Tamil Community

மாட்டிறைச்சிக்கு தடையா? உண்மை என்ன?...

மாட்டிறைச்சிக்கு தடையா? 

உண்மை என்ன?...

மாட்டிறைச்சி உண்ண மத்திய அரசு
தடை விதித்ததற்கு கண்டனம்,
மாட்டிறைச்சியை  விற்க மத்திய அரசு விதித்த தடையை உடனடியாக
திரும்ப பெற வேண்டும்.
இது போன்ற கண்டனங்களையும்,
கோரிக்கைகளையும்,
விமர்சனங்களையும் பரவலாக பல தரப்பிலும் காண முடிகிறது.

இதில் எனக்கான ஆச்சரியம் என்னவென்றால் மாட்டிறைச்சிக்கு
மத்திய அரசு தடையே விதிக்காத போது,
மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று எங்குமே சொல்லாத போது
இத்தககைய கோரிக்கைகளை முன் வைப்பதற்கும்,விமர்சனம்
செய்வதற்கும் என்ன அவசியம்
என்பதுதான்.

இது குறித்து நேற்று முதலே பல சர்ச்சைகளும்,விமர்சனங்களும் வந்து கொண்டே இருந்தாலும்,இந்த விவகாரம் குறித்து முழுமையாக தெரியாமலும்,
அந்த அரசாணையை முழுமையாக
படித்து தெரிந்து கொள்ளாமலும் எந்த கருத்தையும் பதிவிடுவது  சரியானதாக இருக்காது என்பதால் அதனை முழுமையாக படித்து தெரிந்துகொண்ட பிறகே இந்த பதிவை இடுகின்றேன்.

மிருக வதை தடுப்பு சட்டத்தில்(PREVENTION OF CRUELTY TO ANIMALS,REGULATION OF LIVESTOCK MARKETS,2017) சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
கால்நடை சந்தைகளில் பசு,எருமை,காளை,ஒட்டகம் போன்ற கால்நடைகளை  விற்பனை
செய்யும் போது அதற்கான  விதிமுறைகளை கடுமையாக்கி  மத்திய அரசு
சில ஒழுங்கு முறைகளை கொண்டு வந்திருக்கிறது.

கால்நடை சந்தைகளில் மாடுகளையோ,ஒட்டகங்களையோ விற்பனைக்காக கொண்டு வரும் போது
அது இறைச்சிக்காக கொல்லப்ப் படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,
அது விவசாய பயன்பாட்டிற்காகதான்
வாங்கவோ,விற்கவோ படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் இந்த அரசாணையின் முக்கிய அம்சம்.

மற்ற படி மாட்டிறைச்சிக்கு தடை,
மாட்டிறைச்சி  உண்ணுவதற்கு தடை என்று சொல்லப்படுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.
மாடுகளை வெட்டக்கூடாது  என்று சொல்லும் போது மாட்டிறைச்சி மட்டும்
எப்படி கிடைக்கும் என்ற கேள்வி
நமக்கு எழலாம்.

நாடு முழுக்க பல்வேறு இடங்களில்
அரசு அனுமதியுடன் அங்கீகாரம் பெற்ற மிருகவதை கூடங்கள்(LICENSED SLAUGHTERING HOUSE)பல  இருக்கின்றன.
அங்கெல்லாம் மாடுகளை கொண்டு
சென்று இறைச்சிக்காக கொள்வதற்கோ,
வெட்டுவதற்கோ எந்த தடையும் இல்லை.அதுவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள
மிருக வதை ஒழுங்கு முறை  தொடர்பான புதிய அரசாணையால் விவசாயிகளுக்கும்,
கால்நடைகளை ஆதாரமாக கொண்டு  வாழ்க்கை நடத்திவரும் ஏழை மக்களுக்கும்
பல சிரமங்கள்,நடைமுறை சிக்கல்கள்,
பிரச்சனைகள்,கால விரயம் போன்றவை ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை என்றாலும்,ஒட்டு மொத்தமாக மாட்டு இறைச்சிக்கே தடை,மாடுகளை வெட்ட முடியாது,
மாட்டிறைச்சி உண்ண தடை என்று சொல்லப் படுவதில்லை உண்மை இல்லை.

மாட்டிறைச்சி உண்ண விருப்பப்படுபவர்கள் தாராளமாக மாட்டிறைச்சி உண்ணலாம்.
அங்கீகரிக்கப்பட்ட மிருகவதை கூடங்களில் விதிகளுக்கு உட்பட்டு மாடுகளை வெட்டலாம்.
மாட்சிறைச்சியை விற்பனை செய்யலாம். இந்த அரசாணையால் மக்களின் உணவு பழக்கத்திற்கு  எந்த பாதிப்பும், வந்து விடாது.

இது குறித்த தவறான ஒரு புரிதல் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அது குறித்த சரியான ஒரு புரிதலை ஏற்படுத்த அரசும் தவறி விட்டது.
இந்த விவகாரம் உணர்வுபூர்வமான விஷயம் என்பதால் இது குறித்து மக்களுக்கும்,
அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும் குழப்பங்களையும்,கேள்விகளையும்
மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கும் உள்ளது.

