Tamil Community

வைகாசி மாத ராசிபலன்கள் !!


மாத ராசிபலன்
வைகாசி மாத ராசிபலன்கள் !!
மேஷம் :

பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். மேல் அதிகாரிகளால் சாதகமான சு ழல் அமையும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஞான போதனைகள் கிடைக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தாய் வழி ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். மனைகளில் புதிய இல்லங்களை அமைக்க முயற்சி மேற்கொள்வீர்கள். மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியு ர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுரங்க பணியில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலைகளை தாங்களே முடிப்பது சிறப்பை தரும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும்.

வழிபாடு :

மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை தோறும் வழிபட்டு வருவது நன்மை தரும்.


ரிஷபம் :

தந்தையிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். சுப செயலுக்கான அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியு ர் சம்பந்தமான தொழில் முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். நிர்வாகத்தில் புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதை செயல்படுத்த முயல்வீர்கள். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொதுக்கூட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்க காலதாமதமாகும். இளைய உடன்பிறப்புகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் சேமிப்பு உயரும். கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

வழிபாடு :

ஆஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.

மிதுனம் :

வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகளில் இருந்த இடைஞ்சல்கள் நீங்கும். பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். விவாதங்களை தவிர்த்தல் நன்மை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மேன்மையான சு ழல் உண்டாகும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தர காலதாமதமாகும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். தனவரவு மத்திமமாகவே இருக்கும். கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே உறவுநிலை மேம்படும். பொதுச் செயல்களால் சேமிப்பு உயரும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சில் ஈடுபடுவோர் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு :

சிவபெருமானை ஞாயிற்றுக்கிழமை தோறும் வழிபாடு செய்வது சிறப்பைத் தரும்.

கடகம் :

எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்களினால் சுப விரயம் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். கூட்டாளிகளிடம் பொறுமையாக இருக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மன குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிட்டும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். நீர் வழி வியாபாரங்களால் சுமாரான தனவரவு உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

வழிபாடு :

பார்வதி தேவியை திங்கட்கிழமைதோறும் வழிபட்டு வர எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.

சிம்மம் :

பு ர்வீக சொத்துக்களினால் சுப விரயம் உண்டாகும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். புதுவித எண்ணங்களால் மன சஞ்சலம் உண்டாகும். வெளியு ர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். விவேகத்துடனான வாக்குவாதங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சு ழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.

வழிபாடு :

செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபட்டு வர எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி :

பணியில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும். ஞான உபதேசம் பெறுவீர்கள். மூலிகைகளால் லாபம் உண்டாகும். தொழில் திறமையும், புத்திக்கூர்மையும் வெளிப்படும். நீர்வள மேலாண்மையால் மேன்மை உண்டாகும். பு ர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுவோருக்கு கீர்த்தி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சு ழல் அமையும். மனதில் ஏற்பட்ட ஐயங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். குறுகிய தூர பயணங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். நிர்வாக துறையில் உள்ளோருக்கு பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அமைதியாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.

வழிபாடு :

புதன்கிழமை தோறும் விஷ்ணுவை வழிபட்டு வருவது பிரச்சனைகளை நீக்கும்.

துலாம் :

தொழிலில் மேன்மையான புதிய சு ழல் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். வாகன பயணங்களால் லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தலைமைப் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் ரூடவடுபடுவீர்கள். அரசாங்க பணிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன் கிட்டும். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.

வழிபாடு :

அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.

விருச்சகம் :

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அணிகலன் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் விருந்தில் பங்கேற்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு நற்பேறு பெறுவீர்கள். இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்வீர்கள். தந்தையின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். தர்ம ஸ்தாபனங்களில் பணிபுரிவோர் நிர்வாகத்தில் சில மாற்றங்களை நிகழ்த்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிபுரிபவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கால்நடைகளால் சில விரயச் செலவுகள் உண்டாகும். பயணங்களின் போது எச்சரிக்கை வேண்டும்.

வழிபாடு :

பெருமாளை சனிக்கிழமைதோறும் வழிபட்டு வரவும்.

தனுசு :

கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள். அந்நியர்களால் தொழிலில் விருத்தி உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியு ர் பயணங்களை மேற்கொள்வீர்கள். செய்யும் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது அவசியம். உடைமைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். சுய தொழிலில் மந்தமான லாபம் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். இளைய சசோதரர்களால் சுபச்செய்திகள் கிட்டும். பு ர்வீக சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்புகள் உயரும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலமான லாபம் உண்டாகும்.

வழிபாடு :

துர்க்கை அம்மனை வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் :

எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நண்பர்களுடன் பேசி மகிழ்வீர்கள். சுபச்செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சு ழல் ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். அந்நிய தேச பயணம் மேற்கொள்ள முயல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணம் ஈடேறும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். சுய தொழிலில் மேன்மையான சு ழல் ஏற்படும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

வழிபாடு :

பித்ருக்களை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

கும்பம் :

பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்பீர்கள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். பொதுச் செயல்களால் அலைச்சல் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வெளியு ர் வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவை தரும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழில் அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை, மகனுக்குமான உறவுகள் மேம்படும். தலைமை பதவிக்கான சாதகமான சு ழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

வழிபாடு :

நாக தேவர்கள் வழிபாடு ஏற்றங்களை தரும்.

மீனம் :

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிட்டும். மறுமணத்திற்கான வரன்கள் அமையும். மூத்த சகோதரர்களால் தனவரவு உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிட்டும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வெளியு ர் பயணங்களால் மேன்மையான சு ழல் அமையும். பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் செய்வீர்கள்.

வழிபாடு :

ராகவேந்திரரை வியாழக்கிழமைதோறும் வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும்.

Share:

TN Result 2018: Tamil Nadu +2 Result 2018 Declaring

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் 16-ந் தேதி வெளியிடப்படுகின்றன. இம்முறை பிளஸ் டூ தேர்வு தொடர்பான புள்ளி விவரங்களையும் இணையத்தில் செய்தியாளர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கை:
நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.



இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறையினை தேர்வுத்துறை அறிமுகப்படுத்துகிறது.
இணையதள முகவரி: http://www.dge.tn.nic.in,
http://www.dge.tn.gov.in
பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் நேரம் :16.05.2018 மற்றும் 9.30 மணிமுதல்
ஊடகவியலாளர்கள் இவ்வசதியினைப் பயன்படுத்திக்கொண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளன்று தேர்வு முடிவுகள் சார்ந்த புள்ளிவிவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்விற்கும் இதே நடைமுறை பின்பற்றப்படுமெனவும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

Main Tags

லேபிள்கள்