Tamil Community

நல்ல காரியங்கள் செய்ய கடைபிடிக்கப்படும் ஹோரைகள் !! நல்ல காரியங்கள் செய்ய கடைபிடிக்கப்படும் ஹோரைகள்!!

ஹோரை : 🌷 ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகத்தினதும் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரம் அந்த கிரகத்தின் ஹோரை என்று அழைக்கப்படும். ஹோரை என்பதை ஓரை என்றும் அழைப்பர். நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கு ஹோரை குறிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் துவங்கும்போது எந்த கிரகத்தின் ஹோரையுடன் துவங்குகிறது என்றும் வரையறுத்து வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அதன்படியே அந்த நாளின் மற்ற ஹோரைகள் கணக்கிடப்படுகிறது.

🌷 மொத்தத்தில் சுப ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாம். அசுப ஹோரையில் முடிந்த வரை நல்ல விஷயத்தை தவிர்ப்பது நல்லது. எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றிக் காணலாம்.

சூரிய ஹோரை : 🌷 விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.

சந்திர ஹோரை : 🌷 திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி, கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.

செவ்வாய் ஹோரை : 🌷 போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தல், வீடு நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் போன்றவைகளை செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. புதன் ஹோரை : 🌷 ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருட்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் போன்றவைகளை செய்யலாம்.

குரு ஹோரை : 🌷 புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.

சுக்கிர ஹோரை : 🌷 கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவைகளை செய்யலாம்.

சனி ஹோரை : 🌷 உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவைகளை செய்யலாம்.

Share:

உங்கள் ராசிப்படி நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

உங்கள் ராசி எந்த வகை?
பனிரெண்டு ராசிகளிலும் பல தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. பனிரெண்டு ராசியையும் நெருப்பு, நிலம், காற்று, நீர் என நான்கு பகுதிகளாக கொடுத்துள்ளனர்.

நெருப்பு ராசிகள் : மேஷம் சிம்மம் தனுசு நெருப்பு ராசிக்காரர்கள் கோபமுடையவர்களாகவும், தைரியமாகவும், தலைமைப் பொறுப்புடனும் இருப்பார்கள்.

நில ராசிகள் : ரிஷபம் கன்னி மகரம் நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாகவும், விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பார்கள்.

காற்று ராசிகள் : மிதுனம் துலாம் கும்பம் காற்று ராசியாக இருப்பவர்கள் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.

நீர் ராசிகள் : கடகம் விருச்சிகம் மீனம் நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், சுழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன், பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Share:

திருமணம் நடக்க மார்கழியில் இந்த விரதத்தை கடைபிடியுங்கள்..! ஆண்டாள் விரதம்..!

திருமணம் நடக்க மார்கழியில் இந்த விரதத்தை கடைபிடியுங்கள்..! ஆண்டாள் விரதம்..!
👩 ஆண்டாள் பு+ரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அதனால், ஒவ்வொரு மாதமும் பு+ரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணமாகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மேலும், பு+ரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டாலும், வாரணம் ஆயிரம் பாடி வந்தாலும் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.
👩 பு+ரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

👩 திருமாலை தனது கணவனாக மனதில் எண்ணிக்கொண்டு, அவரையே நினைத்து உருகியவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்காக தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சு+டிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர் ஆண்டாள்.

👩 உலகத்தை ஆளும் கண்ணனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக, ஆண்டாள் மேற்கொண்ட நோன்பு தான் பாவைநோன்பு. இந்த நோன்பை கடைபிடிப்பதற்காக அதிகாலையில் எழுந்து, தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துச் சென்று நீராடிவிட்டு வருவார். பின்பு தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமர்ந்த கோவிலை கண்ணனின் வீடாகவும் எண்ணிக்கொண்டு தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். நாம் அதிகம் பயன்படுத்தி வரும் எலுமிச்சை ஊறுகாயினை, அதன் பாரம்பரிய சுவை மாறாமல் செய்யும் குடும்பத்தாரிடம் இருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல் இணையம். நாட்டு எலுமிச்சை, நல்லெண்ணெய் என தரமான பொருட்களைக் கொண்டு வீட்டு முறையில் செய்யப்பட்ட மிகவும் ருசியான எலுமிச்சை ஊறுகாயை நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் ஆர்டர் செய்தால் ஓரிரு நாட்களில் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படும்.
👩 திருமாலை தவிர, மற்ற மானிடரை கணவனாக ஏற்க மாட்டேன் என்று சபதம் மேற்கொண்ட ஆண்டாள், கிருஷ்ணன் அவதாரத்தின் போது கிருஷ்ணரை மணக்க கோபியர்கள் மேற்கொண்ட பாவை நோன்பை, மார்கழி மாதத்தில் ஆண்டாளும் மேற்கொண்டார்.
👩 ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு, அவரது கையில் இருந்த சங்கை பார்த்தபடி, 'மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என தொடங்கி, வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று முடியும் முப்பது பாடல்களை திருமாலை நினைத்து பாமாலையாக பாடினார்.
👩 ஆண்டாள் விரதம் இருந்து மனதிற்கு பிடித்த திருமாலை திருமணம் செய்தது போல, தனக்கும் விரும்பிய கணவர் அமைய வேண்டி விரதம் இருக்கும் பெண்கள், தங்கள் விரத நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை உண்ணக்கூடாது.
👩 மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பு+ தூவி காலையும், மாலையும் வழிபாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள்புரிவாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

Share:

ஜோதிடர் பதில்கள் !

ஜோதிடர் பதில்கள் !

பிறந்த குழந்தைக்கு எப்போது பெயர் சூட்டலாம்? :

குழந்தை பிறந்த நாளில் இருந்து பதினாறாவது நாள் முதல் மூன்று மாதம் முடிவதற்குள் குழந்தைக்கு பெயர் சூட்டலாம்.

1. ராகு கேது தோஷம் நல்லதா? கெட்டதா?
தோஷம் என்பது நாம் செய்த முன்ஜென்ம கர்ம வினையின் விளைவாக இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பமாகும்.
அவ்வாறு இருக்க ராகு கேது தோஷம் என்பது நல்லது என்று கூற இயலாது.

நல்ல கர்ம வினைகளை நாம் செய்திருப்பின் இப்பிறவியில் தோஷம் அற்றவர்களாக எதிலும் மனநிறைவுடன் நம் வாழ்க்கை அமையும்.?

  3. மார்கழி மாதம் வீட்டு மனைகளை பதிவு செய்யலாமா?
🌟 மார்கழி மாதம் சுப மாதமாகும். எனவே, மார்கழி மாதத்தில் வீட்டு மனைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
🌟 பத்திர பதிவுக்கு முன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு, பின் பதிவு செய்யவும்.
4. திசை சந்திப்பு இருந்தால் திருமணம் செய்யலாமா?
🌟 திசை சந்திப்பு இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம்.
🌟 ஆனால், சில ஜோதிட விதிகளின் அடிப்படையில் விளக்கம் கேட்டு பிறகு திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும்.

Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்