அதே சமயம் இதனால் விவசாயிகளுக்கும்,கால்நடை வியாபாரிகளுக்கும் ஏற்படும் நடைமுறை சிக்கலைகளை அரசு உணர்ந்து கொண்டு கடுமையான விதி முறைகளினால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசுடன்,மாநில அரசும் இணைந்து எடுக்க வேண்டும் என்பதே சரி.

Share:

தியானம்

தியானம் ... !!!


தியானத்துக்கு இரண்டு விசயங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒன்று...

 உங்களது உடம்பைத் தளர்ச்சியாய் விட்டுவிட வேண்டும்.

இளைப்பாறலாய் விட்டு விட வேண்டும்.

ஓசையின்றி அமர வேண்டும்.

உடம்பை முழுவதும் தளர்த்திக் கொண்டு,

முதுகெலும்பை நேராக வைத்து, ஓசையின்றி அமைதியாய் உட்காரவேண்டும்.

உடலின் அனைத்து விதமான அசைவுகளையும் நிறுத்திவிட வேண்டும்.

மெதுவாகவும், ஆழமாகவும், எந்தவித கிளர்ச்சியும் இல்லாமல் நீங்கள் சுவாசியுங்கள்.

உங்கள் சுவாசத்தை நீங்கள் பேசாமல் அமைதியாய் கவனியுங்கள்.

கண்களை அழகாய் மூடிக்கொண்டு கேளுங்கள்.

கண்ணிமைகள் மிருதுவாய் கண்களை மூடி விடட்டும்.

கண்களில் எந்தவித அழுத்தமும் இல்லாமல், இமைகளை இறக்கி கண்களை மூடுங்கள்.

பின்பு தலை மற்றும் முகம் ஆகியவற்றின் தசைகள் அனைத்தையும் தளர விடுங்கள்.

சிறு குழந்தையின் முகத்தைப் போன்று தளர்வாய் இருக்கட்டும்.

அனைத்தையும் நீங்கள் பூரணமாய் இளைப்பாறலுக்குள் விட்ட கணத்தில்,

உங்களுடைய சுவாசம் தானாய் இறுக்கம் தளரும்.

சுயமாய் அது அமைதியாகும்.

இரண்டாவது...

சுற்றிவர இருக்கும் பகுதிகளிலிருந்து வரும் அத்தனை ஓசைகளையும் அமைதியாக கேளுங்கள்.

ஆனால் கேட்கும் எந்த சத்தத்திற்கும் எதிர் வாதம், எதிர் இயக்கம் ( Reaction ) அடைய வேண்டாம்

அந்த சப்தத்திற்கு எந்தவிதமான சிந்தனையும் தரவேண்டாம்.

வெறும் சாட்சியாளனாய் இருந்து சத்தங்களை கேளுங்கள்

பறவையின் குரலைக் கேளுங்கள்,

மரத்தை அடித்துச் செல்லும் காற்றோசையை கேளுங்கள்,

குழந்தையின் அழுகுரலைக் கேளுங்கள்,

மேல் கீழாக நகரும் சுவாச சலனத்தையும்,

இதயத்துடிப்பையும் கேளுங்கள்.

பத்து நிமிடம் கேளுங்கள்.

வேறொன்றுமே செய்து விடக் கூடாது.

கேளுங்கள்...

படிப்படியாய்,

உங்களுக்குள் சாந்தத்தின்,

அமைதியின் ரீங்காரம் துவங்கும்.

புத்தி அமைதியாகிறது.

 கேளுங்கள் புத்தி சாந்தமாகிக் கொண்டிருக்கிறது...

புத்தி சாந்தமாகிவிட்டது,

புத்தி முற்றிலும் சாந்தமாகி விட்டது.

ஆழ்ந்த அமைதி உள்ளே உள்ளது.

ஆழ்ந்த சாந்தம் உள்ளே உலவுகிறது,

அதைக் கேளுங்கள்.

புத்தி சாந்தமாகிக் கொண்டிருக்கிறது.... கேட்டுக் கொண்டேயிருங்கள்...

புத்தி ஓசையே அற்ற அமைதிக்குள் நுழைகிறது ... !!!
Share:

குசா தோப்புக் கரணம் பயன்கள்

குசா தோப்புக் கரணம்

 உடலின் 72000 நாடிகளையும் வளப் படுத்தும் குசா தோப்புக் கரணம்.

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும்.


வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம்.

இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும்.

இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம்.

குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம்.

உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை.

ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும்.
இது மிக முக்கியமான விதி முறையாகும்.

வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே.

உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம்.

இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள்.

ஆனால், இங்கு குறிப்பிட்டது போல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும்.

சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம்.

பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம்.

சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும்.

பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.

அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.
Share:

என்றும் இளமையோடு வாழ #திருமூலர் கூறும் எளிய வழி!

என்றும் இளமையோடு வாழ #திருமூலர் கூறும் எளிய வழி! 

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், #உஷ்ணம், #காற்று, #நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.


உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

#கண் பார்வைக் கோளாறுகள்,
#காதுகேளாமை,
#சுவையின்மை,
#பித்த நோய்கள்,
#வாய்ப்புண்,
#நாக்குப்புண்,
#மூக்குப்புண்,
#தொண்டைப்புண்,
#இரைப்பைப்புண்,
#குடற்புண்,
#ஆசனப்புண்,
#அக்கி, #தேமல், #படை,
#தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
#மூத்திரஎரிச்சல், #கல்லடைப்பு,
#சதையடைப்பு, #நீரடைப்பு,
#பாதஎரிச்சல், #மூலஎரிச்சல்,
#உள்மூலம், #சீழ்மூலம், #ரத்தமூலம், #ரத்தபேதி, #பௌத்திரக்கட்டி,
சர்க்கரைநோய், இதயநோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.
Share:

Don't watch TV Serials

அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !


டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல்,
சோக இசைகள் மற்றும்
சாவு மேளதாளம் இசைகள்
இவையெல்லாம்
உங்கள் வீட்டில் இருக்கும்
லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்து கெடுத்துவிடும்.

இதனால்
அபசகுணமான
நிகழ்ச்சிகளின் காட்சிகள் TVக்குள் நடந்தாலும்
அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள்
நமது வீட்டிற்குள்ளேயே
நடப்பதால்
குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.

இதனால்
பல நோய்கள் வரலாம்
வீட்டில் பணம் தாங்காமல் போகலாம்,
வீண் செலவுகள் ஏற்படலாம்
தொழில் நஷ்டம் ஏற்படலாம்,
என்று இப்படி பட்ட
அதிர்ச்சி தரும் ஆன்மீக  ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..

அதை சமயம்
ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்
அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி
ஆய்வு முடிவுகள் மிகவும்  அபாயகரமானதாக உள்ளது.

ஆம்
உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்
அதிர்ச்சி ரிப்போர்ட்...

இதனால்
கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து
மன இறுக்கம்
மன அழுத்தம்
மன நோய் வந்து...
உடல் எடை அதிகரித்து....
இதன் தொடர்ச்சியாக...
சர்க்கரை வியாதி
மாரடைப்பு இருதய கோளாறு,
ரத்த அழுத்தம்,
கழுத்து எலும்பு தேய்மானம்
தலைசுற்றல் தலைவலி
மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...

இதற்கு எல்லாம்
முக்கியமாக'  காரணம்....
பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது,

கணவன் மனைவிக்குள்
ஒருவரை ஒருவர் ஏமாற்றி
கள்ளக்காதல் தொடர்பு எப்படி என்று கற்றுக்கொடுக்க படுகிறது....

குடும்பத்தினருக்குள்
மாமியார் மருமகள் சண்டை,
அண்ணன் தம்பி சண்டை
சந்தேகப்படுவது,
சகுனி வேலை பார்ப்பது,
எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.

எப்படி லஞ்சம் பெறுவது!!!
கற்றுக் கொள்ளலாம்

அதோடு
நேர்மையான அரசு அதிகாரிகளை
எப்படி லஞ்சம் வாங்கியது போல்
திட்டமிட்டு மாட்டி விடுவது என்றும் கற்றுக்கொடுக்க படுகிறது

பிறர் தொழிலை எப்படி கெடுப்பது
எப்படி நம்பிக்கை துரோகம் செய்வது
என்பது எல்லாம்  காண்பிக்கப்பட்டு
மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விட
பெரிய பேரிழப்பு

உங்கள் அருமை குழந்தைகளின் விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...

இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும்
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட
சுய லாபத்துக்காக இப்படி பட்ட  மக்களைச் சீரழிக்கும்
டிவி சீரியல்கள் தயாரித்திட முக்கியத்துவம் தருகிறது..

தயவுசெய்து மக்களே,
இது போன்ற கேவலமான நாடகங்களைப்  புறக்கணியுங்கள்..
நாம் புறக்கணித்தால் தானே TRP ரேட்டிங் குறைந்தால்
தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள்

நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா தான்

எனவே உங்கள் விலைமத்ப்பில்லா
ஓய்வு நேரத்தை
அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்

குறைந்த நேரம்
நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள்
மற்ற நேரங்களில்
நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.. .
கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில்
பிறருக்கு நன்மை செய்யும் நல்ல
காரியங்களிலும் ஈடுபடுங்கள்

இல்லையேல் வரும் பலன்களை
நல்லதோ கெட்டதோ
நீங்கள் தான் அவற்றை TV பார்த்து
உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து
அனுபவிக்க தயாராகுங்கள்.....

அல்லதை விடுத்து நண்பர்களே
நல்லதை பாருங்கள் , கேளுங்கள்
பேசுங்கள், சிந்தியுங்கள்
வாழ்வில் எல்லாம் நல்லதாய்
நடக்கும் ........

வாழ்க வளமுடன் & நலமுடன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நம்மை சுற்றி நடப்பனவற்றுக்கு
நாமே பொறுப்பு........

எண்ணம் போல் வாழ்க்கை
==========================

Share:

குண்டலினி சக்தியை எழுப்புவ தற்காக சித்தர்கள் சொன்ன உண்மை ரகசியங்கள்


குண்டலினி சக்தியை எழுப்புவ தற்காக

சித்தர்கள் சொன்ன உண்மை ரகசியங்கள் !!!



