---------------------------------------------------------------
குண்டலினி எழுந்தால் என்னவாகும்?-----------------------------------------------------------
குண்டலினி என்பது நமக்குள்புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும்,அது பாம்பைப் போல மூன்றரை சுருளாகசுருண்டு நமது மூலாதாரத்தில்புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்தகுண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது,இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன்மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒருஅனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிடமுடியும் என்கின்றனர் சித்தர்கள்.
குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர்,நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவுஒன்றினை பார்த்துவிடுவோம். நமதுஉடலானது எழுபத்தி இரண்டாயிரம்நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும்,இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில்இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில்விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும்குண்டலினியை கவனிப்போம்.குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்தநிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினைசீண்டினால் என்ன ஆகும் சீறிக்கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்புஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அதுமூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கிகிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிறகுண்டலினி சக்தியானதுமூலாதாரத்திலிருந்து மேலே பயணித்துதுரியம் என்கிற உச்சந்தலை வரைகொண்டுவரலாம் என்கின்றனர். இந்ததுரியத்திற்கு குண்டலினியை கொண்டுவந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதைகாகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.இப்படி குண்டலினியை மூலாதாரத்தில்இருந்து உச்சந்தலையான துரியத்திற்குகொண்டு வந்தால் என்னவாகும்?அந்த அனுபவத்தை கொங்கணவர்பின்வருமாறு விளக்குகிறார்.உணர்வற்று வுடலற்று யோகமற்றுயோடுவது மாடுவது மிரண்டுமற்றுபணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்றுசொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்றுநிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போகநேராக குண்டலியை நிலைத்துப் பாரே.- கொங்கணவர் -உணர்வற்று, உடலற்று, யோகமற்று,ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று,பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகியஇரண்டும் அற்று லெச்சை, கூச்சம்,சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று,நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும்புத்தியும் லயித்து போகவேண்டும் என்றுஎண்ணினால் குண்டலி யோகத்தை செய்என்கிறார் கொங்கணவர்.இப்போது குண்டலினியை எழுப்பி மேலேகொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில்மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொருநிலையாக உயர்த்திட வேண்டுமா?குண்டலினியும் நாடியும்!!
-----------------------------------------
குண்டலினி பற்றிய அடிப்படைதகவல்களைத்தான் இது வரையில் நாம்பார்த்திருக்கிறோம்.
குண்டலினி என்பதுஎன்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படிஇருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக்கூடியது? என்பது மாதிரியான விவரங்களைஇதுவரை பார்த்திருக்கிறோம்.
இனி அடுத்த கட்டமாக இந்த குண்டலினியைஎழுப்புவது, அதன் செயல்பாடுகள்,விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்கவேண்டி இருக்கிறது.அதற்கு முன்னால் இடைச்செருகலாய் இந்தபதிவினை வாசித்து விட வேண்டுகிறேன்.நேற்றைய பதிவில் நமது உடலில் எழுபத்திஇரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக ஒரு வரித்தகவலை பகிர்ந்திருந்தேன். இப்போது இந்தநாடிகளைப் பற்றிய சிறிய அறிமுகம்இப்போது அவசியமாகிறது.நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல்,நோக்குதல் போன்றவை நேரடிஅர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளைநாடுவதால் கூட இவைகளுக்கு நாடி எனபெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிறமாதிரி சொல்வதானால் நவீன அறிவியல்சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்தநாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம்.ஆனால் நரம்புகளைப் போல இவற்றைநேரடியாக பார்க்க முடியாது என்றும் இவைசூட்சுமமானது என்கின்றனர்.மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம்நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர்பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும்விரிவாக சொல்ல வேண்டுமெனில், தலையில்7000ம் நாடிகளும், வலது கண்ணில் 2000ம்நாடிகளும், இடது கண்ணில் 2000ம்நாடிகளும், மூக்கில் 3330 நாடிகளும், வலதுகாதில் 1500 நாடிகளும், இடது காதில் 1500நாடிகளும், பின்கழுத்தில் 1000ம் நாடிகளும்,பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும்,முதுகில் 3680 நாடிகளும், கண்டத்தில் 1000ம்நாடிகளும், நாபியில் 8990 நாடிகளும், வலதுகையில் 1500 நாடிகளும், இடது கையில்1500 நாடிகளும், விலாப் பகுதியில் 3000ம்நாடிகளும், கால்களின் இடுக்கில் 8000ம்நாடிகளும், பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும்,பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும், கோசத்தில்13000ம் நாடிகளும், பாதத்தில்1000ம் நாடிகள்என ஆக மொத்தம் 72000ம் நாடிகள்இருக்கின்றதாம்.இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள்முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவைபிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை,காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை,சங்கினி, குரு என்பதாகும்.பிங்கலை என்பது வலது நாசியிலும்,இடங்கலை என்பது இடது நாசியிலும்,சுழுமுனை என்பது இவை இரண்டிற்குநடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும்,காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன்என்பது வலது கண்ணிலும், அத்தி என்பதுவலது காதிலும், அலம்புடை என்பது இடதுகாதிலும், சங்கினி என்பது பிறப்புஉறுப்பிலும், குரு என்பது ஆசனவாயிலிலும்ஓடுகிறதாம்.இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்தஎழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமதுஉயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர்பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழுமையங்களில் இணைந்து பிரிந்துசெல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதாரமையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதாரமையங்கள்தான் நமது உடலை இயக்கிக்கொண்டிருக்கின்றன. இவைமூலாதாரத்திற்கும், உச்சந்தலையானதுரியத்திற்கும் இடையே உடலின் ஊடாகஅமைந்திருக்கின்றன.இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறுவிளக்குகிறார்.உச்சிதலை நெற்றிவிழி புருவமத்திஉரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாயகச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்கொச்சிநரை சொல்லவில்லைவெளுத்தமார்க்கம்குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.- காகபுசுண்டர் -1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம்3.மணிபூரகம் 4.அநாகதம் 5.விசுத்தம்6.ஆக்ஞேயம் 7.துரியம் என்பதே இந்த ஆதாரமையங்கள். இவை மனித உடலில் முறையே1.மூலம் 2.தொப்பூழ் 3.மேல்வயிறு4.நெஞ்சம் 5.மிடறு 6. புருவநடு7.உச்சந்தலை என ஆறு இடங்களில்அமைந்திருக்கிறது.இதுவரை நாடிகள் மற்றும் அவைகுவிந்திருக்கும் ஆதார மையங்கள் பற்றியஅடிப்படை தெளிவுகளைப் பார்த்தோம். நமதுகுண்டலினியானது இந்த ஆதார மையங்களின்ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால்நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டிஇந்த பதிவினை இடைச் செருகலாய்பகிர்ந்தேன்.குண்டலினியும்... சாதகனும்!
---------------------------------------------
குண்டலினி என்பது மாயமோ, மந்திரமோஇல்லை. அது ஒரு வகையான உள்நிலைஉளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்துகொள்ள முயற்சிப்பதில்தான் இதன்செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல்சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமதுஉடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலைமாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம்.உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிறவார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.குண்டலினியை எழுப்பிட பல்வேறுஉத்திகளை நமது முன்னோர்கள்சொல்லியிருக்கின்றனர்.அது பற்றி பின்னர்பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற்கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர்பெருமக்கள் விரிவாகவே கூறியிருக்கின்றனர்.குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன்முதலில் மெய்யான குருவினை கண்டறியவேண்டும். இதற்கு அவன் ஆசைகளைகுறைத்தவனாக இருப்பது மிகவும்அவசியமாம். தீவிரவைராக்கியமுள்ளவனாகவும் இருக்கவேண்டும். சுத்தமான மனமுள்ளவனும்,மனத்தின் ஆவேசமான ஆசைகளைத்துறந்தவனை மெய்யான குரு தானாகவேஅண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரேமுன்னின்று அரவனைத்து வழி நடத்துவார்.இத்தகைய குருவின் வழிகாட்டுதலில்பயிலும் சாதகனே குண்டலியைஎழுப்புவதால் உண்டாகும் முழுப்பலனையும் அடைவான் என்கின்றனர்.நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஆசனம்,பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால்மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன்இடறி விழுந்து தன்னையே கெடுத்துக்கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏறஅவன் சக்தியற்றுப் போவானாம். இதுவே,சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள்(குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும்காரணமாய் அமையும் என்கின்றனர்.யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை.ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்கவேண்டும். பயிற்சியின் பூரண அறிவுஇரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்கஆசிரியன் அவசியம். கடைசியாகநிதானமானதும் குண்டலினிஎழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில்பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை)உண்டாகும். ஆதலால் சாதகன்ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்தஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகிவிடுவான்.குண்டலினி பயிற்சியைப் போலவே அந்தசம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்கவேண்டியது மிக அவசியம். குண்டலினிபற்றிய விபரங்களோ விளக்கங்களோமுழுமையாக தெரியாதவர்கள் இதில்வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டேஇத்தனை நீளமாக குண்டலினி பற்றியஅறிமுகத்தினை பகிர நேர்ந்தது.குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்!
