர் உயிரைத்
தருகின்றபோது இருகைத் தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடும் தானே.

வகுத்த பிறவியை மாது நல்லாளும்
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும்
பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம்
வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே.

மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
ஆம் பதி செய்தான் அச்சோதி தன் ஆண்மையே.

ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலி ஆகும்
தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்த பின்னால் ஓடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்து அறிந்து இவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே.

பாய்கின்ற வாயுக் குறையில் குறள் ஆகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும்
பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே.

மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம்
மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம்
மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில்
குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே.

கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல் வளையாட்கே.

கோல் வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம்
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே.

உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்
பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே.

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்
கெட்டேன் இம் மாயையின் கீழ்மை எவ்வாறே.

இன்புற நாடி இருவரும் சந்தித்துத்
துன்பு உறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய
தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே.

குயில் குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்கின்ற வாறே.

முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின்
அதல் புதலாய்ப் பலமாய் நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல்
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப்பிரானே.

பரத்தில் கரைந்தது பதிந்த நல்காயம்
உருத் தரித்து இவ் உடல் ஓங்கிட வேண்டி
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திரு அருளாலே.

ஆரோக்கியமான குழந்தை பெற ஆலோசனை தேவை என்போர் Whatsapp 9944558304.

https://m.facebook.com/story.php?story_fbid=10209268458778899&id=1544889258

https://m.facebook.com/story.php?story_fbid=10209127546696185&id=1544889258

https://m.facebook.com/story.php?story_fbid=10209369163616457&id=1544889258

https://m.facebook.com/story.php?story_fbid=10209127546696185&id=1544889258
Share:

0 $type={blogger}:

கருத்துரையிடுக

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

Main Tags

லேபிள்கள்