---------------------------------------------------------------
குண்டலினி எழுந்தால் என்னவாகும்?-----------------------------------------------------------
குண்டலினி என்பது நமக்குள்புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும்,அது பாம்பைப் போல மூன்றரை சுருளாகசுருண்டு நமது மூலாதாரத்தில்புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்தகுண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது,இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன்மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒருஅனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிடமுடியும் என்கின்றனர் சித்தர்கள். குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர்,நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவுஒன்றினை பார்த்துவிடுவோம். நமதுஉடலானது எழுபத்தி இரண்டாயிரம்நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும்,இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில்இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில்விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும்குண்டலினியை கவனிப்போம்.குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்தநிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினைசீண்டினால் என்ன ஆகும் சீறிக்கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்புஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அதுமூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கிகிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிறகுண்டலினி சக்தியானதுமூலாதாரத்திலிருந்து மேலே பயணித்துதுரியம் என்கிற உச்சந்தலை வரைகொண்டுவரலாம் என்கின்றனர். இந்ததுரியத்திற்கு குண்டலினியை கொண்டுவந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதைகாகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.இப்படி குண்டலினியை மூலாதாரத்தில்இருந்து உச்சந்தலையான துரியத்திற்குகொண்டு வந்தால் என்னவாகும்?அந்த அனுபவத்தை கொங்கணவர்பின்வருமாறு விளக்குகிறார்.உணர்வற்று வுடலற்று யோகமற்றுயோடுவது மாடுவது மிரண்டுமற்றுபணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்றுசொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்றுநிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போகநேராக குண்டலியை நிலைத்துப் பாரே.- கொங்கணவர் -உணர்வற்று, உடலற்று, யோகமற்று,ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று,பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகியஇரண்டும் அற்று லெச்சை, கூச்சம்,சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று,நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும்புத்தியும் லயித்து போகவேண்டும் என்றுஎண்ணினால் குண்டலி யோகத்தை செய்என்கிறார் கொங்கணவர்.இப்போது குண்டலினியை எழுப்பி மேலேகொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில்மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொருநிலையாக உயர்த்திட வேண்டுமா?குண்டலினியும் நாடியும்!!
-----------------------------------------

குண்டலினி பற்றிய அடிப்படைதகவல்களைத்தான் இது வரையில் நாம்பார்த்திருக்கிறோம். 
குண்டலினி என்பதுஎன்ன?, அது எங்கே இருக்கிறது?,எப்படிஇருக்கிறது?, என்னவெல்லாம் செய்யக்கூடியது? என்பது மாதிரியான விவரங்களைஇதுவரை பார்த்திருக்கிறோம்.