----------------------------------------------------------------------
மூலாதாரத்தில் புதைந்திருக்கும்குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள்கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில்பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி,ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால்குண்டலினியை எழுப்ப முடியுமாம்.இராஜயோகிகள் சலனமற்றதியானத்தினாலும், மனப்பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.சாமான்யர்கள் பக்தி அதாவதுமுழுமையான சரணாகதியின் மூலம்எழுப்புகின்றனர்.ஞானிகளோ பிரித்து அறியும் மனஉறுதியினால் எழுப்புகின்றனர். இதைவிவேக வைராக்கியம் என்கின்றனர்.தாந்திரிகர்கள் மந்திர சக்தியால்குண்டலினியை எழுப்புகின்றனர்.இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒருமுறையும் இருக்கிறது. அதாவது குருவினைபார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப்படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால்சட்டென குண்டலினி எழும்பும். இத்தகையதகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும்குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதைஎல்லோருக்கும் அருளுவதுமில்லை.ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியைஎழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது.எனினும் நமது உடல் மற்றும் மனப்பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவுசெய்ய குருவினால் மட்டுமே முடியும்.அவரே நமக்கு சரியான வழி எது என்பதைஉணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால்குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம்இல்லாத எளிதான காரியம்தான்.அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்தஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டுசெல்வதே இதில் கடினமான பகுதி.
ஒவ்வொருநிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம்வரை கொண்டு செல்வது அத்தனை எளிதானசெயல் இல்லை. மிகுந்த பொறுமை,விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சிஉள்ளவர்களுக்கு மட்டுமே இதுசாத்தியமாகும். அவர்களுக்கே எல்லாசக்திகளும் சித்திக்கும்.எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொருஆதார மையத்தையும் அடையும் போதுஅந்த மையம் திறக்கிறது. இது மெல்லமெல்லவே நிகழுமாம். அப்போது தாமரைவடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்தசக்தி மையம், தலை அல்லது முகம்மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம்மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்தஅதார மையங்களை சக்கரம் என்றுஅழைப்போம்.எழும்பிய குண்டலினியானது ஒவ்வொருசக்கரத்தையும் கடந்து செல்லும் போதுஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்திவெளிப்படுகிறது. அப்போது ஏற்படும்சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.குண்டலினி...சுவாசம்...ஆசனம்!!
---------------------------------------------------
நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியைவிழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளைநமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.அவை கரும யோகம், பக்தி யோகம், ஞானயோகம், கிரியா யோகம் எனப்படும். இவைஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள்.ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப்பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்துபழகலாம். இவை ஒவ்வொன்றையும் விரிவாகவிளக்கப் புகுந்தால் பதிவின் நோக்கம் திசைதிரும்பிவிடும். ஆகையால் தொடரின் நெடுகேஅடிப்படைகளை மட்டும் தொட்டுச்செல்வோம்.தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினியோகத்தின் முதல் நிலை. இதை நாம்பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம்.கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியைபராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால்அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாகபலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும்தேவையானவைகளை சேகரித்து வைப்பது,அதனை பாதுகாப்பது போன்றவைகளையேதன்னை உணர்தல் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல்அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லதுஅறிதல்கள்.நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும்மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர்கவனித்திருப்போம். உண்மையில் தன்னைஅறிதல் என்பதே நமக்குள் ஓடிடும்மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான்துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது,அதுவாகவே வெளியே போகிறது எனதொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம்அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில்நமது மகத்துவமே இந்த மூச்சில்தான்அடங்கி இருக்கிறது.சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரானதாளகதியில் நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால்மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரணநிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல்அல்லது மனம் வருந்த ஒரு செயலைசெய்யும் போது விடும் சுவாசத்திற்கும்வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்ததாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல்நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்ககவனிக்க நமக்குள் மாற்றங்களை உணரமுடியும்.சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாசமுறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவைஉயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம்,முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாகதனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள்நமது சுவாசம் எத்தகையது என்பதைஉணர்ந்து அவற்றை முழுமையானசுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும்.இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள்உங்களுக்கு வரலாம். வரவேண்டும் என்பதன்பொருட்டே இதனை விளக்கிக்கொண்டிருக்கிறேன்.அடிப்படையில் குண்டலினி என்பது மாயமோமந்திரமோ இல்லை ஒரு வகையானபயிற்சிதான்... முழுமையான சுவாசத்தைஅறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்கஅதன் லயம் புலப்படும், அந்த லயத்தினைகவனிக்க மனம் அதில் ஒடுங்கும்.கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும்.சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்கஉண்டாகும் மாற்றங்களே குண்டலினிபயிற்சியின் ஆரம்பநிலைக்கு நீங்கள் தயாராகிவிட்டதை உணர்த்தும். இதுதான் அடிப்படை,இது சிரமமான வேலையும் இல்லை.ஆர்வமும், உழைப்பும், வழிகாட்டுதலும்உள்ள எவருக்கும் எளிதாக வாய்க்கும்.குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும்சாதகன் முதலில் தனிமையான இடத்தைதெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாகஇருந்தால் அமைதியாக அமர்ந்து செய்யவசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை,வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டியபகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதிஉள்ள இடங்களும் சிறப்பானதே.அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியைசெய்திட எல்லா வகையான ஆசனங்களைபயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம்இல்லை. தளர்வாகவும், வசதியாகவும்அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களைதெரிந்து பயன்படுத்துவது அவசியம்.சாதாரணமாய் நாம் உட்காரும் முறையானபத்மாசனம் போதுமானது. உட்காருவதுகடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில்அமர்ந்து செய்யலாம்.குண்டலினியும் முன் தயாரிப்பும்!
