Tamil Community

வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?


வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
வெந்நீரின் மகத்தான நன்மைகள் !!


🍵 குளிர்ந்த நீரைக் குடிப்பது அனைவருக்கும் பழக்கம் ஆகிவிட்டது. ஆனால் காய்ச்சல், சளி, இருமல் என்றால் மட்டும் வெந்நீரை அருந்துவார்கள்.

🍵 உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் மட்டும் வெந்நீர் குடித்து வருவார்கள். வெந்நீர் அருந்துவது எடையைக் குறைக்க மட்டும் அல்லாமல் உடலிற்கு ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் உடையது.

🍵 நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் அவசியமாக இருப்பது போல் தண்ணீர் மிகவும் அவசியமாக உள்ளது.

🍵 உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது.

🍵 இரண்டு ஆக்ஸிஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாது உப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்கவைத்து அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்று பார்ப்போம்.

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :

🍵 காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நம் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும். வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை.


🍵 வெந்நீர் அருந்துவதால் அதிகமாக வியர்வை ஏற்படும். இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர் சத்து மற்றும் உப்புச் சத்து முதலான கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

🍵 அளவுக்கு அதிகமான அசைவ உணவு அல்லது சுவீட், பூரி, வடை, போண்டா, பஜ்ஜி போன்ற பலகாரங்கள் சாப்பிட்ட பிறகு, வெந்நீரை பருகினால் கொழுப்புகளை உடலில் சேரவிடாமல் கரைத்துவிடும். மேலும் வெந்நீர் இதயத்துக்கு மிகவும் நல்லது.

🍵 மூக்கு அடைப்புக்கு சிறந்த மருந்து வெந்நீர் தான். வெந்நீரில் மஞ்சள் தூள் சேர்த்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு குணமாகும்.

🍵 வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்தவுடன் குளிர்ந்த நீரை அருந்துவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தினால் தாகத்தை தீர்க்கும்.

🍵 மேலும், கால் பாதங்களில் வலி ஏற்பட்டால் பெரிய வாளியில் கால் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் கல் உப்பைப் போட்டு, அதில் சிறிது நேரம் பாதத்தை வைத்து எடுத்தால் கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

🍵 மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தால் தலை, உடம்பை துடைத்து விட்டு இரண்டு டம்ளர் வெந்நீரைக் குடித்தால் சளி, இருமல் போன்ற தொல்லைகள் வராது.

🍵 தினமும் வெந்நீர் குடித்து வந்தால் உடல் சீராக செயல்படுவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Share:

8-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்


8-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுக்கு அடுத்தப்படியாக தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கிரகம் சந்திரன். அமாவாசை தவிர அனைத்து நாட்களிலும் வளர்ந்தும், தேய்ந்தும் நமக்கு காட்சி கொடுப்பவர்.

அமாவாசை யோகம், பௌர்ணமி யோகம், கஜகேசரி யோகம், சகடை யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம், சந்திராதி யோகம் என்று பலவகையான யோகங்களை தருபவர் சந்திரன். நமது ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்தால் நல்ல யோக பலன்கள் உண்டாகும்.

சந்திரனின் பிறை வடிவத்தை சிவன் தனது தலையில் சூடிக்கொண்டுள்ளார். இதிலிருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஒன்பது கிரகங்களில் சந்திரன் மட்டுமே வேகமான இயக்கம் கொண்ட 'துரித கிரகம்".

லக்னத்திற்கு 8-ம் இடத்தில் சந்திரன் இருந்தால் தொழிலில் மேன்மை உண்டாகும்.

8ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

👉 சளி தொந்தரவு இருக்கும்.

👉 இளமையிலேயே வாழ்க்கை போராட்டமாக இருக்கும்.

👉 சஞ்சலமான குணம் கொண்டவர்கள்.

👉 அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளக்கூடியவர்கள்.

👉 தாயுடன் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

👉 மனக்குழப்பங்கள் ஏற்படும்.

👉 கண் சம்பந்தமான பிரச்சனைகளை கொண்டவர்கள்.

👉 மனதில் தீய எண்ணங்கள் குடியேறும்.

👉 அலங்காரத்தில் விருப்பம் குறைவு.

👉 இறைநம்பிக்கை உடையவர்கள்.


#santhiran in 8th house
#santhiran in 8th house in tamil


Share:

சர்க்கரை பொங்கல்...எப்படி செய்யலாம்?

தித்திப்பான சர்க்கரை பொங்கல்...எப்படி செய்யலாம்?
சர்க்கரை பொங்கல் !!



தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு மிகச்சிறப்பான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையின் சிறப்பு என்னவென்றால் வெல்லம் மற்றும் பச்சரிசியைக் கொண்டு செய்யப்படும் பொங்கல் தான். இந்த சர்க்கரை பொங்கலை சுவையாக எப்படி செய்வது? என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி - 1 கிலோ

பாசிப்பருப்பு - 100 கிராம்

பால் - அரை லிட்டர்

முந்திரி - 15

உலர் திராட்சை - 15

வெல்லம் - 800 கிராம் (பொடித்தது)

நெய் - 200 கிராம்

பச்சை கற்பூரம் - 1 சிறிய கட்டி (பொடித்தது)

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - கால் கப்

தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை :
 சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசியை நீரில் ஊற வைத்து நன்றாக கழுவி வைத்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு மண்பானையை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு கிளறவும்.

அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்பு, அரிசி மற்றும் பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து, பின்பு பொடித்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளறவும்.

 வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு கிளறி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்!!!.

Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்