இனி அடுத்த கட்டமாக இந்த குண்டலினியைஎழுப்புவது, அதன் செயல்பாடுகள்,விளைவுகள், அனுபவங்கள் குறித்து பார்க்கவேண்டி இருக்கிறது.அதற்கு முன்னால் இடைச்செருகலாய் இந்தபதிவினை வாசித்து விட வேண்டுகிறேன்.நேற்றைய பதிவில் நமது உடலில் எழுபத்திஇரண்டாயிரம் நாடிகள் இருப்பதாக ஒரு வரித்தகவலை பகிர்ந்திருந்தேன். இப்போது இந்தநாடிகளைப் பற்றிய சிறிய அறிமுகம்இப்போது அவசியமாகிறது.நாடி என்கிற தமிழ் வார்த்தைக்கு நாடுதல்,நோக்குதல் போன்றவை நேரடிஅர்த்தமாகிறது. நமது உடலின் தேவைகளைநாடுவதால் கூட இவைகளுக்கு நாடி எனபெயர் வந்திருக்கலாம். கொஞ்சம் புரிகிறமாதிரி சொல்வதானால் நவீன அறிவியல்சொல்லும் நரம்பு மண்டலத்தை இந்தநாடிகளுக்கு இணையாகச் சொல்லலாம்.ஆனால் நரம்புகளைப் போல இவற்றைநேரடியாக பார்க்க முடியாது என்றும் இவைசூட்சுமமானது என்கின்றனர்.மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம்நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தர்பெருமக்கள் கூறியிருக்கின்றனர். இன்னும்விரிவாக சொல்ல வேண்டுமெனில், தலையில்7000ம் நாடிகளும், வலது கண்ணில் 2000ம்நாடிகளும், இடது கண்ணில் 2000ம்நாடிகளும், மூக்கில் 3330 நாடிகளும், வலதுகாதில் 1500 நாடிகளும், இடது காதில் 1500நாடிகளும், பின்கழுத்தில் 1000ம் நாடிகளும்,பின்னங் கழுத்தின் கீழே 8000ம் நாடிகளும்,முதுகில் 3680 நாடிகளும், கண்டத்தில் 1000ம்நாடிகளும், நாபியில் 8990 நாடிகளும், வலதுகையில் 1500 நாடிகளும், இடது கையில்1500 நாடிகளும், விலாப் பகுதியில் 3000ம்நாடிகளும், கால்களின் இடுக்கில் 8000ம்நாடிகளும், பிஜத்தின் கீழே 2000ம் நாடிகளும்,பிஜத்தின் மேல்2000ம் நாடிகளும், கோசத்தில்13000ம் நாடிகளும், பாதத்தில்1000ம் நாடிகள்என ஆக மொத்தம் 72000ம் நாடிகள்இருக்கின்றதாம்.இவற்றில் பத்து நாடிகளை சித்தர் பெருமக்கள்முக்கியமானவைகளாகச் சொல்கின்றனர்.அவைபிங்கலை, இடங்கலை, சுழுமுனை, சிகுவை,காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை,சங்கினி, குரு என்பதாகும்.பிங்கலை என்பது வலது நாசியிலும்,இடங்கலை என்பது இடது நாசியிலும்,சுழுமுனை என்பது இவை இரண்டிற்குநடுவிலும், சிகுவை என்பது உள்நாக்கிலும்,காந்தாரி என்பது இடது கண்ணிலும், புருடன்என்பது வலது கண்ணிலும், அத்தி என்பதுவலது காதிலும், அலம்புடை என்பது இடதுகாதிலும், சங்கினி என்பது பிறப்புஉறுப்பிலும், குரு என்பது ஆசனவாயிலிலும்ஓடுகிறதாம்.இப்படி பின்னிப் பினைந்து ஓடும் இந்தஎழுபத்தி இரண்டாயிரம் நாடிகளில்தான் நமதுஉயிர்சக்தி இயங்கிக் கொண்டிருப்பதாக சித்தர்பெருமக்கள் கூறுகின்றனர். இந்த நாடிகள் ஏழுமையங்களில் இணைந்து பிரிந்துசெல்கிறதாம். இவற்றையே சித்தர்கள் ஆதாரமையங்கள் என்கின்றனர். இந்த ஏழு ஆதாரமையங்கள்தான் நமது உடலை இயக்கிக்கொண்டிருக்கின்றன. இவைமூலாதாரத்திற்கும், உச்சந்தலையானதுரியத்திற்கும் இடையே உடலின் ஊடாகஅமைந்திருக்கின்றன.இது பற்றி காகபுசுண்டர் பின் வருமாறுவிளக்குகிறார்.உச்சிதலை நெற்றிவிழி புருவமத்திஉரச்சங்கு மார்புநெஞ்சு உந்திமூலம்பிச்சிகலை யிடுப்பின் கீழ் முழங்கால் பாதம்பெரும்பாடு விரல் நகக்கண் வாசிபாயகச்சிலை சொன்னாரோ முத்தர் சித்தர்கால்வாசி கால்யோகம் காணாப்பித்தர்கொச்சிநரை சொல்லவில்லைவெளுத்தமார்க்கம்குண்டலியைக் கண்டாக்காற் கருக்கும்பாரே.- காகபுசுண்டர் -1.மூலாதாரம் 2.சுவாதிஷ்டானம்3.மணிபூரகம் 4.அநாகதம் 5.விசுத்தம்6.ஆக்ஞேயம் 7.துரியம் என்பதே இந்த ஆதாரமையங்கள். இவை மனித உடலில் முறையே1.மூலம் 2.தொப்பூழ் 3.மேல்வயிறு4.நெஞ்சம் 5.மிடறு 6. புருவநடு7.உச்சந்தலை என ஆறு இடங்களில்அமைந்திருக்கிறது.இதுவரை நாடிகள் மற்றும் அவைகுவிந்திருக்கும் ஆதார மையங்கள் பற்றியஅடிப்படை தெளிவுகளைப் பார்த்தோம். நமதுகுண்டலினியானது இந்த ஆதார மையங்களின்ஊடாகவே பயணிக்க வேண்டியிருப்பதால்நாடிகளைப் பற்றிய ஆரம்பத் தெளிவு வேண்டிஇந்த பதிவினை இடைச் செருகலாய்பகிர்ந்தேன்.குண்டலினியும்... சாதகனும்!
---------------------------------------------

குண்டலினி என்பது மாயமோ, மந்திரமோஇல்லை. அது ஒரு வகையான உள்நிலைஉளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்துகொள்ள முயற்சிப்பதில்தான் இதன்செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல்சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமதுஉடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலைமாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம்.உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிறவார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.குண்டலினியை எழுப்பிட பல்வேறுஉத்திகளை நமது முன்னோர்கள்சொல்லியிருக்கின்றனர்.அது பற்றி பின்னர்பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற்கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர்பெருமக்கள் விரிவாகவே கூறியிருக்கின்றனர்.குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன்முதலில் மெய்யான குருவினை கண்டறியவேண்டும். இதற்கு அவன் ஆசைகளைகுறைத்தவனாக இருப்பது மிகவும்அவசியமாம். தீவிரவைராக்கியமுள்ளவனாகவும் இருக்கவேண்டும். சுத்தமான மனமுள்ளவனும்,மனத்தின் ஆவேசமான ஆசைகளைத்துறந்தவனை மெய்யான குரு தானாகவேஅண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரேமுன்னின்று அரவனைத்து வழி நடத்துவார்.இத்தகைய குருவின் வழிகாட்டுதலில்பயிலும் சாதகனே குண்டலியைஎழுப்புவதால் உண்டாகும் முழுப்பலனையும் அடைவான் என்கின்றனர்.நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஆசனம்,பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால்மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன்இடறி விழுந்து தன்னையே கெடுத்துக்கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏறஅவன் சக்தியற்றுப் போவானாம். இதுவே,சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள்(குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும்காரணமாய் அமையும் என்கின்றனர்.யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை.ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்கவேண்டும். பயிற்சியின் பூரண அறிவுஇரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்கஆசிரியன் அவசியம். கடைசியாகநிதானமானதும் குண்டலினிஎழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில்பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை)உண்டாகும். ஆதலால் சாதகன்ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்தஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகிவிடுவான்.குண்டலினி பயிற்சியைப் போலவே அந்தசம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்கவேண்டியது மிக அவசியம். குண்டலினிபற்றிய விபரங்களோ விளக்கங்களோமுழுமையாக தெரியாதவர்கள் இதில்வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டேஇத்தனை நீளமாக குண்டலினி பற்றியஅறிமுகத்தினை பகிர நேர்ந்தது.குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்!
----------------------------------------------------------------------

