Tamil Community

கண் கூச்சம் குணப்படுத்த இயற்கை வைத்தியம் என்ன?

கண் கூச்சம் குணப்படுத்த இயற்கை வைத்தியம் என்ன?

பதில் : சுத்தமான ஒரிஜினல் தேன் 6 ml எடுத்துக்கொண்டு அதில் வெந்நீர் 6 ml விட்டு நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை சிறிய மூக்கு உள்ள கண்ணாடி பாட்டிலில் ( Dropper bottle ) பத்திரப்படுத்தவும்.

தினமும் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் இரண்டு கண்களிலும் தலா இரண்டு சொட்டுகள் வீதம் மூன்று அல்லது ஐந்து நாட்கள் விட வேண்டும். 2 அல்லது 3 நிமிடத்திற்கு பிறகு கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவி விட வேண்டும்.

இப்படி செய்தால் கண் கூச்சம் இயற்கையான முறையில் குணமாகும்.

மேலும் தாய்ப்பால், ஆட்டுப்பால், மாட்டுப்பால், சுத்தமான தேன், நல்லெண்ணெய், நந்தியாவட்டன் பூவின் சாறு ஆகியவற்றை தூய்மையான முறையில் சேகரித்து வாரம் ஒரு முறை, ஒரு துளி கண்ணீர் விடலாம். இப்படி செய்தால் கண்ணில் உள்ள அனைத்து வியாதிகளும் குணமாகும்.

முக்கிய அறிவிப்பு ; தேன் ஒரிஜினலாக இருக்க வேண்டும். டூப்ளிகேட் தேனினால் வரும் பாதிப்புகளுக்கு நான் பொறுப்பல்ல.

மேலும் கண்களுக்குள் கோழி ரத்தம் விடுவதைத் தவிர்க்கவும்.

நன்றி.
ஹீலர் பாஸ்கர்.
Share:

குடல் புழுக்களுக்கு இயற்கை வைத்தியம் என்ன?

குடல் புழுக்களுக்கு இயற்கை வைத்தியம் என்ன?

பதில் : "வாய்விளக்கம்" என்று அழைக்கப்படும் ஒரு கடைச்சரக்கு பொருளை அருகிலுள்ள நாட்டு மருந்து கடையில் 50 கிராம் வாங்க வேண்டும். கல்- மண்- தூசு நீக்க வேண்டும். நன்கு வெயிலில் காய வைக்கவேண்டும். கல் உரலில் இடித்து, சன்னமான துணியில் சலித்து, சலித்த தூளை எடுத்து கண்ணாடி புட்டியில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதை 5 நாட்களுக்கு , காலை, மாலை என இரு வேளைகளில், ஒரு கிராம் அளவு எடுத்து, சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சாப்பிட்டு வர வேண்டும்.

ஆறாம் நாள் பேதி மருந்தாக 15 ml முதல் 20  அளவுள்ள ஆமணக்கு எண்ணெய்யை ( விளக்கு எண்ணெய் ) ( கொட்டை முத்து எண்ணெய் ) ( Castor Oil ), காய்ச்சி ஆறிய பாலில் அரை டம்ளர் உடன் கலந்து, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். நன்கு பேதியாகி மலத்தில் புழுக்கள் வெளியாவதை கண்கூடாக பார்க்கலாம்.

குடல் புழுக்கள் வராமல் இருக்க முன் தடுப்பு முறைகள் என்ன?

1. உணவில் அடிக்கடி சுண்டக்காய் வற்றல் சேர்த்து கொள்ள வேண்டும். சுண்டக்காய் வற்றல் புளுக்களை சாகடிக்கும்.
2. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. உணவில் நார்ச்சத்துக்கள் உள்ள காய்கறிகளை அதிகமாக சேர்த்து சாப்பிடவேண்டும்.
4. இரவு படுப்பதற்கு முன்பாகவும் அதிகாலை எழுந்த உடனும் பச்சை தண்ணீர் குடிக்கக்கூடாது.   மேலும் கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை குடிக்கக் கூடாது. லேசாக சூடு செய்த தண்ணீரை குடிக்கலாம்.
5. வேப்பம்பூ கொண்டு தயாரிக்கும் ரசம் கலந்த உணவை வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவது மிகவும் நல்லது. புழுக்கள் இறந்துவிடும்.

நன்றி : முனைவர் மரு.நா.லோகநாதன்,

Share:

தொடை இடுக்குகளில் அரிப்பு ஏற்படுகிறது, புண் வருகிறது

தொடை இடுக்குகளில் அரிப்பு ஏற்படுகிறது, புண் வருகிறது .பல வைத்தியம் பார்த்துவிட்டேன் சரியாகவில்லை .சிலநேரம் சரியாகிறது மீண்டும் வருகிறது .இதற்கு நிரந்தர காரணம் என்ன ? தீர்வு என்ன ?.