-----------------------------------------------------
குண்டலினி யோகத்தை துவங்குவதற்குதேவையான முன் தயாரிப்புகளையேஇத்தனை நாளாக பார்த்துவந்திருக்கிறோம்.அந்த வரிசையில்தனிமையான,அமைதியான சூழலில்பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்துஇந்த பயிற்சியினை துவங்கிடலாம் என்பதுவரை நேற்றைய பதிவில் பார்த்தோம்.பத்மாசனத்தில் அமரும் போது முதுகுத்தண்டானது நிமிர்ந்து இருப்பதால்சுவாசமானது மூலாதாரத்தில் இருந்துதுரியம் வரை தடையின்றி செல்லும்என்கின்றனர்.மேலும் பத்மாசனத்தில் அமரும்போது நீண்ட நேரம் சோர்வின்றி அமர்ந்திருக்கமுடியும்.மேலும் இப்படி அமரும் போதுவிரல்களில் சின் முத்திரை அல்லது ஞானமுத்திரை வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது ஆசனம் தயாராகிவிட்டது. அடுத்தநிலை சுவாசத்தை கவனிக்கஆரம்பிப்பதுதான், சிலர் சொல்வது போலதினமும் இத்தனை நிமிடங்கள்அமர்ந்திருந்தால் போதுமானது என்பதில்எனக்கு உடன்பாடில்லை, சித்தர்களும்அத்தகைய நேரக் கட்டுப்பாட்டினைவரையறுக்க வில்லை. நம்மால் எத்தனைநேரம் கவனம் குவித்து சுவாசத்தை கவனிக்கமுடியுமோ அத்தனை நேரம் செய்வதுசிறப்பு.ஆரம்ப நாட்களில் சுத்தமாய் உங்களால்சுவாசத்தை கவனிக்கவே முடியாது. அப்படியாராவது கவனிக்க ஆரம்பித்து விட்டேன் எனயாரும் சொன்னால் அதை நம்பவும்கூடாது.மனம் நிறையவே அலைபாயும், அதுஎங்கெல்லாம் போகிறது என்பதை கவனிக்கஆரம்பியுங்கள், மனம் தானாய் உங்களைநோக்கி மீண்டு வரும். அப்படி வரும் போதுசுவாசத்தை கவனிக்க சொல்லுங்கள். கவனம்குவியும். வலிந்து செய்வதை காட்டிலும்இது மிக எளிய உத்தி!வெறுமனே சுவாசத்தை மட்டும் கவனித்தால்போதுமானது, எதுவும் அற்புதம் நிகழும்என்றெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது.உடலை, மனதை, சுவாசத்தை தளர்வாக்கவேஇந்த பயிற்சி. நாட்கள் செல்லச் செல்ல சிலமாற்றங்களை உணரத் துவங்குவீர்கள். இதனைவார்த்தைகளால் விவரிப்பது கடினம்.என்னுடைய அனுபவத்தைச் சொல்லவேண்டுமெனில் ஒரு உள்ளார்ந்த அமைதிஉண்டாகும். அது நமக்கு பிடித்தமானதாகஇருக்கும்.இந்த நிலையில்தான் குண்டலினியை பற்றியோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.இனி நமது செயல்திட்டம் இரண்டுகட்டங்களை உள்ளடக்கியது. முதலில்குண்டலினியை விழித்தெழச் செய்வது,அடுத்து அவற்றை அடுத்த அடுத்த ஆதாரமையங்களான சக்கரங்களை நோக்கிநகர்த்துவது அல்லது உயர்த்துவது.இது மூலாதாரம் துவங்கி துரியம் வரை ஆறுநிலைகளில் நடைபெறும். ஒவ்வொருசக்கரமும் மலரும் போது அதற்கானபலன்களை நாம் உணரத் துவங்குவோம்.இந்தப் பயணத்தில் உடல் ரீதியான சிலபிரச்சினைகளையும் நாம் எதிர் கொள்ளவேண்டியிருக்கும்.