மூலாதாரத்தில் புதைந்திருக்கும்குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள்கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில்பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி,ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால்குண்டலினியை எழுப்ப முடியுமாம்.இராஜயோகிகள் சலனமற்றதியானத்தினாலும், மனப்பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.சாமான்யர்கள் பக்தி அதாவதுமுழுமையான சரணாகதியின் மூலம்எழுப்புகின்றனர்.ஞானிகளோ பிரித்து அறியும் மனஉறுதியினால் எழுப்புகின்றனர். இதைவிவேக வைராக்கியம் என்கின்றனர்.தாந்திரிகர்கள் மந்திர சக்தியால்குண்டலினியை எழுப்புகின்றனர்.இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒருமுறையும் இருக்கிறது. அதாவது குருவினைபார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப்படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால்சட்டென குண்டலினி எழும்பும். இத்தகையதகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும்குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதைஎல்லோருக்கும் அருளுவதுமில்லை.ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியைஎழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது.எனினும் நமது உடல் மற்றும் மனப்பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவுசெய்ய குருவினால் மட்டுமே முடியும்.அவரே நமக்கு சரியான வழி எது என்பதைஉணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால்குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம்இல்லாத எளிதான காரியம்தான்.அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்தஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டுசெல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொருநிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம்வரை கொண்டு செல்வது அத்தனை எளிதானசெயல் இல்லை. மிகுந்த பொறுமை,விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சிஉள்ளவர்களுக்கு மட்டுமே இதுசாத்தியமாகும். அவர்களுக்கே எல்லாசக்திகளும் சித்திக்கும்.எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொருஆதார மையத்தையும் அடையும் போதுஅந்த மையம் திறக்கிறது. இது மெல்லமெல்லவே நிகழுமாம். அப்போது தாமரைவடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்தசக்தி மையம், தலை அல்லது முகம்மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம்மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்தஅதார மையங்களை சக்கரம் என்றுஅழைப்போம்.எழும்பிய குண்டலினியானது ஒவ்வொருசக்கரத்தையும் கடந்து செல்லும் போதுஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்திவெளிப்படுகிறது. அப்போது ஏற்படும்சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.குண்டலினி...சுவாசம்...ஆசனம்!!
---------------------------------------------------