பதில் : தொடை இடுக்குகளில் அரிப்பு புண் வருவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்

1.ஒன்று காற்றோட்டம் இல்லாதது.
2.நாம் அணியும் ஆடைகளில் தன்மை.
3. நாம் அமரும் இருக்கையின் தன்மை.

1.ஒன்று காற்றோட்டம் இல்லாதது.
இதற்கு முக்கியமான காரணம் காற்றோட்டம் இல்லாமையே. சில வருடங்களுக்கு முன்பு ஆண்களும் ,பெண்களும் துடைகள் மற்றும் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் காற்றோட்டம் இருக்குமாறு ஆடைகள் அணிந்து வந்தோம். ஆனால் இப்பொழுது நாம் அணியும் ஆடைகள் அந்த இடத்துக்கு காற்றோட்டத்தை செல்வதை தடைசெய்கிறது.

 எனவே தான் இதுபோன்ற அரிப்பும், புண்ணும் வருகிறது

 எனவே,  ஒன்று காற்றோட்டமான ஆடைகளை அணியவேண்டும் ,அல்லது எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது காற்றோட்டமாக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

2. நாம் அணியும் ஆடைகளில் தன்மை.
 சுத்தமான பருத்தி ஆடைகளை அணிந்தால் இதுபோன்ற அரிப்புகள்  வராது ஆனால் ஆனால் நாம் அணியும் ஆடைகள் அனைத்தும் பாலிஸ்டர்,  ரெக்சின்,  உல்லன் , பிளாஸ்டிக் என்று உடலுக்கு துரோகம் செய்யும் ,உடல் வெப்பநிலையை கெடுக்கும் ஆடைகளே அணிகிறோம்.

எனவே 100 சதவிகித சுத்தமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலமாக இதிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

ஜட்டி அணிவதற்கு பதிலாக அண்டர்வாயர் அணிந்தால் குணமாகும்.

பேண்ட் அணிவதற்கு பதிலாக வேஷ்டி அணிந்தால் குணமாகும்.

3. நாம் அமரும் இருக்கையின் தன்மை.
நைலான் , போம் , பிளாஸ்டிக், ரெக்சின் ஆகிய இருக்கைகளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு,  மரம் ,இலவம் பஞசு அல்லது பருத்தி பஞ்சினால் ஆன இருக்கைகளில் அமர்ந்து சிறப்பு.

தொடை இடுக்குகளில் வரும் அரிப்பு மற்றும் புண்களுக்கு காற்றோட்டம் இல்லாததே காரணம் மேலும் காற்றோட்டம் கொடுப்பதே சிகிச்சை.

தேவைப்பட்டால் சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை அந்த இடத்தில் தேய்த்து வந்தால் குணமாகும்.

நன்றி
ஹீலர் பாஸ்கர் ஐயா

Share:

தியானம் மற்றும் யோகா செய்யும் பொழுது கண்களில் கண்ணீர், வாயில் உமிழ் நீரும் சுரக்கிறது .இது நல்லதா?. கெட்டதா?.

தியானம் மற்றும் யோகா செய்யும் பொழுது கண்களில் கண்ணீர், வாயில் உமிழ் நீரும் சுரக்கிறது .இது நல்லதா?. கெட்டதா?.




பதில் : தியானம் செய்யும் பொழுது கண்களில் கண்ணீரும் வாயில் உமிழ்நீர் சுரக்கிறது என்றால் இது கெட்டது அல்ல, கண்டிப்பாக நல்லதே.

தியானம் செய்யும் பொழுது சிலருக்கு கண்களில் நீர் வரலாம் சிலருக்கு சளி வரலாம், சிலருக்கு காய்ச்சல் வரலாம், சிலருக்கு லூஸ் மோசன் எனப்படும் தண்ணீராக மலம் வரலாம், சிலருக்கு தூக்கம் வரலாம் ,சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம், சிலருக்கு காது குடைய வேண்டும் போல் உணரலாம், சிலருக்கு வேர்வை வரலாம் ,சிலருக்கு சிறுநீர் வரலாம் ,சிலருக்கு மூத்திரம் வரலாம் சிலருக்கு உடல் அசதி வரலாம்.

இவை அனைத்துமே கெட்டது கிடையாது. கண்டிப்பாக நல்லதே,  இவை அனைத்தும் ஒருவருக்கே வராது இதில் ஏதாவது ஒன்றோ இரண்டோ மூன்றோ வரலாம். இல்லை வராமல் கூட இருக்கலாம்.

