5 லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரே அரை டீஸ்பூன் அளவு சீரகம் மற்றும் என்ணி 8 மிலகு போட்டு ஓர் குழி தட்டு போட்டு (வேர்த்து வடியும் நீர் தண்ணீரில் விழும் படியாக) மூடி வைக்க வேண்டும். இந்த தண்ணீரை குடித்து வர வேண்டும்.
தினமும் புதியதாக செய்துக் கொள்ளவும். மாதம் 15 நாட்கள் மட்டும்.
BP மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும்.
சமையலில் சீரகம் உபயோகிகின்றோமே தனியாக ஜீரக தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற நியாமான நினைப்பு ஏற்ப்படுவது இறக்கையே!. மேற்கண்ட செயல் முறை விளக்கத்தில் சீரகம் மிதமான வெப்பத்திற்கு உட்ப்படுத்தப் படுவதை பார்க்கின்றோம், இதே சமையலில் பயன்படுத்தும் போது நமக்கு தேவையான மருத்துவ உட்ப்பொருள் (alkaloid) குழம்பு கொதிக்கும் போது ஆவியாகி வெளிப்பட்டு விடும் என்பதே உண்மை. அதலால் நுணுக்கமரிந்து பயன்படுத்துவது நற்பலனளிக்கும்.
வாயு தொல்லை
பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது. நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின் உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான் என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியே விட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கு கீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.1.ருசியின்மை
2. உடல்நடுக்கம்
3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு
4. வாயுவினால் வயிறு பெருத்தல்
5. இருமல்
6. விக்கல்.
தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தோஷங்கள் அகலும்..
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப் படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!
0 $type={blogger}:
கருத்துரையிடுக