நமக்குள் உறைந்திருக்கும் குண்டலினியைவிழித்தெழச் செய்ய நான்கு வழி வகைகளைநமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.அவை கரும யோகம், பக்தி யோகம், ஞானயோகம், கிரியா யோகம் எனப்படும். இவைஒவ்வொன்றும் தனித்துவமான வழிவகைகள்.ஒவ்வொருவரின் உடல் மற்றும் மனப்பக்குவத்திற்கு ஏற்ப தெரிந்தெடுத்துபழகலாம். இவை ஒவ்வொன்றையும் விரிவாகவிளக்கப் புகுந்தால் பதிவின் நோக்கம் திசைதிரும்பிவிடும். ஆகையால் தொடரின் நெடுகேஅடிப்படைகளை மட்டும் தொட்டுச்செல்வோம்.தன்னை உணர ஆரம்பிப்பதே இந்த குண்டலினியோகத்தின் முதல் நிலை. இதை நாம்பலவிதமாக புரிந்து கொண்டிருக்கிறோம்.கண்ணாடியில் முகம் பார்த்து, மேனியைபராமரிப்பதையும், நோய் வாய்ப்பட்டால்அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதையுமே தன்னை உணர்தல் என்பதாகபலரும், தனக்கும், தன் சுற்றத்துக்கும்தேவையானவைகளை சேகரித்து வைப்பது,அதனை பாதுகாப்பது போன்றவைகளையேதன்னை உணர்தல் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். இவை எல்லாமே உடல்அல்லது புறம் சார்ந்த கவனிப்புகள் அல்லதுஅறிதல்கள்.நமது உடலின் அடி நாதமாய் ஓடிடும்மூச்சுக் காற்றை நம்மில் எத்தனை பேர்கவனித்திருப்போம். உண்மையில் தன்னைஅறிதல் என்பதே நமக்குள் ஓடிடும்மூச்சினை கவனிக்க ஆரம்பிப்பதில்தான்துவங்குகிறது. தானாய் உள்ளே வருகிறது,அதுவாகவே வெளியே போகிறது எனதொடர்ந்து நடக்கிற செயல்தானே என நாம்அலட்சியப் படுத்திவிடுகிறோம். உண்மையில்நமது மகத்துவமே இந்த மூச்சில்தான்அடங்கி இருக்கிறது.சுவாசம் எனப்படும் இந்த மூச்சு ஒரு சீரானதாளகதியில் நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது. கவனிக்க ஆரம்பித்தால்மட்டுமே அது புரிய ஆரம்பிக்கும். சாதாரணநிலையில் நடக்கும் சுவாசத்திற்கும், உடல்அல்லது மனம் வருந்த ஒரு செயலைசெய்யும் போது விடும் சுவாசத்திற்கும்வித்தியாசம் இருப்பதை நாம் அறிவோம். இந்ததாள கதியை கவனிக்க ஆரம்பித்தலே முதல்நிலை. சுவாசத்தின் இந்த லயத்தை கவனிக்ககவனிக்க நமக்குள் மாற்றங்களை உணரமுடியும்.சித்தர் பெருமக்கள் நான்கு வகையான சுவாசமுறைகள் இருப்பதாக கூறுகின்றனர். அவைஉயர் சுவாசம், மத்திம சுவாசம், கீழ் சுவாசம்,முழுமையான சுவாசம். இது பற்றி விரிவாகதனி பதிவொன்றில் பார்ப்போம். இவற்றுள்நமது சுவாசம் எத்தகையது என்பதைஉணர்ந்து அவற்றை முழுமையானசுவாசத்திற்கு உயர்த்திட வேண்டும்.இப்போது ப்ராணயாமம் பற்றிய நினைவுகள்உங்களுக்கு வரலாம். வரவேண்டும் என்பதன்பொருட்டே இதனை விளக்கிக்கொண்டிருக்கிறேன்.அடிப்படையில் குண்டலினி என்பது மாயமோமந்திரமோ இல்லை ஒரு வகையானபயிற்சிதான்... முழுமையான சுவாசத்தைஅறிந்து தெளிந்து பின் அதனை கவனிக்கஅதன் லயம் புலப்படும், அந்த லயத்தினைகவனிக்க மனம் அதில் ஒடுங்கும்.கவனச்சிதறலுடன் இருந்த மனம் குவியும்.சுவாசத்தில் மனம் ஒடுங்க ஒடுங்கஉண்டாகும் மாற்றங்களே குண்டலினிபயிற்சியின் ஆரம்பநிலைக்கு நீங்கள் தயாராகிவிட்டதை உணர்த்தும். இதுதான் அடிப்படை,இது சிரமமான வேலையும் இல்லை.ஆர்வமும், உழைப்பும், வழிகாட்டுதலும்உள்ள எவருக்கும் எளிதாக வாய்க்கும்.குண்டலினி பயிற்சியை செய்ய துவங்கும்சாதகன் முதலில் தனிமையான இடத்தைதெரிவு செய்தல் வேண்டும். தனி அறையாகஇருந்தால் அமைதியாக அமர்ந்து செய்யவசதியாக இருக்கும். தோட்டம், புல்தரை,வனப்பகுதி, நீர் நிலைகளை அண்டியபகுதிகள், பூஞ்செடிகள் மற்றும் ஜீவசமாதிஉள்ள இடங்களும் சிறப்பானதே.அடுத்து ஆசனங்கள். இந்த பயிற்சியைசெய்திட எல்லா வகையான ஆசனங்களைபயிற்சி செய்ய வேண்டும் என்கிற அவசியம்இல்லை. தளர்வாகவும், வசதியாகவும்அமர்ந்து செய்யக் கூடிய ஆசனங்களைதெரிந்து பயன்படுத்துவது அவசியம்.சாதாரணமாய் நாம் உட்காரும் முறையானபத்மாசனம் போதுமானது. உட்காருவதுகடினமாய் உணர்பவர்கள் சுகாசனத்தில்அமர்ந்து செய்யலாம்.குண்டலினியும் முன் தயாரிப்பும்!
-----------------------------------------------------