இதன் காரணம் என்னவென்றால், ஒன்று கழிவுகள் வெளியாகிறது,  இரண்டு அந்த உறுப்பு தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறது , மூன்று அந்த உறுப்பு தான் பல வருடமாக செய்ய முடியாத வேலையை இப்பொழுது சுதந்திரமாக செய்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடனே இதுபோன்ற விஷயங்கள் எத்தனை நாள் நடக்கும்?  என்று கேட்காதீர்கள் .அது எனக்கே தெரியாது . அவரவர் உடலில் உள்ள கழிவுகளை பொறுத்து , நோயைப் பொறுத்து சிலருக்கு ஐந்து நாளும் சிலருக்கு 50 நாளும் இப்படி மாறி மாறி நடக்கலாம் .எனவே எது வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் நல்லது என்று புரிந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக சாராயம் குடித்து விட்டு ஒருவர் சிரிக்கிறார் என்றால் சாதாரணமாக அவரால் சிரிக்க முடியவில்லை என்று அர்த்தம் . சாராயம் குடித்துவிட்டு ஒரு அழுகிறார் என்றால் அவர் சாதாரண வாழ்க்கையில் அழ முடியவில்லை என்று அர்த்தம் , சாராயம் குடித்துவிட்டு ஒருவர் ரோட்டில் போகும் நபரை அவருடன் வம்பு சண்டை இழுத்தால் அவருக்கு சாதாரணமாக வீரம் இல்லை என்று அர்த்தம் , சாராயம் குடித்துவிட்டு மனைவியை அடித்தால் அவருக்கு சாதாரணமாக மனைவிக்கு மேல் பயம் உள்ளது என்று அர்த்தம்.

 சாராயம் குடித்தால் எப்படி ஒருவர் தன்னால் முடியாத விஷயத்தை செய்கிராறோ , அது போல தியானம் யோகா என்பது இயற்கையான நல்ல  சாராயம்  . எனவே நமது உடல் பல வருடமாக செய்யமுடியாத நல்ல வேலைகளை ஆரம்பிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே யோகா , தியானம் செய்யும் பொழுது எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள், காத்திருங்கள், அது தானாக வரும் தானாக சரியாகிவிடும். கவலைப்படாதீர்கள், பயப்படாதீர்கள். கண்டிப்பாக தியானமும் யோகாவும் உங்களுக்கு நல்லதையே செய்யும்.

நன்றி
Share:

தீபாவளி அன்று எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்

தீபாவளி அன்று எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்?

பதில்:  தீபாவளி அன்று அம்மாவாசை நேரத்தில் மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் .

அதுவும் குறிப்பாக காலை பிரம்ம முகூர்த்தத்தில் மட்டும் தான் குளிக்க வேண்டும். கண்டிப்பாக நல்லெண்ணெய்யை பயன்படுத்தித்தான்  குளிக்க வேண்டும்.

 உதாரணமாக 2019 அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளி வந்தது, அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காலை எண்ணெய் தேய்த்து குளித்து இருப்பீர்கள், ஆனால் அன்று 27ம் தேதி மதியம் அம்மாவாசை ஆரம்பித்து திங்கள்கிழமை மதியம் வரை அம்மாவாசை  இருந்தது. எனவே திங்கள் கிழமைதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கான சரியான நாளாகும் . ஆனால் அரசாங்கம் ஏதாவது ஒரு தேதியை அரசு விடுமுறையாக தீபாவளியாக கொடுக்கும். அந்த நாளை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அமாவாசை எந்த நாளில் விடியற்காலை வருகிறதோ அதுவே சிறந்த நாள் .

எனவே இனிமேல் தீபாவளியன்று திண  நாட்காட்டி அதாவது டெய்லி காலண்டர் ஐ பார்த்து அமாவாசை எப்போது ஆரம்பிக்கிறது, எப்பொழுது முடிகிறது என்று தெரிந்துகொண்டு அம்மாவாசை விடியற்காலை வரும் நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது.

 கண்டிப்பாக நல்ல எண்ணங்கள் மட்டும் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் பணம் இருக்கு என்பதற்காக ஆலிவ் ஆயிலில் குளிக்கக்கூடாது . வேறு எந்த எண்ணெயிலும் குளிக்கக்கூடாது நல்லெண்ணெய் குளியல் மட்டுமே சிறந்தது . அதுவும் தீபாவளி அன்று மட்டுமே சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்னால் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே சூரியன் உதிக்கும் நேரத்திற்கு முன்பு எண்ணை தேய்த்து குளிக்கலாம் வேறு எந்த நாளிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பு எண்ணை தேய்த்து குளிக்க கூடாது.  சூரியன் உதித்த பின்பு மட்டும்தான் குளிக்கவேண்டும் .

எனவே இந்த விஷயத்தை புரிந்து கொண்டு இனிமேல் வரும் தீபாவளி களில் நாம் அமாவாசை நேரம் பார்த்து , பிரம்ம முகூர்த்தம் ஆகிய சூரியன் உதிக்கும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு ஏதாவது ஒரு நேரத்தில் குறித்து நாம் பிரபஞ்ச சக்தியை ஒரு வருடத்திற்கு தேவையான ஆற்றலை பெற்றுக் கொள்வோமாக.

நன்றி
ஹீலர் பாஸ்கர் ஐயா
Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்