Tamil Community

புது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை

புது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்
(கல்யாண மாலை..)

Pudhu Pudhu Arthangal - Kalyana Maalai

Share:

சைக்கோ - உன்ன நெனச்சு நெனச்சு

சைக்கோ - உன்ன நெனச்சு நெனச்சு

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா(2)
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா (2)

யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

வாசம் ஓசை
இவைதானே எந்தன் உறவே….
உலகில் நீண்ட
இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்

பார்வை போனாலும்
பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல
எதுவும் இல்லை

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

ஏழு வண்ணம்
அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து
பேசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே

கையில் நான் ஏந்தும்
காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள்
மூழ்கிப்போவேன்

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா

யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ

உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
Share:

Ettupatti Rasa - Panju Mittai

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய... புள்ள

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு..

ஏழ புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு யாஹ்ஹ்ஹ
இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு
நீ நெளிஞ்சு போகையில நெஞ்சுல சூழலுக்கு

வாட கத்தடிச்சு வாட்டுது மாமா
என் கூட வந்து குச்சிக்குள்ள ஒத்திக மாமா
உன் கூடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

உன் கண்ணு ரெண்டும் நாவற்பழம்
காச்சிருக்கு கொய்யாப்பழம் மூடி வைக்காத
திங்காம வீணடிக்காத

அட புல்லறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன்
தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய புள்ள

ஓரஞ்சாரம் பார்த்து ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள
முங்கி குளிக்கணும் சுகமா
மெல்ல லாவகம் உன்முதுகை தேய்கனும் இதமா

மாமா பம்முறியே பொழுதுக்கு மேல
நீ கம்மன்காட்டு மூலையில்லே கள்ளன போல
நான் ஒத்தையில தான் வருவேன் உன் நெனைப்பால

அட மஞ்ச காட்டு ஓரதில்லே
மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளைச்சோள சோறு வெச்சு
காரப்பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா

ஏஹ் புள்ள...பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு.. யாஹ்ஹ்ஹ...
Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்