குண்டலினி யோகத்தை துவங்குவதற்குதேவையான முன் தயாரிப்புகளையேஇத்தனை நாளாக பார்த்துவந்திருக்கிறோம்.அந்த வரிசையில்தனிமையான,அமைதியான சூழலில்பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்துஇந்த பயிற்சியினை துவங்கிடலாம் என்பதுவரை நேற்றைய பதிவில் பார்த்தோம்.பத்மாசனத்தில் அமரும் போது முதுகுத்தண்டானது நிமிர்ந்து இருப்பதால்சுவாசமானது மூலாதாரத்தில் இருந்துதுரியம் வரை தடையின்றி செல்லும்என்கின்றனர்.மேலும் பத்மாசனத்தில் அமரும்போது நீண்ட நேரம் சோர்வின்றி அமர்ந்திருக்கமுடியும்.மேலும் இப்படி அமரும் போதுவிரல்களில் சின் முத்திரை அல்லது ஞானமுத்திரை வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது ஆசனம் தயாராகிவிட்டது. அடுத்தநிலை சுவாசத்தை கவனிக்கஆரம்பிப்பதுதான், சிலர் சொல்வது போலதினமும் இத்தனை நிமிடங்கள்அமர்ந்திருந்தால் போதுமானது என்பதில்எனக்கு உடன்பாடில்லை, சித்தர்களும்அத்தகைய நேரக் கட்டுப்பாட்டினைவரையறுக்க வில்லை. நம்மால் எத்தனைநேரம் கவனம் குவித்து சுவாசத்தை கவனிக்கமுடியுமோ அத்தனை நேரம் செய்வதுசிறப்பு.ஆரம்ப நாட்களில் சுத்தமாய் உங்களால்சுவாசத்தை கவனிக்கவே முடியாது. அப்படியாராவது கவனிக்க ஆரம்பித்து விட்டேன் எனயாரும் சொன்னால் அதை நம்பவும்கூடாது.மனம் நிறையவே அலைபாயும், அதுஎங்கெல்லாம் போகிறது என்பதை கவனிக்கஆரம்பியுங்கள், மனம் தானாய் உங்களைநோக்கி மீண்டு வரும். அப்படி வரும் போதுசுவாசத்தை கவனிக்க சொல்லுங்கள். கவனம்குவியும். வலிந்து செய்வதை காட்டிலும்இது மிக எளிய உத்தி!வெறுமனே சுவாசத்தை மட்டும் கவனித்தால்போதுமானது, எதுவும் அற்புதம் நிகழும்என்றெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது.உடலை, மனதை, சுவாசத்தை தளர்வாக்கவேஇந்த பயிற்சி. நாட்கள் செல்லச் செல்ல சிலமாற்றங்களை உணரத் துவங்குவீர்கள். இதனைவார்த்தைகளால் விவரிப்பது கடினம்.என்னுடைய அனுபவத்தைச் சொல்லவேண்டுமெனில் ஒரு உள்ளார்ந்த அமைதிஉண்டாகும். அது நமக்கு பிடித்தமானதாகஇருக்கும்.இந்த நிலையில்தான் குண்டலினியை பற்றியோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.இனி நமது செயல்திட்டம் இரண்டுகட்டங்களை உள்ளடக்கியது. முதலில்குண்டலினியை விழித்தெழச் செய்வது,அடுத்து அவற்றை அடுத்த அடுத்த ஆதாரமையங்களான சக்கரங்களை நோக்கிநகர்த்துவது அல்லது உயர்த்துவது.இது மூலாதாரம் துவங்கி துரியம் வரை ஆறுநிலைகளில் நடைபெறும். ஒவ்வொருசக்கரமும் மலரும் போது அதற்கானபலன்களை நாம் உணரத் துவங்குவோம்.இந்தப் பயணத்தில் உடல் ரீதியான சிலபிரச்சினைகளையும் நாம் எதிர் கொள்ளவேண்டியிருக்கும்.

Share:

Tender Coconut Use/இளநீர்

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!

குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்”.
Share:

The Law of the Garbage Truck

இதைப் படியுங்கள்.... உங்கள் வாழ்க்கையே மாறலாம்...

குப்பை வண்டி விதி’ தெரியுமா? - The Law of the Garbage Truck

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.

ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ, அல்லது கொடுமைகளை செய்தாலும்  பதிலுக்கு நீங்களும் தாக்குதல் நடத்த வேண்டாம், வார்த்தை யுத்தத்திலும் இறங்காது ...........😌🌲🌺🌲.ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம்.🙏�🌲🌺🌲 அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம்.🙏�🌲🌼🌲 இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது. 🎄🌺🎄வாழ்க வளமுடன்!          வளர்க நல்ல எண்ணங்களுடன்!🙏�🙏�🙏�🙏�🙏�🙏�  🌲🌺🎄🌼🎄🌺🌲

🍀♻🍀♻🍀♻🍀♻
Share:

தமிழனின் விவசாயம் எங்களுக்குத் தேவை!!!

“#தமிழனின் விவசாயம் எங்களுக்குத் தேவை!” 

ஒரு படிக்காத தமிழ் விவசாயியை அழைத்துச் சென்ற #அரசாங்கம்!

ஈரோடு மஞ்சள் உற்பத்திக்கு பெயர் போனது. சத்தியமங்கலம் அடுத்த வேடசின்னானுர் கிராமத்தைச் சேர்ந்த  #ராமமூர்த்தி குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வேளாண் துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று மஞ்சள் உற்பத்தி தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இந்தியா வந்தது. அவர்களை வேளாண்துறை அதிகாரிகள் ராமமூர்த்தியிடம் அழைத்து வந்தனர்.

அந்த குழுவினருக்கு முழு ஒத்துழைப்பை ஆர்வத்துடன் அளித்தார் ராமமூர்த்தி. இதனால் உற்சாகத்தில் நெகிழ்ந்த தாய்லாந்து விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகள்,  தங்கள் நாட்டிற்கு ராமமூர்த்தியை அழைத்தனர்.

அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்ட நிலையில், அங்கு நேரில் சென்று அவர்களுக்கு மஞ்சள் சாகுபடி பற்றிய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.

பயணம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தாய்லாந்தின் சிங்கராய் மாகாண கவர்னர் நேரடியாக விமான நிலையம் வந்து, ராமமூர்த்திக்கு பூங்கொத்து கொடுத்து, மகிழ்ச்சியோடு வழி அனுப்பி வைத்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில் இதுவரை மஞ்சள் விவசாயம் இல்லாத நிலையில், ராமமூர்த்தி அந்நாட்டு வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்.

8வது வரை மட்டுமே படித்த தனக்கு இந்த பெருமையை தேடிக் கொடுத்தது, எங்கள் குடும்பம் செய்து வந்த விவசாயம் தான் என அந்த ராமமூர்த்தி பெருமையுடன் கூறியுள்ளார்...
Source: Liveday
#ராஜா

Share:

Advertisement

Facebook

லேபிள்கள்

In Tamil World

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

வலைப்பதிவு காப்பகம்

Main Tags

லேபிள்கள்

வலைப்பதிவு காப்பகம்